search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddhanpatti pond"

    • கருமாண்டிசெல்லிபாளையம் சித்தன்பட்டி குளம் நீர் வழிப்பாதைகளை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
    • அப்போது நீர் வழி பாதைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    பெருந்துறை:

    கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி காஞ்சிகோயில் சாலையில் சித்தன் பட்டி குளம் உள்ளது. இந்த குளத்திற்கு சீலம்பட்டி, எல்லப்பாளையம், ஒண்டிப்புலியங்காடு, மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இருந்து மழை நீர் வடிந்து குளத்திற்கு வருமாறு நீர்வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த நீர்வழிப் பாதைகள் அடைக்கப்பட்டு கடந்த 3 முறை பெய்த மழை நீர் வீணாகி போனது. இது குறித்து பொதுமக்கள் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ.விடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நீர் வழி பாதைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின்போது பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் செயலாளர் கே.எம். பழனிசாமி, பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே. செல்வராஜ், பெருந்துறை பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம், வார்டு செயலாளர் ராஜா, கே.பி.எஸ். மோகன் குமார்,

    என்.எஸ்.கே. சக்திவேல், எஸ்.ஆர். வி.சாமிநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபால், ரகு, எல்லப்பாளையம் நடராஜ்,

    காலனி துரை, டீக்கடைத்துரை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் பொதுமக்களும் உடன் இருந்தனர்.

    ×