search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WATERWAYS"

    • மழைநீர் செல்ல வழிவகை செய்யாமல், நீர் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்ததுள்ளனர்.
    • அரசிடம் அனுமதி பெறாமல் சுமார் 100 மீட்டருக்கு மேல் நீர் வழி தடத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சிப் பகுதியில், கோவை திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனியார் கட்டடத்திற்கு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள நீர் வழித்தடம் தனியார் சிலரால் மண் கொட்டி மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து வந்த புகாரின் பேரில் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது மழைநீர் செல்ல வழிவகை செய்யாமல், நீர் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், அந்த இடத்தை பார்வையிட்ட தேசிய நெடுஞ்சாலை துறை கோவை கோட்ட உதவி பொறியாளர் அழகர்ராஜா கூறுகையில்:- வழித்தடம் அமைக்க தனியார் இட உரிமையாளர்கள் அனுமதி பெறவில்லை. அரசுக்கு சொந்தமான சாலையோர இடத்தில் மண் கொட்டி வழித்தடம் அமைக்க வேண்டுமானால் நீர் செல்ல குழாய் அமைத்து, அதன் மீது அரசின் வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி வழித்தடம் அமைக்க வேண்டும்.

    இதுகுறித்து விளக்கம் கேட்டு நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார். அரசிடம் அனுமதி பெறாமல் சுமார் 100 மீட்டருக்கு மேல் நீர் வழி தடத்தை தனியார் ஆக்கிரமித்தது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • சூலூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பலர் இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.
    • சென்னையைச் சேர்ந்த அபெக்ஸ் மருந்து நிறுவனம் பணிகளை மேற்கொண்டு உள்ளது.

    சூலூர்,

    சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரும் பாதைகள் புதர் மண்டி கிடந்தது.

    இதனால் மழை காலங்களில் சூலூர் சிறிய மற்றும் பெரிய குளங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் பாதைகள் அடைபட்டு இருந்தது.

    இதனையடுத்து சூலூர் பேரூராட்சி மூலம் பொதுப்பணித்துறையினருக்கு புதர் மண்டி கிடக்கும் நீர்வழிப் பாதையை சீர் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.பொதுப்பணித்துறை அனுமதி அளித்தவுடன் சூலூர் பேரூராட்சி நிர்வாகம் சூலூர் பேரூராட்சித் தலை வர் தேவி மன்னவன் தலைமையிலும் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியோர் இணைந்து திட்ட செயலாக்க பணிகளை மேற்கொண்டனர்.

    இப்பணிகளில் சூலூர் சிறிய குளத்தில் இருந்து செங்கத்துறை வரை செல்லும் நீர் வழி பாதை, ராவத்தூரில் இருந்து பெரிய குளம் வரை வரும் ராஜா வாய்க்கால் பாதை உள்ளிட்டவை சீர்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அபெக்ஸ் மருந்து நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளது.

    இப்பணியில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் மற்றும் சூலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மன்னவன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், கோவிந்தராஜன், பேரூராட்சி துணை தலைவர் சோலை கணேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் கருணாநிதி, விஜயகுமார், மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர் சுந்தரராஜன், உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

    • சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது

    செங்கம்:

    செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நேற்று பிற்பகல் நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருப்பிடங்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது.

    குறிப்பாக கரியமங்கலம், மண்மலை, பேயாலம்பட்டு, முறையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருப்பிடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. கிராம பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ள நீர்வழி தடங்களை மீண்டும் ஏற்படுத்தி தண்ணீர் நிற்காமல் நீர் வழித்தடங்களில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கருமாண்டிசெல்லிபாளையம் சித்தன்பட்டி குளம் நீர் வழிப்பாதைகளை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
    • அப்போது நீர் வழி பாதைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    பெருந்துறை:

    கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி காஞ்சிகோயில் சாலையில் சித்தன் பட்டி குளம் உள்ளது. இந்த குளத்திற்கு சீலம்பட்டி, எல்லப்பாளையம், ஒண்டிப்புலியங்காடு, மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இருந்து மழை நீர் வடிந்து குளத்திற்கு வருமாறு நீர்வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த நீர்வழிப் பாதைகள் அடைக்கப்பட்டு கடந்த 3 முறை பெய்த மழை நீர் வீணாகி போனது. இது குறித்து பொதுமக்கள் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ.விடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நீர் வழி பாதைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின்போது பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் செயலாளர் கே.எம். பழனிசாமி, பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே. செல்வராஜ், பெருந்துறை பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம், வார்டு செயலாளர் ராஜா, கே.பி.எஸ். மோகன் குமார்,

    என்.எஸ்.கே. சக்திவேல், எஸ்.ஆர். வி.சாமிநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபால், ரகு, எல்லப்பாளையம் நடராஜ்,

    காலனி துரை, டீக்கடைத்துரை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் பொதுமக்களும் உடன் இருந்தனர்.

    • நீர் வழித்தடங்கள் முழுவதும் மண் மூடியும், மரம், செடிகள் முளைத்து புதர் மண்டியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது.
    • குடிநீர் திட்டங்களில் பாதிப்பு ஏற்படாதவாறும், குழாய் உடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண குழு அமைக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், ராஜவாய்க்கால் பள்ளம் என 10 கி.மீ., தூரம் இயற்கை நீர் வழித்தடங்களாக உள்ளன.மழைக்காலங்களில் எளிதாக வெள்ள நீர் வெளியேறும் வகையில் இருந்த ஓடைகள் ஆக்கிரமிப்புகளால் குறுகியும், சாக்கடை கழிவுநீர் வெளியேற்றும் கால்வாயாகவும், குப்பை கொட்டும் மையமாகவும் மாறியுள்ளன.

    இதனால் நீர் வழித்தடங்கள் முழுவதும் மண் மூடியும், மரம், செடிகள் முளைத்து புதர் மண்டியும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது.தற்போது நாராயணன் காலனி, கழுத்தறுத்தான் பள்ளம் பகுதிகளில் கான்கிரீட் கரைகள் அமைக்கும் பணி ஒரு சில பகுதிகளில் நடந்து வருகிறது.இப்பணி நடந்தாலும், நகரின் இயற்கை நீர் வழித்தடங்களில் புதர் மண்டியும், முட்செடிகள் முளைத்தும் காணப்படுகிறது. இதனால் மழை வெள்ள நீர் எளிதில் வடிய வழியில்லை. மழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அதோடு நகரின் பிரதான போக்குவரத்து ரோடுகளான பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளால் மூடப்பட்டுள்ளன.குடியிருப்பு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை நீர் வடிகால் தூர்வாரப்பட்டாலும், பிரதான ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக தூர்வாரப்படாமல் உள்ளது.மழை பெய்தால், வெள்ள நீர் வடிய வழியில்லாமல் சாலைகளில் ஓடியும், தேங்கியும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், ஓடைகள், மழை நீர் வடிகால்களை தூர்வார வேண்டும்.

    கிராமங்களிலும் ஓடைகள், குளம், குட்டைகளை தூர்வார வேண்டும். தாழ்வான பகுதிகளில்ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில் அப்பகுதிகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

    குளம், குட்டைகள் மற்றும் அவற்றின் நீர் வழித்தடங்களை உள்ளாட்சி அமைப்புகள் வழியாக தூர்வாரி தயார் நிலையில் வைக்க வேண்டும். பெய்யும் மழை நீரை முழுமையாக சேமிக்கும் வகையில் சிறப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.கிராமப்பகுதிகளில்தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, உரிய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, உள்ளாட்சி அமைப்புகள், மின் வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பகுதி வாரியாக சிறப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும்.

    வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளை கண்காணிக்கவும், மீட்பு பணிகளுக்கு தேவையான, ரப்பர் படகு, கயிறு, மரங்கள் விழுந்தால் அகற்ற எந்திரம், மின் துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக பராமரிப்பு மேற்கொள்ளும் வகையில், மின் வாரியத்தில் சிறப்பு அதிகாரிகள் குழு அமைக்கப்பட வேண்டும்.குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், குடிநீர் திட்டங்களில் பாதிப்பு ஏற்படாதவாறும், குழாய் உடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகள், பணியாளர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.தற்போது பருவ மழை துவங்க உள்ள நிலையில்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு துறைகளை ஒருங்கிணைக்கவும், சிறப்பு குழு அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நீர்வழித்தடங்களை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பேரளி கிராமத்தில் ஊர் ஏரி உள்ளது. அப்பகுதியில் உள்ள 2 ஏரிகளில் ஊருக்கு அருகில் உள்ளதால் இந்த ஏரிக்கு ஊர் ஏரி என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு வரை சமைப்பதற்கு இந்த ஏரியின் தண்ணீரைத்தான் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த ஏரியின் நடுவே உள்ள குடிநீர் கிணற்றுக்கு நீர் ஆதாரமாகவும், ஆயிரக்கணக்கான கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் நீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்குகிறது.

    ஊர் ஏரிக்கான நீர்வழித்தடங்கள் முறையாக சீரமைக்கப்படாததால் தேவையான அளவிற்கு ஏரியில் நீர் நிரம்பவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு மண்வெட்டியை பயன்படுத்தி சிறுவாய்க்காலை சீரமைக்க ெதாடங்கி, தொடர்ந்து ஊர் ஏரி மற்றும் கல்லேரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், நீர்வழித்தடங்களை சீரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் அப்பகுதி இளைஞர்கள் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    அப்பகுதி இளைஞர்களின் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு அலுவலர்களின் உதவியோடு ஏற்படுத்தப்பட்ட நடுப்பாதை வாய்க்காலை இளைஞர்கள் சீரமைத்து தொடர்ந்து பராமரித்து வந்ததன் பலனாகவும், மக்களும் வாய்க்காலில் ஆங்காங்கே பாலங்கள் அமைத்ததாலும் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு ஊர் ஏரி மற்றும் கல்லேரி நிரம்பி வழிந்தோடியது.

    இளைஞர்களின் விடாமுயற்சி மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 2 ஆண்டுகளாக ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. ஆனால் தற்போது பேரளி ஊர் ஏரிக்கரையில் உள்ள சுற்றுச்சுவர் ஆங்காங்கே இடிந்து விழுந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் உயரும்போது தெற்கு பகுதிக்கரையில் உள்ள துவாரம் வழியே நீர் வெளியேறுவதால் நீர்மட்டம் குறைகிறது. மேலும் ஏரிகள் நிரம்பிய பிறகு, முக்கிய வரத்து வாய்க்காலான நடுப்பாதை வாய்க்காலில் உள்ள குட்டையை உடைத்து ஓடைக்கு தண்ணீரை திருப்பும் நிலையும் உள்ளது.

    ஊர் ஏரிக்கு நீர் வரும் மற்றொரு வாய்க்காலின் குறுக்கே செல்லும் பேரளி- மருவத்தூர் சாலையில் உள்ள கற்பாலத்தை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். நடுப்பாதை வாய்க்காலில் சிமெண்டு சுவர் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இணையதளங்கள் வாயிலாகவும், கிராம சபைக் கூட்டங்கள் வாயிலாகவும் பலமுறை தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நிதி ஒதுக்கி இளைஞர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×