search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் இணைப்பு சரி செய்யும் பணி
    X

    மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள்.

    மின் இணைப்பு சரி செய்யும் பணி

    • மின்மாற்றிலிருந்து உயரழுத்த மின் கம்பி திடீரென்று நெருப்பு பொறிகளுடன் எரிந்து கீழே விழுந்தது.
    • மின்கம்பி நிழற்குடை மீது பட்டு குடை மற்றும் பழங்கள் எரிந்து சேதமடைந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகரில் பட்டமங்கலதெரு முக்கிய கடைவீதி பகுதியாகும். இந்த பகுதியில் வங்கிகள் மருத்துவமனைகள் துணிக்கடைகள் பழக்கடை கள் மற்றும் பள்ளி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதி எப்பொழுதும் மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும்.

    நேற்று அப்பகுதியில் தனியார் வங்கிக்கு எதிரே உள்ள மின்மாற்றிலிருந்து மின்சாரம் செல்லும் உயிர் அழுத்த மின் கம்பி திடீரென்று நெருப்புப் பொறிகளுடன் எரிந்து கீழே விழுந்தது. வங்கிக்கு எதிரே பழக்கடை வைத்துள்ள குணசேகரன் என்பவர் தள்ளுவண்டி கடை மீது மின் கம்பி அறுந்து விழுந்தது.

    இதில் நிழலுக்கு பயன்படுத்தப்படும் மிகப்பெரிய குடை இருந்த காரணத்தால் மின் கம்பி அதில் பட்டு குடை மற்றும் பழங்கள் எரிந்து சேதம் அடைந்தது, உடனே குணசேகரன் அலறியடித்து வெளியேறியதால் உயிர் தப்பினார்.

    தகவல் மின்சாரம் துண்டி க்கப்பட்டு அப்பகுதியில் சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதைப்போல் மார்க்கெட் பகுதி செட்டி தெரு, தர்மபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்னணு மற்றும் மின்சாரப் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது காரணமாக மயிலாடுதுறை நகரில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×