search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில் கூடுதலாக ஒரு போலீஸ் நிலையம்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
    X

    பல்பொருள் அங்காடியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    மயிலாடுதுறையில் கூடுதலாக ஒரு போலீஸ் நிலையம்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

    • 5 மாவட்டங்களில் புதிய போலீஸ் கேண்டின்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் திறந்து வைத்தார்.
    • விரைவில் ஆயுதப்படை, மாவட்ட போலீஸ் அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் போலீசாரு க்கான மளிகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்கும் வகையில் புதிய பல்பொருள் கேண்டீன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழக.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கி, புதிய போலீஸ் கேண்டீனை ரிப்பன் வெட்டி காவலர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி வைத்த அவர், முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். பின்னர் போக்கு வரத்து போலீசாருக் புதிய கட்டிடத்தை டி.ஜி.பி. திறந்து வைத்தார்.

    இதைய டுத்து மயிலாடுது றையில் இருந்து புதிதாக தொடங்கப்பட்ட செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்கு றிச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் புதிய போலீஸ் கேண்டின்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மயிலாடுதுறையில் விரைவில் ஆயுதப்படை, மாவட்ட போலீஸ் அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை நகரில் கூடுதலாக ஒரு போலீஸ் நிலையம் திறக்க பரிசீலிக்கப்படும் என்றார்.

    விழாவில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×