search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "canteen"

    • மாநகராட்சி சார்பில் ஓய்வு அறையுடன் கூடிய உணவு கூடம் அமைத்து தருமாறு மருத்துவமனைக்கு வரும் மக்கள் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
    • பழைய மாநகராட்சி முன்பிருந்து தருவை மைதான ரோடு வரை உள்ள மாநகராட்சி தெற்கு காட்டன் ரோடு பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயர் பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலின் அருகில் மாநகராட்சி சார்பில் ஓய்வு அறையுடன் கூடிய உணவு கூடம் அமைத்து தருமாறு மருத்துவமனைக்கு வரும் மக்கள் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

    உணவுக்கூடம்

    இதனை தொடர்ந்து அந்த பகுதியினை கமிஷனர் தினேஷ்குமாருடன் நேரில் சென்று பார்வையிட்டு மேயர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த பொதுமக்களிடம் இங்கு ஓய்வு அறையுடன் கூடிய உணவு கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து பழைய மாநகராட்சி முன்பிருந்து தருவை மைதான ரோடு வரை உள்ள மாநகராட்சி தெற்கு காட்டன் ரோடு பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயர் பார்வை யிட்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

    கலந்து கொண்டவர்கள்

    ஆய்வின்போது முன்னாள் கவுன்சிலரும், வட்ட செயலாளருமான ரவீந்திரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், எடின்டா, திரிக்டா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • உசிலம்பட்டி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடங்கள் திறப்பு நடந்தது.
    • இதனை அய்யப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி, நாடார் சரசுவதி மேல்நிலைப் பள்ளியில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட 2 சத்துணவு கூடங்களை அய்யப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    தலைமை ஆசிரியர்கள் மதன்பிரபு, பரமசிவம் முன்னிலை வகித்தனர். ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் சசிகுமார், பிரபு, உசிலம்பட்டி ஒன்றியம் ஜான்சன், செல்லம்பட்டி ஜெயக்குமார், போத்திராஜ், சேடப்பட்டி அய்யர் என்ற ராமகிருஷ்ணன், டி.கல்லுப்பட்டி கண்ணன், சரவணன் சவுந்தரபாண்டி, செல்வம், மீனவரணி ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 5 மாவட்டங்களில் புதிய போலீஸ் கேண்டின்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் திறந்து வைத்தார்.
    • விரைவில் ஆயுதப்படை, மாவட்ட போலீஸ் அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் போலீசாரு க்கான மளிகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்கும் வகையில் புதிய பல்பொருள் கேண்டீன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழக.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கி, புதிய போலீஸ் கேண்டீனை ரிப்பன் வெட்டி காவலர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி வைத்த அவர், முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். பின்னர் போக்கு வரத்து போலீசாருக் புதிய கட்டிடத்தை டி.ஜி.பி. திறந்து வைத்தார்.

    இதைய டுத்து மயிலாடுது றையில் இருந்து புதிதாக தொடங்கப்பட்ட செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்கு றிச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் புதிய போலீஸ் கேண்டின்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மயிலாடுதுறையில் விரைவில் ஆயுதப்படை, மாவட்ட போலீஸ் அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை நகரில் கூடுதலாக ஒரு போலீஸ் நிலையம் திறக்க பரிசீலிக்கப்படும் என்றார்.

    விழாவில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ.5.40 லட்சம் மதிப்பில் அய்யனார் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள கான்கிரீட் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • அங்கன்வாடி கட்டிடம், சத்துணவுக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்து உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியங்களில் செம்பந்தனிருப்பு, காரை மேடு, கீழசட்டநாதபுரம், விளந்திடசமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார்.

    கீழ சட்டநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணி ரூ.5.40 லட்சம் மதிப்பில் அய்யனார் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள கான்கிரீட் சாலையின் தரம், நீளம் அகலத்தை ஆய்வு மேற்கொண்டார், தொடர்ந்து காவளம்பாடி பகுதியில் 60 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை பார்வையிட்டார், பின்னர் காவளம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி யில் உள்ள அங்கன்வாடி கட்டிடம், சத்துணவுக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்து உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    மேலும் அப்பள்ளியின் பழமையான கட்டிட இடிபாடுகளை அகற்றி விரைவில் பள்ளியை சீரமை ப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் பள்ளியை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விழந்திட சமுத்திரம் ஊராட்சியில் பாதரக்குடி கிராமத்தில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் நடந்து வரும் பேபர் பிளாக் சாலையை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்

    இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, ஊராட்சி மன்ற தலைவர்கள் துரைராஜ், ரமணி ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    ×