search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
    X

    பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    • திருப்பரங்குன்றத்தில் பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்பு தெரு பகுதி மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என்றுகோரி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

    குடியிருப்போர் நல சங்க தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். 97-வது வார்டு கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று இந்த பகுதி பொதுமக்களுக்கு பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×