search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பஸ் நிலையத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட கோரிக்கை
    X

    புதிய பஸ் நிலையத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட கோரிக்கை

    • புதிய பஸ் நிலையத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • அருப்புக்கோட்டையில் நகரசபை கவுன்சில் கூட்டம் நடந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகரசபை கவுன்சில் கூட்டம் நடந்தது. தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனிசாமி, ஆணையாளர் அசோக்குமார் பொறியாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் 36 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க. கவுன்சிலர் முருகானந்தம் திருச்சுழி சாலை மோசமாக குண்டும் குழியுமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். கவுன்சிலர் அப்துல் ரகுமான் பேசுகையில், அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு காயிதே மில்லத் அல்லது அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அதன் பிறகு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு குறித்து தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    Next Story
    ×