search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new bus stop"

    • புதிய பஸ் நிலையத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • அருப்புக்கோட்டையில் நகரசபை கவுன்சில் கூட்டம் நடந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகரசபை கவுன்சில் கூட்டம் நடந்தது. தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனிசாமி, ஆணையாளர் அசோக்குமார் பொறியாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் 36 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க. கவுன்சிலர் முருகானந்தம் திருச்சுழி சாலை மோசமாக குண்டும் குழியுமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். கவுன்சிலர் அப்துல் ரகுமான் பேசுகையில், அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு காயிதே மில்லத் அல்லது அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அதன் பிறகு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு குறித்து தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • பரப்பாடி மற்றும் இளங்குளம் கிராமங்களில் 500 வீடுகளுக்கு தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குதல் திட்டம் ரூ.21 லட்சம் மதிப்பில் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
    • புதுச்சேரி முதல் கோவங்குளம் வரை செல்லும் சாலையில் சிறிய பாலம் ரூ.32.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

    நெல்லை:

    பரப்பாடியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிறுத்தம், கழிப்பறை வசதியுடன் மற்றும் ஆட்டோ நிறுத்தம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார்.

    மேலும் பரப்பாடி மற்றும் இளங்குளம் கிராமங்களில் 500 வீடுகளுக்கு தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குதல் திட்டம் ரூ.21 லட்சம் மதிப்பில் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி முதல் கோவங்குளம் வரை செல்லும் சாலையில் சிறிய பாலம் ரூ.32.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் பரப்பாடியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டிடத்தினையும் திறந்து வைத்து டி.வி.எஸ். அறக்கட்டளை மூலம் பரப்பாடி குளம் தூர்வாரும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மூலக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்து வகுப்பில் நடத்தப்படும் பாட முறைகளை கேட்டு அறிந்து பார்வையிட்டார்கள்.

    நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி .எஸ். ஆர். ஜெகதீஷ், நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் சவுமியாஆரோக்கிய எட்வின், நாங்குநேரி தாசில்தார் உட்பட பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தில் புதிய நிழற்குடையை யூனியன் தலைவர் மாணிக்கராஜா திறந்து வைத்தார்.
    கயத்தாறு:

    கயத்தாறு யூனியனைச் சேர்ந்த அய்யனார்ஊத்து கிராமத்தில் தேவர்குளம் சாலையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புதிய நிழற் குடையை கட்டிடத்தை யூனியன் தலைவர் எஸ்.வி. எஸ்.பி. மாணிக்கராஜா திறந்து வைத்தார். 

    நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன், வட்டார கிராம ஊராட்சி ஆணையாளர் பானு, பஞ்சாயத்து தலைவர் சண்முகையா, துணை தலைவர் பாத்திமா பீவி, அ.ம.மு.க. கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அய்யனார் ஊத்து ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்திற்கான புதிய காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியைத் பூமி பூஜை போட்டு மாணிக்கராஜா தொடங்கி வைத்தார். 

    புதியதாக கட்டப்பட்ட இந்த பள்ளியில் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டினர்.
    அருப்புக்கோட்டை காந்திநகரில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்கும் பணிகளை சாத்தூர் ராமச் சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    அருப்புக்கோட்டை:

    மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்தூர் செல்லும் பஸ்களும், தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக சென்னை செல்லும் பஸ்களும் அருப்புக்கோட்டை காந்திநகர் நிறுத்தத்தில் இருந்து நின்று பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது.

    இந்தப்பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. ஆணையாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். என்ஜினீயர் சேர்மக்கனி, துணை என்ஜினீயர் காளஸ்வரி முன்னிலை வகித்தனர். சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    அரசு பஸ்கள் அருப்புக்கோட்டை நகருக்குள் வராமல் நான்கு வழிச்சாலை வழியாகவே சென்று வந்த நிலையில் இங்குள்ள பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். இதனை அறிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் பேசி மதுரையிலிருந்து வரும் பஸ்களும், தூத்துக்குடியிலிருந்து வரும் பஸ்களும் அருப்புக்கோட்டை காந்திநகர் அருகே நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் தவிக்கும் அவல நிலை இருந்து வருகிறது.

    அதனை அறிந்து நகராட்சி அதிகாரிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டு நகராட்சிக்கு சொந்தமான காந்திநகர் அருகே நேரு நகரில் வாகனங்கள் வந்து நின்று செல்லும் வகையில் புதிய பஸ் நிறுத்தம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தம் கட்டப்பட உள்ளது. இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து பயணிகளின் சிரமங்கள் தவிர்க்கப்படும்.

    மேலும் திருப்புவனத்திலிருந்து அருப்புக்கோட்டைக்கு வைகை தண்ணீர் வரும் குடிநீர் குழாய்கள் அனைத்தும் பழுதடைந்து விட்டது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 35 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் ரூ.25 கோடியில் புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், ஓப்பந்தக்காரர் நந்தகுமார், நெசவாளர் அணி பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×