என் மலர்
நீங்கள் தேடியது "பட்டா"
- தற்போது சராசரியாக 80 என்ற அளவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- எந்த ஒரு மனுவையும் தங்களது இஷ்டப்படி முன்னதாக ஆய்வு செய்ய முடியாது.
சென்னை:
ஒரு காலத்தில் நமது சொத்திற்கு பட்டா வாங்க வேண்டும் என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். ஆனால் அந்த நிலை இப்போது இல்லை. உட்பிரிவு செய்ய வேண்டியது இல்லாத சொத்துகளுக்கு பத்திரப்பதிவு செய்தவுடன், ஒரு நிமிட பட்டா என்ற அடிப்படையில் உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. அதற்கு விற்பவர் பெயரில் பட்டா இருக்க வேண்டும்.
எனவே சொத்து வாங்குபவர்கள், விற்பவரின் பெயரில் பட்டா இருப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும் என்று பத்திரப்பதிவு துறை கூறியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 8 லட்சத்து 40 ஆயிரத்து 913 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துகளுக்கு இ-சேவை மையம் அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் நேரிடையாக விண்ணப்பிக்கலாம். இந்த மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உட்பிரிவு தேவையில்லாத பட்டா மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்காரணமாக பட்டா வழங்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. அதாவது கடந்த காலங்களில் சர்வேயர்கள் ஒரு மாதத்திற்கு 30 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் தற்போது சராசரியாக 80 என்ற அளவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதோடு மிக முக்கியமாக கடந்த காலங்களில், செல்வாக்கு உள்ளவர்களும், கவனிக்கும் திறன் உள்ளவர்களின் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அதாவது ஒரு சர்வேயர், பொதுமக்கள் விண்ணப்பித்த தேதி அடிப்படையில் வரிசையாகதான் மனுக்களை ஆய்வு செய்யவேண்டும். எந்த ஒரு மனுவையும் தங்களது இஷ்டப்படி முன்னதாக ஆய்வு செய்ய முடியாது.
இதுகுறித்து தமிழக அரசின் நில அளவைத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி கூறும்போது, 'தமிழக அரசின் உத்தரவுப்படி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படுகிறது. சில சொத்துகளில் வில்லங்கம் மற்றும் கோர்ட்டில் வழக்கு இருந்தால் மட்டுமே அதில் தாமதம் ஏற்படும். அதேபோல் பட்டா மனுக்கள் மீதும் வரிசையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்த காலதாமதமும் கிடையாது, அப்படி காலதாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
- பட்டா பெயரை மாற்றுவதற்கும் பொதுமக்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
- முந்தைய காலங்களில், சர்வே எண் இல்லாவிட்டால் நில விவரங்களை தெரிந்து கொள்ள இயலாது.
தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
இதில் பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான பட்டா, வரைபடம் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், பட்டா பெயரை மாற்றுவதற்கும் பொதுமக்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில், கிராமப்புறங்களில் நில விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்வதற்காக, தமிழக அரசு "வில்லேஜ் மாஸ்டர்" என்ற இணையதளத்தை உருவாக்கியது. இதில், ஒரு நிலத்தின் சர்வே எண் தெரியாவிட்டாலும், அதன் மூலம் சர்வே எண்ணை கண்டறிந்து, உரிமையாளர் யார்? என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் இப்போது, பொதுமக்களுக்கு நில விவரங்களை மிகவும் தெளிவாக வழங்க தமிழக அரசு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. எந்த உரிமை ஆவணமும் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள நில விவரங்களை ஒரே இடத்தில் விரைவாகப் பெறலாம். இதற்காக புவியியல் தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், தமிழகத்தின் எந்த பகுதியில் உள்ள நிலத்தை தேர்வு செய்தால் நிலத்தின் எல்லை எங்கு இருக்கிறது?, உரிமையாளர் யார்?, நிலத்தின் பரப்பளவு எவ்வளவு? யார் பெயரில் பட்டா இருக்கிறது? யார் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளது? வில்லங்க சான்றிதழ்? நிலத்தின் அரசு மதிப்பு எவ்வளவு? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும், அந்த நிலம் எந்த மாவட்டம், தாலுகா, அருகிலுள்ள போலீஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, ரேஷன் கடை, மின்சார அலுவலகம், தீயணைப்பு நிலையம் போன்ற தகவல்களும் முழுமையாக காட்டப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்கள் இந்த தகவல் அமைப்புகளை உருவாக்கி இருந்தாலும், பல புதிய வசதிகளை ஒரே அமைப்பில் ஒருங்கிணைத்து வழங்கும் முயற்சி தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக நடைமுறையில் வந்துள்ளது.
முந்தைய காலங்களில், சர்வே எண் இல்லாவிட்டால் நில விவரங்களை தெரிந்து கொள்ள இயலாது. ஆனால் தற்போது, எந்த ஆவணமும் இல்லாவிட்டாலும், நமது நில விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக https://tngis.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கூகுள் மேப்பில் இருப்பிடத்தை தேர்வு செய்வது போல், நமது இருப்பிடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலம் விவரங்கள் அனைத்தும் கிடைக்கும். மாவட்டம், கிராமம் வாரியாகவும் தேடி நமது நிலத்தை எளிதாக கண்டறிய முடிகிறது.
தற்போது இந்த இணையதளத்தில் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து ஊரக பகுதிகளின் நில விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. மற்ற மாவட்டங்களில் உள்ள நகர் பகுதிகள் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. எனவே இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தின் அனைத்து நிலத் தகவல்களும் இதில் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வசதிகளை இணையதளத்தோடு மட்டுமல்லாமல், TN-GIS என்ற மொபைல் செயலியாகவும் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
- 2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது.
- இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை.
உடுமலை :
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது.
ஆனால் இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை. தற்போது இந்த இடம் தனியார் நபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு 96 குடும்பங்களுக்கு இடத்தை பிரித்து வழங்க வேண்டும். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என அதில் கூறியுள்ளனர்.
- வாரிசு மற்றும் பட்டா கேட்டு கொடுத்த மனுவின் மீது பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது
- பல ஆண்டுகளாக போராடி கிடைக்காமல் இருந்த சான்றுகளை வழங்கிய தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு மாணவி குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
குஜிலியம்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள பாளையம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சுகன்யா (வயது 17). இவர் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
நான் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறேன். எனது தாயார் சந்திரா மனநலம் பாதித்தவர். நாங்கள் வசிக்கும் வீடு சேதமடைந்து மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. பாம்பு, எலி போன்ற பூச்சிகள் வீட்டுக்கு வருவதால் எங்களுக்கு அச்சமாக உள்ளது.
எனவே எனது தந்தை ஆறுமுகத்தின் வாரிசு என்பதற்கான சான்றும், நாங்கள் வசிக்கும் வீட்டுக்கு பட்டாவும் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவின் மீது பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இதனிடையே தாசில்தாரிடம் நேரடியாக முறையிட்டதின் பேரில் தாசில்தார் ரமேஷ் தலைமையில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது மாணவியின் வீடு பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததும், அவரது தாய் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் உறுதியானது. ஆனால் மாணவியின் தந்தைக்கு 2 மனைவிகள் என்பதும் முதல் மனைவி இறந்து விட்டதால் கரூரில் இருக்கும் அவரது மகள் கவிதாவிடம் எழுத்துப்பூர்வமான சம்மதம் பெற்று பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுத்து சந்திரா குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் மாணவிக்கு வாரிசு சான்றிதழ் ஆகியவை வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக போராடி கிடைக்காமல் இருந்த சான்றுகளை வழங்கிய தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினருக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
- 54 ஆண்டுகளுக்கும்மேலாக 124 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
திருப்பூர் :
திருப்பூா் பெரிச்சிபாளையம் காலனியில் மாநகராட்சி சாா்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில் சுமாா் 54 ஆண்டுகளுக்கும்மேலாக 124 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் மாநகராட்சிக்கு மாதம் ரூ.10 வாடகையாக செலுத்திவந்த நிலையில் தற்போது ரூ.500 வாடகை செலுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் பெரிச்சிபாளையம் காலனி குடியிருப்புக்களை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயனிடம் மனுக் கொடுத்திருந்தனா்.
இதனடிப்படையில் அப்பகுதியில் கே.சுப்பராயன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவா்கள் குடியிருந்து வருவதால் அவா்களது பெயரிலேயே பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி மேயா், மாநகராட்சி ஆணையரிடம் பேசியுள்ளதாகவும், தமிழக முதல்வரை சந்தித்து பட்டா வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அப்பகுதி பொதுமக்களிடம் உறுதியளித்தாா்.
ஆய்வின்போது மாநகராட்சி துணைமேயா் பாலசுப்பிரமணியம், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் முத்துகண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- திருப்பரங்குன்றத்தில் பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்பு தெரு பகுதி மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என்றுகோரி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்போர் நல சங்க தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். 97-வது வார்டு கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று இந்த பகுதி பொதுமக்களுக்கு பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- திருப்பரங்குன்றம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
- அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் தாலுகா கோடாங்கி தோப்பு தெரு பகுதியில் கிராம நத்தம் மற்றும் புறம்போக்கு பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து தற்போது திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.
இதேபோல தென்பரங்கு ன்றம் காட்டுநாயக்கர் தெரு பகுதி மக்களும் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தாலுகா அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
- மீனவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் மீனவ குடும்பங்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் ஒன்றிய குழுதலைவர் நந்தினி ஸ்ரீதர், துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், தாசில்தார் புனிதா, செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலெக்டர் இரா.லலிதா மற்றும் பூம்புகார் எம்.எல்.ஏ.வும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலா ளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சின்னமேடு மீனவ கிராம மக்கள் 149 குடும்பங்களுக்கும், சின்னங்குடி மீனவ கிராம மக்கள் 32 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்த.விஜயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, சாந்தி, மருதம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி மதியழகன் மற்றும் சின்னமேடு மீனவ கிராம பஞ்சாயத்தார் மதியழகன், கனக்குபிள்ளை, குழந்தைவேல், சின்னங்குடி மீனவ பஞ்சாயத்தார்கள், திமுக பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.
- அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க இயலாது.
- கான்கிரீட் வீடு கட்டுவதற்கு குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் ராஜேந்திரன், துணை தலைவர்கள் துரைராஜ், முருகானந்தம், துணை செயலாளர் ராஜ் மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜவகர் மற்றும் சங்கர் ஆகியோர் திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்க்கொடி யிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சங்கத்தின் 32-வது மாநாடு கடந்த மாதம் 7-ந் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இதில் குடியிருப்பு மனை பட்டா இல்லாத அனைவருக்கும் அரசு உடன் மனைப்பட்டா வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 32 ஊராட்சிகளுக்கும் ஆய்வு செய்ததன் அடிப்படையில் மொத்தம் 2 ஆயிரத்து 305 பேருக்கு அரசு வீடு கட்ட அனுமதி அளித்துள்ளது.
அவர்கள் இருக்கும் இடத்தில் பட்டா இல்லாமல் உள்ளனர்.
ஆகையால் அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க இயலாத என்று அரசு அலுவலர்கள் கூறுகின்றனர். ஆகவே அரசு அவர்களுக்கு மனையும், பட்டாவும் வழங்க வேண்டும்.
கூரை இல்லாத வீடு திட்டத்தை நிறைவேற்றும் வகையில் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
- செலுத்தும் வாடகை தொகைக்கு பல சமயங்களில் ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நடுப்படுகை கிராமத்தில் கண்டமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஏழை-எளிய மக்கள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இதற்காக கோயில் நிர்வாகத்திற்கு வாடகை தொகையும் செலுத்தி வருகின்றனர். செலுத்தும் வாடகை தொகைக்கு பல சமயங்களில் ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.
பல சமயங்களில் ரசீது கொடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில் இங்கு குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டு வாடகை தொகையை உயர்த்தி நிர்ணயித்திருப்பதாகவும், பலருக்கும் வாடகை நிலுவைத் தொகை குறைந்தபட்சம் ரூ5 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாகரூ 12 ஆயிரம் வரை இருப்பதாகவும் உடனடியாக கட்டவேண்டும் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இந்த பகுதி மக்கள் இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.
கோவில் நிர்வாகத்தால் தற்போது சொல்லப்படும் நிலுவைத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.
வீடுகளுக்கான வாடகைத்தொகையை தற்போது குடியிருப்பவரிடம் கலந்து பேசி நிர்ணயம் செய்ய வேண்டும்.
50 ஆண்டுகளுக்குமேலாக குடியிருக்கும் தங்களுக்கு இதே இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து நியாயமான பதில் வரும் என்று காத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து முதல்-அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
- பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் 5 மணி நேரம் விசாரணை
- மாலை 4 மணிக்கு தொடங் கிய சோதனை இரவு 9.15 மணிக்கு முடிவடைந்தது.
நாகர்கோவில்
வடசேரியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஹக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் மற்றும் போலீசார் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது கிராம நிர்வாக அதிகாரி செல்வ சித்ரா பணியில் இருந்தார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவரி டம் கணக்கில் வராத பணம் இருந்தது தெரிய வந்தது.
அவரது கையில் இருந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அது தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர். மேலும் அவரது மேஜை டிராயர் மற்றும் பேக்கில் இருந்த பணத்தை யும் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.17,853 பறிமுதல் செய்யப் பட்டது. இது தொடர் பாக கிராம நிர்வாக அதிகாரி செல்வ சித்ராவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் அந்த பணத்திற்கு முறையான தகவல் தெரிவிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்களை யும் லஞ்சஒழிப்பு போலீசார் சரிபார்த்தனர். அப்போது பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த பல ஆவணங்கள் கிடப்பில் இருந்தது தெரிய வந்தது. 34 பேர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து அவர்களின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அது தொடர்பான விபரங் களை கிராம நிர்வாக அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டறிந்தனர்.
கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண் ணப்பிக்கப்பட்ட பட்டா மாறுதல் ஆவணங்களும் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்ததால் பரபரப்பு ஏற்பட் டது. இது தொடர் பாக கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாலுகா அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.மாலை 4 மணிக்கு தொடங் கிய சோதனை இரவு 9.15 மணிக்கு முடிவடைந்தது.
5 மணி நேரம் நடந்த இந்த சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. கிராம நிர்வாக அலுவலகத்தில் பணம் சிக்கியது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று
தெரிகிறது. இதே போல் வடசேரி தெற்கு கிராம நிர்வாக அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீ சார் சோதனை மேற்கொண் டனர். ஆனால் அங்கு பணம் எதுவும் சிக்கவில்லை.
- கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசால் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன.
- அத்துமீறி நுழைந்து கற்களை ஊன்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
ஒரத்தநாடு தாலுகா கருக்காடிப்பட்டி ஊராட்சி அம்மையன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் சுமார் 20 -க்கும் மேற்பட்ட விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு கடந்த 2000-ம் வருடம் தமிழக அரசால் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன.
இந்த மனைகளில் ஓட்டு மற்றும் குடிசை வீடுகளை கட்டி குடியிருந்து வருகிறோம்.மேலும் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, மின்சாரக் கட்டணங்கள் கட்டி அதற்கான ரசீதும் சட்டப்படி பெற்று உள்ளோம்.
இந்த நிலையில் ஒரு நபர், அரசு வழங்கிய அந்த இடத்திலும் வீட்டிற்குள்ளும் அத்து மீறி நுழைந்து கற்களை ஊன்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
அவரிடம் கேட்டதற்கு இது எனது இடம் என்று கூறி வருகிறார். எனவே அந்த நபரிடமிருந்து , இடங்களை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






