search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Concrete"

    • திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • அவ்வப்போது ஏற்படும் உடைப்பு மற்றும் கசிவால் கடைமடைக்கு தண்ணீா் செல்வதில்லை.

    காங்கயம் :

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்படும் என்ற வதந்தியை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்று கீழ்பவானி முறை நீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.

    இது தொடா்பாக பாசன விசாயிகள் கூட்டமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் கூறியதாவது:- ஈரோடு மாவட்டம், பவானி சாகா் அணையில் இருந்து அமைக்கப்பட்டுள்ள கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால், மண் வாய்க்காலாக இருப்பதால் அவ்வப்போது ஏற்படும் உடைப்பு மற்றும் கசிவால் கடைமடைக்கு தண்ணீா் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்க அரசு சாா்பில் திட்டமிடப்பட்டது. இதற்கு விவசாயிகளிடையே பெரும் எதிா்ப்பு கிளம்பியதையடுத்து கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. கான்கிரீட் தளம் அமைக்கப்படாது என்று நீா்வளத் துறை சாா்பில் அதிகாரப்பூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்படுவதாக தற்போது ஒருசிலா் வதந்திகளைப் பரப்பி விவசாயிகளை திசைத்திருப்பி வருகின்றனா். எனவே, இதுபோன்ற வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்றனா். 

    • வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
    • மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு , திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலை புனரமைக்க ஒருத்தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி இருதரப்பு விவசாயிகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எனினும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும், விவசாயம் காக்க வேண்டியும், மண் கால்வாயிகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தி அரச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள் கடை வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர்.

    அதன்படி இன்று காலையில் இருந்து அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான பிச்சாண்டாம் பாளையம், கருக்கம் பாளையம், வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அரச்சலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக ஆட்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

    புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை அப்படியே தொடர வேண்டும், கசிவுநீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அரச்சலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நத்தக்காடையூரில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • அரசாணை 276-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    காங்கயம் :

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதி வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை 276-ஐ ரத்து செய்ய கோரியும், மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பழைய கட்டுமானங்களை இடிக்க கூடாது என்றும், காவிரி தீர்ப்பின்படி நீர் நிர்வாகம் உரிய முறையில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் கீழ்பவானி பெயரல்ல - எங்கள் உயிர் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நத்தக்காடையூர், ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில் நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கீழ்பவானி பாசன விவசாயிகள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    • கிராம நிர்வாக அலுவலகம் தற்போது வரை ஓட்டு கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.
    • மழை காலங்களில் ஒழுகுவதால் அலுவலகத்தில் உள்ள கோப்புகள் நனைந்து சேதமாகிவிடுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் ஜெ. தாஹிர் தமிழக அரசு வருவாய்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த கிராம நிர்வாக அலுவலகம் தற்போது வரை ஓட்டு கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.

    இந்த கட்டிடம் மழை காலங்களில் ஒழுகுவதால் அலுவலகத்தில் உள்ள கோப்புகள் நனைந்து சேதமாகிவிடுகிறது.

    எனவே, ஓட்டு கட்டிடத்திற்கு பதிலாக புதிய கான்கிரீட் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க இயலாது.
    • கான்கிரீட் வீடு கட்டுவதற்கு குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் ராஜேந்திரன், துணை தலைவர்கள் துரைராஜ், முருகானந்தம், துணை செயலாளர் ராஜ் மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜவகர் மற்றும் சங்கர் ஆகியோர் திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்க்கொடி யிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சங்கத்தின் 32-வது மாநாடு கடந்த மாதம் 7-ந் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இதில் குடியிருப்பு மனை பட்டா இல்லாத அனைவருக்கும் அரசு உடன் மனைப்பட்டா வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அந்த வகையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 32 ஊராட்சிகளுக்கும் ஆய்வு செய்ததன் அடிப்படையில் மொத்தம் 2 ஆயிரத்து 305 பேருக்கு அரசு வீடு கட்ட அனுமதி அளித்துள்ளது.

    அவர்கள் இருக்கும் இடத்தில் பட்டா இல்லாமல் உள்ளனர்.

    ஆகையால் அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க இயலாத என்று அரசு அலுவலர்கள் கூறுகின்றனர். ஆகவே அரசு அவர்களுக்கு மனையும், பட்டாவும் வழங்க வேண்டும்.

    கூரை இல்லாத வீடு திட்டத்தை நிறைவேற்றும் வகையில் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கான்கிரீட் பெயர்ந்து சிமெண்டு கம்பிகள் வெளியே தெரியும் அளவில் காணப்படுகிறது.
    • பொருட்கள் வாங்கும் போது தொட்டி இடிந்து விழுமோ என்ற அச்சம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பனையூர் ஊராட்சி கீழப்பனையூர் கிராமத்தில் கிராம கூட்டுறவு அங்காடி செயல்பட்டு வருகிறது.

    இதில் கீழ பள்ளிச்சந்தம், திருப்பத்தூர், கீழப்பனையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    இந்த அங்காடி வாசலில் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 20 ஆண்டுகளாக உள்ளது. தற்போது இந்த தொட்டியின் நான்கு தூண்களும் சேதமடைந்துள்ளது.

    மேலும் கான்கிரீட் பெயர்ந்து சிமெண்டு கம்பிகள் வெளியே தெரியும் அளவில் காணப்படுகிறது.

    எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அங்காடிக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ? என அச்சப்படுகின்றனர்.

    எனவே சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அங்காடிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கூறியதாவது:- அங்காடி வாசலில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல ஆண்டுகளாக உள்ளது.

    இந்த தொட்டியின் தூண்கள் அனைத்தும் சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.

    இதனால் நாங்கள் பொருட்கள் வாங்கும் போது தொட்டி இடிந்து விழுமோ? என்ற அச்சத்துடன் பொருட்களை வாங்கி செல்கிறோம்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் ெதரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • இடிக்கப்பட்ட குளக்கரைப்பகுதியை கான்கிரீட் அமைத்து பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • குளக்கரையை பராமரிக்கும் சமயத்தில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருக்க வேண்டும்.

    அவினாசி:

    அவினாசியிலுள்ள தாமரைகுளத்தில் கடந்த ஒரு வாரமாக குளம் பராமரிப்பு பணிகள் நடந்தது. அப்போது கடந்த 6ம் தேதி அவினாசி சீனிவாசபுரத்திற்கு அருகில் குளக்கரையை 3 மீட்டர் அளவிற்கு எந்திரம் மூலம் வெட்டி தரைமட்டமாக்கப்பட்டது. தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு வெட்டப்பட்ட குளக்கரையை கான்கிரீட் மூலம் பலப்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே அவ்வாறு செய்வதாக உறுதியளித்த நிலையில் அந்த இடத்தில் வெறும் மண்ணை போட்டு மூடிவிட்டதாக கூறி குளம் காக்கும் இயக்கத்தினர் அவசர கூட்டம் நடத்தினர். அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    குளக்கரையை பராமரிக்கும் சமயத்தில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருக்க வேண்டும். பராமரிப்பு பணிகளின்போது அங்குள்ள இயற்கை வளங்களை சேதப்படுத்துவதோ, மரங்களை வெட்டுவதோ கூடாது.பராமரிப்பு குறித்து குளம் காக்கும் இயக்கத்தினருக்கு தெரிவிக்கவேண்டும். இடிக்கப்பட்ட குளக்கரைப்பகுதியை கான்கிரீட் அமைத்து பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கொள்ளிடம் பாலம் முதல் அளக்குடி வரை ஆற்றின் கரை பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.
    • நாதல்படுகை, முதலை மேடு திட்டு கிராம மக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம்.

    சீர்காழி:

    சீர்காழியை அருகே உள்ள முதலை மேடு திட்டும், நாதல் படுகை கிராம மக்கள் ஒன்று திரண்டு சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் வருகை தந்தனர்.

    பின்னர் தாசில்தார் செந்தில்குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,

    தற்போது திட்டு கிராமத்தில் செய்து வரும் நிவாரண பணிகள் தற்காலிகமானது.

    நிரந்தரமாக தங்கள் பகுதிகளுக்கு செய்து தரவேண்டிய பணிகளாக கொள்ளிடம் பாலம் முதல் அளக்குடி வரை ஆற்றின் கரை பகுதியில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்.

    திட்டு கிராம சாலைகள் அனைத்தும் கான்கிரீட் சிமெண்ட் சாலைகளாக அமைத்து தர வேண்டும்.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடி மற்றும் திருக்கழிப்பாலை இடையே கதவனை அமைத்து தரவேண்டும்.

    கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற பரிசீலனை செய்யவில்லை என்றால் வருகின்ற 4 -ஆம் தேதி கொள்ளிடம் கடைவீதியில் நாதலப்படுகை, முதலை மேடு திட்டு கிராம மக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.5.40 லட்சம் மதிப்பில் அய்யனார் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள கான்கிரீட் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • அங்கன்வாடி கட்டிடம், சத்துணவுக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்து உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியங்களில் செம்பந்தனிருப்பு, காரை மேடு, கீழசட்டநாதபுரம், விளந்திடசமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார்.

    கீழ சட்டநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணி ரூ.5.40 லட்சம் மதிப்பில் அய்யனார் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள கான்கிரீட் சாலையின் தரம், நீளம் அகலத்தை ஆய்வு மேற்கொண்டார், தொடர்ந்து காவளம்பாடி பகுதியில் 60 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை பார்வையிட்டார், பின்னர் காவளம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி யில் உள்ள அங்கன்வாடி கட்டிடம், சத்துணவுக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்து உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    மேலும் அப்பள்ளியின் பழமையான கட்டிட இடிபாடுகளை அகற்றி விரைவில் பள்ளியை சீரமை ப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் பள்ளியை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விழந்திட சமுத்திரம் ஊராட்சியில் பாதரக்குடி கிராமத்தில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் நடந்து வரும் பேபர் பிளாக் சாலையை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்

    இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, ஊராட்சி மன்ற தலைவர்கள் துரைராஜ், ரமணி ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    ×