search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "open"

    • ரூ.160 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி பூங்கா திறக்கப்பட்டது.
    • அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார் அமைச்சர் திறந்து வைத்தார்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் நூற்றாண்டு விழா 2020-21 திட்டத்தின் கீழ் ரூ.160 லட்சம் மதிப்பில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகர ணங்களுடன் கூடிய பூங்கா வினை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பி னர் அசோகன் மற்றும் சிவ காசி மாநகராட்சி மேயர் சங் கீதா இன்பம் ஆகியோர் முன்னிலையில், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல் அமைச் சர் அவர்கள் தலைமையி லான தமிழக அரசு, மாநக ராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமபுறங்களின் உட் கட்டமைப்பை மேம்படுத்து வதற்காக பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வரு கிறது.

    இந்த திட்டங்கள் மூலம் அடிப்படை தேவைகளான குடிநீர் இணைப்புகள், சுகா தாரம், உள்புறச் சாலைகள், தெருவிளக்குகள், பூங்காக் கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்து வரு கிறது.

    அதனடிப்படையில் சிவகாசி மாநகராட்சி ஜே. நகரில் ரூ.65 லட்சம் மதிப்பி லும், புதுக்காலனியில் ரூ.40 லட்சம் மதிப்பிலும், 66 காலனியில் ரூ.55 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.160 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட விளை யாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்காக்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாநக ராட்சி ஆணையர் சங் கரன், மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் விவேகன் ராஜ், வட்டாட்சியர் லோகநாதன் உள்பட அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநிதி கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் நேற்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
    • ராப்பத்து நிகழ்ச்சி கடந்த 23-ந் தேதி தொடங்கி 1-ந்தேதி வரை நடந்தது. பகல் பத்து 2-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    மேலூர்

    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது திருமோகூர். இது பிரசித்தி பெற்ற 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்தது. இந்த ேகாவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.

    ராப்பத்து நிகழ்ச்சி கடந்த 23-ந் தேதி தொடங்கி 1-ந்தேதி வரை நடந்தது. பகல் பத்து 2-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான ஆழ்வார்களில் முதன்மையானவராக கருதப்படும் நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் தரும் நிகழ்வாக திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. சொர்க்கவாசல் வழியே காளமேகப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதனைக்காண ஒத்தக்கடை, மதுரை, மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் செல்வி, செயல் அலுவலர் இளங்கோவன் வழிகாட்டுதலின்படி அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    • உசிலம்பட்டி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடங்கள் திறப்பு நடந்தது.
    • இதனை அய்யப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி, நாடார் சரசுவதி மேல்நிலைப் பள்ளியில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட 2 சத்துணவு கூடங்களை அய்யப்பன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    தலைமை ஆசிரியர்கள் மதன்பிரபு, பரமசிவம் முன்னிலை வகித்தனர். ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் சசிகுமார், பிரபு, உசிலம்பட்டி ஒன்றியம் ஜான்சன், செல்லம்பட்டி ஜெயக்குமார், போத்திராஜ், சேடப்பட்டி அய்யர் என்ற ராமகிருஷ்ணன், டி.கல்லுப்பட்டி கண்ணன், சரவணன் சவுந்தரபாண்டி, செல்வம், மீனவரணி ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    தமிழக அரசு உத்தரவின்படி 24 மணி நேரமும் வாரத்தின் அனைத்து நாட்களும் திறந்து வைக்கும் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விடவும், அதன் விவரம் படிவம் 5-ல் வெளிக்காட்டி வைத்தும், பணியாளர்கள் வேலை நேரம் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்குமிகாமலும், மிகைநேரம் பணி பார்க்கும் நேரத்தில் வேலை நேரம் 10 சதவீத மணி நேரத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    வாரத்தில் மொத்தம் வேலை நேரம் 57 மணி நேரத்திற்கு மிகாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மேற்படி நிறுவனங்களில் பெண் பணியாளர்கள் இரவில் பணிபுரிய அவர்களின் சம்மத கடிதம் பெற்றும் அவர்களின்

    பாதுகாப்புக்குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    பெண் பணியாளரிடம் இருந்து பெறப்படும் புகார்களை விசாரணை செய்ய உள்ள விசாரணை கமிட்டி அமைத் தும் அவர்களை வேலை முடிந்தவுடன் வீட்டில் இறக்கிவிட போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். அனுமதி இல்லை அனைத்து பணியாளர்க ளின் ஊதியம் மற்றும் மிகை ஊதியம் அனைத்தும் வங்கியில் மட்டுமே செலுத்தவேண் டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிபந்தனைகள் பின்பற்றாத 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள் வாரத்தில் அனைத்து நாட் களும் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிபந்தனைகளை மீறும் நிறுவனங்கள் மீது 1947-ம் வருட கடைகள் நிறுவனச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    • பள்ளிக்கு செல்வதற்கு போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சுமார் அரை கிலோ மீட்டா் தூரம் மெயின்ரோடு வழியாக சென்று வந்துள்ளனா்
    • பள்ளிக்கு செல்லும் இளம்சிறார்களின் பயண தூரத்தை குறைத்திடும் வகையிலும் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்லும் வகையில் எஸ்.ஆர்.கே. தெருவிலிருந்து குறுக்கு வழியில் சீக்கிரமாகவும், பாதுகாப்பாகவும் பள்ளிக்கு சென்றடையும் வகையில் பொதுப்பாதை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் 21,22,23,24 ஆகிய வார்டு பகுதிகளை சேர்ந்த எல்.கே.ஜி. ஆங்கில வழி கல்வி, தமிழ்வழி கல்வி மற்றும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இப்பள்ளிக்கு செல்வதற்கு போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சுமார் அரை கிலோ மீட்டா் தூரம் மெயின்ரோடு வழியாக சென்று வந்துள்ளனா். இதன் காரணமாக பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிய நிலையில் இதற்கான தீர்வு வேண்டி பல்வேறு தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு இப்பள்ளிக்கு செல்லும் இளம்சிறார்களின் பயண தூரத்தை குறைத்திடும் வகையிலும் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்லும் வகையில் எஸ்.ஆர்.கே. தெருவிலிருந்து குறுக்கு வழியில் சீக்கிரமாகவும், பாதுகாப்பாகவும் பள்ளிக்கு சென்றடையும் வகையில் பொதுப்பாதை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.


    நிகழ்ச்சிக்கு நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 21-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் சுகந்திமாடசாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் தங்கவேலு முன்னிலை வகித்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் பத்மாவதி வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து நகர்மன்ற துணைத்தலைவா் பொதுப்பாதையை திறந்து வைத்து மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமைஆசிரியா் பீட்டா்ஜூடு தத்தோஸ், பள்ளி ஆசிரியா் டேனியல், அ.தி.மு.க. வார்டு பிரதிநிதி ரேசன்கடை கணேசன், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து உதவிய முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் தங்கவேலுவை பொதுமக்கள் பாராட்டினா்.


    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பயணிகளுக்கான குளிரூட்டப்பட்ட காத்திருப்பார் அறை மூடப்பட்டிருந்தது.
    • இதையடுத்து குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்போர் அறை புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ெரயிலுக்காக காத்திருப்போருக்கு சாதாரண அறை மற்றும் குளிரூட்டப்பட்ட காத்திருப்போர் அறை ஆகியவை உள்ளன.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பயணிகளுக்கான குளிரூட்டப்பட்ட காத்திருப்பார் அறை மூடப்பட்டிருந்தது.

    தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டதால் அதனை திறக்க கோரி ெரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்போர் அறை புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் முன்னிலையில் கூடங்குளம் மின்வாரிய ஓய்வு பெற்ற அதிகாரி முத்தையா திறந்து வைத்தார்.

    இதில் துணை மேலாளர் வெங்கடேசன், வணிக ஆய்வாளர் ஜெயக்குமார், ஒப்பந்ததாரர் பாலசுப்பிரமணியன், முன்னாள் ராணுவ வீரர் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டது.
    • மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு உரிமையியல் (சிவில்) வழக்குகள் ஏராளமாக தாக்கலாகி வந்தது.

    சிவில் வழக்குகளை தனியாக விசாரிக்க நீதிமன்றம் மற்றும் கூடுதல் நீதிபதிகள் இல்லாததால் வழக்குகளின் விசாரணை தாமதமாவதாக பொதுமக்களும் வக்கீல்களும் கூறி வந்தனா். எனவே உரிமையியல் வழக்குகளை விசாரிக்க தனியாக நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அரசுக்கு வக்கீல் சங்கத்தின் தலைவர் கணேசன், செயலாளர் முருகேசன், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு, திருப்பத்தூரில் தனி நீதிபதியுடன் உரிமையியல் நீதிமன்றம் தொடங்க உத்தரவிட்டது.

    இதனையடுத்து திருப்பத்தூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் மேல் தளத்தில் புதிய உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, திருப்பத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மும்தாஜ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் சங்கத் தலைவர் கணேசன், ரவி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

    வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கணேசன் வரவேற்றார். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜி.சுதாகர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, இளையான்குடி குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், அரசு வழக்கறிஞர்கள், திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிச்சான் பட்டியில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர்.
    • முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் பெரிதும் அவதி அடைந்தனர்.

    சுரண்டை:

    வீ.கே.புதூர் தாலுகா குறிச்சான்பட்டி பஞ்சாயத் தில் அமைந்த கரையாளனூர் பொது மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிச்சான் பட்டியில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் பெரிதும் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இருவரின் முயற்சியின் பேரில், கரையாளனூரில் வியாழக்கிழமை தோறும் பகுதி நேர ரேஷன் கடை இயங்க அரசு அனுமதி அளித்து, அதற்கான தொடக்க விழா நடந்தது.


    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் பொருளாளரும், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலருமான முரளிராஜா, ஆலங்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிச்சான் பட்டி பஞ்சாயத்து தலைவர் மகர ஜோதி சரவணன் வரவேற்றார். தொடர்ந்து கரையாளனூர் கிராமத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை பழனிநாடார் எம்.எல்ஏ. திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.

    பகுதிநேர ரேஷன் கடை அமைக்க, கடை வழங்கிய கரையாளனூர் சண்முக வேலுவிற்கு அனைவரும் பொது மக்களின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.தொடர்ந்து பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் கரையா ளனூர் முருகன்,வக்கீல் ராமச் சந்திரன், குறிச்சான்பட்டி தி.மு.க. செயலாளர் துரைசாமி, விவசாய அணி ஜெயராஜ், இளைஞர் அணி திருமலைக்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கரையாளனூர் சண்முகவேலு செய்து இருந்தார்.

    • கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு சில மாதங்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.

    கடந்த மே மாதம் 14-ந் தேதி தேர்வுகள் முடிந்து மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுைற முடிந்து இன்று (13-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகள் அமரும் பெஞ்சுகள் மற்றும் டெஸ்க் பழுது பார்க்கும் பணியும் நடைபெற்றது.

    இந்த நிலையில் 2022-23 கல்வியாண்டு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது.

    இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகள் புத்தகபையை சுமந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாணவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு பள்ளிகளில் வாழை மற்றும் பலூன் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

    நுழைவாயிலில் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. பள்ளிகளில் நுழைந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகளும் மகிழ்ச்சியுடன் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,531 பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

    இதேபோல் சிவகங்கை மாவட்டங்களிலும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வருகை தந்தனர். அவர்களை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் அழைத்து வந்தனர். மேலும் தனியார் பள்ளி வாகனங்களிலும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். பஸ் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகை தந்தனர்.

    இருசக்கர வாகனங்களிலும் மற்றும் சைக்கிள்களிலும் சில மாணவ-மாணவிகள் வந்தனர். அவர்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். முதல் நாளான இன்று மாணவ- மாணவிகளுக்கு நன்னெறி மற்றும் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டன.

    இதனால் மாணவ-மாணவிகள் வகுப்றைகளில் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். பல்வேறு பள்ளிகளில் பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டன. இன்று பள்ளிகள் தொடங்கியதை அடுத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது.

    கடையத்தில் பாரதியார் சிலை திறப்புக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    கடையம்:

    கடையத்தில் பாரதியாரின் 125-வது திருமணநாள் விழா சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் வருகிற 27-ந் தேதி அன்று கடையத்தில் பாரதியார் -செல்லம்மாள் சிலைத் திறப்புடன் நடைபெற உள்ளது.

    நூலகம் ஒன்று கட்டப்பட்டு அதில் பாரதியார் சிலையும், செல்லம்மா - பாரதி கற்றல் மையம் சேவாலயா சார்பில் 27-ந்தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடையம் பழைய கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் கல்யாணி சிவகாமி நாதன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக கீழ கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், தெற்கு கடையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் புளி கணேசன் , மாரி குமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் லயன்ஸ் கிளப் குமரேசன், ஆசிரியர் கோபால், சேது ராமலிங்கம், சோமசுந்தரம்,சுரேஷ், பாலன் கவியரசன்,சேவாலயா சார்பில் மருத்துவர் கோகுலகிருஷ்ணன், கிங்ஸ்டன், காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டனர் . சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தான் நன்றி கூறினார்.
    நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து கார்சாகுபடிக்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
    சிங்கை:

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இருந்து ஆண்டுேதாறும் கார், பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு கார் சாகுபடியையொட்டி வழக்கம்போல் கடந்த 1-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை சபாநாயகர் அப்பாவு இயக்கி வைத்தார். அருகில் எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், இசக்கி சுப்பையா மற்றும் பலர் உள்ளனர்.
    தற்போது அணையின் நீர்மட்டம் 71.55 அடியாக இருப்பதால், இன்று முதல் விவசாயிகளின் நலன் கருதி அணையில் இருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி இன்று சபாநாயகர் அப்பாவு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்து கார்சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பாபநாசம் அணையில் 135 அடி தண்ணீர் இருந்தது.

    இதனால் ஜூன்1-ம் தேதி திறந்து விடப்பட்டது. தற்போது 71 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. எனினும் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்யும் என்பதால் இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக்ெகாள்ள வேண்டும். நெல், நாற்று உற்பத்தி செய்ய இன்று முதல் 20 நாட்களுக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்பின்னர் நீர் இருப்பை பொறுத்து தேவையான அளவு தண்ணீர் திறந்து விடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் ரூபிமனோகரன், இசக்கி சுப்பையா, மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் நீரினால் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் 2,260 ஏக்கரும், தெற்கு கோடைமேலழகியான் கால்வாயில் 870 ஏக்கரும், நதியுண்ணி கால்வாயில் 2460 ஏக்கரும், கன்னடியன் கால்வாய் மூலம் 12,500 ஏக்கரும், கோடகன் கால்வாய் மூலம் 6000 ஏக்கரும், பாளையங்கால்வாய் மூலம் 6200 ஏக்கரும், நெல்லை கால்வாய் மூலம் 2525 ஏக்கரும் பாசன வசதி பெறும்.

     மொத்தம் 32,815 ஏக்கர் நிலப்பரப்பு நேரடியாகவும்,. மறைமுகமாகவும் பயன் பெறும் என்பதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்று முதல் வருகிற அக்டோபர் மாதம் 12-ந்தேதி வரை நீர் இருப்பை பொறுத்து 132 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, பாளை ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும்.
    கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தில் புதிய நிழற்குடையை யூனியன் தலைவர் மாணிக்கராஜா திறந்து வைத்தார்.
    கயத்தாறு:

    கயத்தாறு யூனியனைச் சேர்ந்த அய்யனார்ஊத்து கிராமத்தில் தேவர்குளம் சாலையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புதிய நிழற் குடையை கட்டிடத்தை யூனியன் தலைவர் எஸ்.வி. எஸ்.பி. மாணிக்கராஜா திறந்து வைத்தார். 

    நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன், வட்டார கிராம ஊராட்சி ஆணையாளர் பானு, பஞ்சாயத்து தலைவர் சண்முகையா, துணை தலைவர் பாத்திமா பீவி, அ.ம.மு.க. கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அய்யனார் ஊத்து ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்திற்கான புதிய காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியைத் பூமி பூஜை போட்டு மாணிக்கராஜா தொடங்கி வைத்தார். 

    புதியதாக கட்டப்பட்ட இந்த பள்ளியில் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டினர்.
    ×