search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம்-சிவகங்கையில் பள்ளிகள் இன்று திறப்பு
    X

    ராமநாதபுரம்-சிவகங்கையில் பள்ளிகள் இன்று திறப்பு

    • கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு சில மாதங்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.

    கடந்த மே மாதம் 14-ந் தேதி தேர்வுகள் முடிந்து மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுைற முடிந்து இன்று (13-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகள் அமரும் பெஞ்சுகள் மற்றும் டெஸ்க் பழுது பார்க்கும் பணியும் நடைபெற்றது.

    இந்த நிலையில் 2022-23 கல்வியாண்டு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது.

    இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகள் புத்தகபையை சுமந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாணவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு பள்ளிகளில் வாழை மற்றும் பலூன் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

    நுழைவாயிலில் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. பள்ளிகளில் நுழைந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகளும் மகிழ்ச்சியுடன் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,531 பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

    இதேபோல் சிவகங்கை மாவட்டங்களிலும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வருகை தந்தனர். அவர்களை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் அழைத்து வந்தனர். மேலும் தனியார் பள்ளி வாகனங்களிலும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். பஸ் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகை தந்தனர்.

    இருசக்கர வாகனங்களிலும் மற்றும் சைக்கிள்களிலும் சில மாணவ-மாணவிகள் வந்தனர். அவர்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். முதல் நாளான இன்று மாணவ- மாணவிகளுக்கு நன்னெறி மற்றும் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டன.

    இதனால் மாணவ-மாணவிகள் வகுப்றைகளில் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். பல்வேறு பள்ளிகளில் பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டன. இன்று பள்ளிகள் தொடங்கியதை அடுத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டது.

    Next Story
    ×