என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Land details"

    • பட்டா பெயரை மாற்றுவதற்கும் பொதுமக்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
    • முந்தைய காலங்களில், சர்வே எண் இல்லாவிட்டால் நில விவரங்களை தெரிந்து கொள்ள இயலாது.

    தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

    இதில் பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான பட்டா, வரைபடம் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும், பட்டா பெயரை மாற்றுவதற்கும் பொதுமக்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில், கிராமப்புறங்களில் நில விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்வதற்காக, தமிழக அரசு "வில்லேஜ் மாஸ்டர்" என்ற இணையதளத்தை உருவாக்கியது. இதில், ஒரு நிலத்தின் சர்வே எண் தெரியாவிட்டாலும், அதன் மூலம் சர்வே எண்ணை கண்டறிந்து, உரிமையாளர் யார்? என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

    ஆனால் இப்போது, பொதுமக்களுக்கு நில விவரங்களை மிகவும் தெளிவாக வழங்க தமிழக அரசு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. எந்த உரிமை ஆவணமும் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள நில விவரங்களை ஒரே இடத்தில் விரைவாகப் பெறலாம். இதற்காக புவியியல் தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம், தமிழகத்தின் எந்த பகுதியில் உள்ள நிலத்தை தேர்வு செய்தால் நிலத்தின் எல்லை எங்கு இருக்கிறது?, உரிமையாளர் யார்?, நிலத்தின் பரப்பளவு எவ்வளவு? யார் பெயரில் பட்டா இருக்கிறது? யார் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளது? வில்லங்க சான்றிதழ்? நிலத்தின் அரசு மதிப்பு எவ்வளவு? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.

    மேலும், அந்த நிலம் எந்த மாவட்டம், தாலுகா, அருகிலுள்ள போலீஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, ரேஷன் கடை, மின்சார அலுவலகம், தீயணைப்பு நிலையம் போன்ற தகவல்களும் முழுமையாக காட்டப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்கள் இந்த தகவல் அமைப்புகளை உருவாக்கி இருந்தாலும், பல புதிய வசதிகளை ஒரே அமைப்பில் ஒருங்கிணைத்து வழங்கும் முயற்சி தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக நடைமுறையில் வந்துள்ளது.

    முந்தைய காலங்களில், சர்வே எண் இல்லாவிட்டால் நில விவரங்களை தெரிந்து கொள்ள இயலாது. ஆனால் தற்போது, எந்த ஆவணமும் இல்லாவிட்டாலும், நமது நில விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக https://tngis.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கூகுள் மேப்பில் இருப்பிடத்தை தேர்வு செய்வது போல், நமது இருப்பிடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலம் விவரங்கள் அனைத்தும் கிடைக்கும். மாவட்டம், கிராமம் வாரியாகவும் தேடி நமது நிலத்தை எளிதாக கண்டறிய முடிகிறது.

    தற்போது இந்த இணையதளத்தில் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து ஊரக பகுதிகளின் நில விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. மற்ற மாவட்டங்களில் உள்ள நகர் பகுதிகள் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. எனவே இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தின் அனைத்து நிலத் தகவல்களும் இதில் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வசதிகளை இணையதளத்தோடு மட்டுமல்லாமல், TN-GIS என்ற மொபைல் செயலியாகவும் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

    • விருதுநகரில் நில விவரங்களை விவசாயிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விவசாயிகள் தாங்கள் இதுவரை அரசு திட்டங்களின் மூலம் பெற்ற பயன்களை தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விவசாயிகள் பயன்பெ றும் வகையில் தமிழக அரசு மூலம் 1.4.2023 முதல் செயல்படுத்தப்பட உள்ள மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான வேளாண் அடுக்ககம் (AGRI STACK) மூலம் நில விவரங்களுடன் இணைக் கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடமை வாரி யாக புவியியல் குறியீடு செய்தல், நில உடைமை வாரியாக சாகுபடி பயிர் விவரம்-இனங்களை குறித்து அறிந்து கொள்ள இயலும்.

    இதில் முக்கியமாக நில விவரங்களுடன் இணைக் கப்பட்ட விவசாயிகள் விவரம் அறிய உருவாக்க பட்டுள்ள GRAINS வலைதளத்தில் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய்த்துறை, வேளாண் மைத்துறை, தோட்ட கலைத்துறை, கூட்டுறவு துறை, பட்டு வளர்ச்சித்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதை சான்றளிப்பு துறை, சர்க்கரை துறை ஆகிய துறைகள் இணைக்கப்பட்டு ள்ளதால் அரசு திட்டங்க ளின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்ற டைவதை உறுதிப்படுத்த முடியும்.

    மேலும் இது ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் விவசாயிகள் பயன்பெற விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

    விவசாயிகள் தாங்களே நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் அரசு திட்டங்கள் மூலம் பயன்பெ றலாம். விவசாயிகள் தாங்கள் இதுவரை அரசு திட்டங்களின் மூலம் பெற்ற பயன்களை தெரிந்து கொள்ளலாம்.

    திட்டங்க ளின் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் GRAINS வலைதளத்தில் தங்களது ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண் மற்றும் நில பட்டா விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

    AGRISTACK/GRAINS Project-தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் விவசாயிகள் தரவு தளத்திற்கான சேகரிப்பு தொடர்பாக விருதுநகர் மாவட்ட அனைத்து வட்டாட்சியர்கள், மின்னணு மாவட்ட மேலாளர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர்கள், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோருக்கு வேளாண் அடுக்கு மற்றும் GRAINS வலைதளம் பற்றி மாவட்ட அளவிலான பயிற்சி வழங்கப்பட்டு, மாவட்ட அளவிலான பயிற்சி பெற்ற அலுவலர்கள், அனைத்து கிராம நிர்வாக அலுவ லர்கள், வருவாய் ஆய்வா ளர்கள், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறை சார்ந்த களப்பணி யாளர்க ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு தகவல் சேகரிக்கப்பட்டு பதிவேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    விருதுநகர் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விவரங்களை தங்களது கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் மூலம் வேளாண் அடுக்கு மற்றும் GRAINS வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×