search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூரில் நீர்வழிப்பாதைகள் தூர்வாரும் பணி தொடக்கம்
    X

    சூலூரில் நீர்வழிப்பாதைகள் தூர்வாரும் பணி தொடக்கம்

    • சூலூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பலர் இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.
    • சென்னையைச் சேர்ந்த அபெக்ஸ் மருந்து நிறுவனம் பணிகளை மேற்கொண்டு உள்ளது.

    சூலூர்,

    சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரும் பாதைகள் புதர் மண்டி கிடந்தது.

    இதனால் மழை காலங்களில் சூலூர் சிறிய மற்றும் பெரிய குளங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் பாதைகள் அடைபட்டு இருந்தது.

    இதனையடுத்து சூலூர் பேரூராட்சி மூலம் பொதுப்பணித்துறையினருக்கு புதர் மண்டி கிடக்கும் நீர்வழிப் பாதையை சீர் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.பொதுப்பணித்துறை அனுமதி அளித்தவுடன் சூலூர் பேரூராட்சி நிர்வாகம் சூலூர் பேரூராட்சித் தலை வர் தேவி மன்னவன் தலைமையிலும் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியோர் இணைந்து திட்ட செயலாக்க பணிகளை மேற்கொண்டனர்.

    இப்பணிகளில் சூலூர் சிறிய குளத்தில் இருந்து செங்கத்துறை வரை செல்லும் நீர் வழி பாதை, ராவத்தூரில் இருந்து பெரிய குளம் வரை வரும் ராஜா வாய்க்கால் பாதை உள்ளிட்டவை சீர்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அபெக்ஸ் மருந்து நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளது.

    இப்பணியில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் மற்றும் சூலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மன்னவன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், கோவிந்தராஜன், பேரூராட்சி துணை தலைவர் சோலை கணேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் கருணாநிதி, விஜயகுமார், மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர் சுந்தரராஜன், உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

    Next Story
    ×