search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Occupy"

    • காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு.
    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

    2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதல் சம்பவத்துக்கு பிறகு சீனா எல்லை பகுதிகளில் புதிய சாலை, பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா புதிதாக சாலை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் 'எக்ஸ்' தளத்தில் வெளியாகி உள்ளன.

    கடந்த ஆண்டு சியாச்சின் அருகே இதே இடத்தில் சாலை இல்லாத நிலையில் இப்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டிருப்பது படங்களில் காணப்படுகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தை சீனாவின் சின்ஜியாங் உடன் இணைக்கவே இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    எனினும் இந்த சாலை இந்திய கட்டுப்பாட்டில் இருந்து 50 கிலோ மீட்டருக்கு வடக்கே சியாச்சின் பனிப்பாறையில் உள்ள இந்திரா கர்னல் அருகே அமைந்திருப்பதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த மார்ச் மாதம் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 முறை இந்த இடத்தை பார்வையிட்டிருந்தார். இந்நிலையில் சீனாவின் புதிய சாலை பணிகள் குறித்த படங்கள் வலைதளங்களில் வெளியாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சாலை முற்றிலும் சட்ட விரோதமானது என்றும், இந்தியா இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 

    • ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது ஏரியின் பரப்பளவு சுருங்கி வருகிறது.
    • தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    செங்குன்றம்:

    மாதவரம் மண்டலம், 32-வது வார்டுக்கு உட்பட்ட புத்தாகரம், மதுரவாயல் மற்றும் புழல் பைபாஸ் சாலை சந்திக்கும் பகுதியில் புத்தாகரம் தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஏரியில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

    இந்நிலையில் தாங்கல் ஏரியை சுற்றி பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி ஏற்கனவே பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் தற்போது தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஏரிக்கரையோரம் வீடு, கடைகள் மற்றும் குடோன்கள் கட்டி உள்ளனர். இதனை சிலர் வாடகைக்கும் விட்டு பணம் வசூலித்து வருகிறார்கள். ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது ஏரியின் பரப்பளவு சுருங்கி வருகிறது.

    இதேபோல் ஏரிக்கு வரும் தண்ணீர் பாதையும் ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் மழை பெய்யும்போது ஏரிக்கு தண்ணீர் வராமல் ஆங்காங்கே தடைபட்டு நின்று பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதன்காரணமாக ஏரியில் வழக்கமான தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த படியே உள்ளன. இதனால் ஏரிக்கரையை சுற்றிலும் தற்போது கட்டிடங்களாக காட்சி அளிக்கின்றன.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதவரம் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை, வீடுகளை இடித்தனர். இப்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடந்து வருகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும். ஆக்கிரமிப்பு கட்டிடங்களை மட்டும் இடித்து விட்டு செல்வதால் சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் முளைத்து விடுகின்றன.

    மேலும் தற்போது ஏரியில் உள்ள தண்ணீர் மாசு அடைந்து காணப்படுகிறது. முட்செடிகள் படர்ந்து உள்ளன. இதனையும் அகற்றவேண்டும். ஆக்கிரமிப்பை தடுக்க ஏரியை சுற்றி தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

    இந்த ஏரியில் கூடுதலாக தண்ணீரை தேக்கி வைத்தால் சூரப்பட்டு, மேட்டூர், பாரதிதாசன் நகர், சண்முகபுரம் மற்றும் மாதனாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக மாநகராட்சி பணியாளர்கள் வந்தனர்.
    • கடை முன்பு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வாசல் உள்ளிட்டவற்றை அகற்றினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்து உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் ஆணையர் சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு கடைக்கு வெளியே மேற்கூரை, கடையின் விளம்பர போர்டு உள்ளிட்ட எதையும் ஆக்கிரமிப்பு செய்து அமைக்க கூடாது.

    மழைநீர் செல்லும் வடிகால் பகுதியை ஆக்கிரமிக்க கூடாது.

    மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    மேலும் கடைகளுக்கு வெளியே மற்றும் நடைபா தையே ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மேற்கூரை சீட், பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே கடை உரிமையா ளர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டது.

    ஆனால் சில கடைகளின் உரிமை யாளர்கள் ஆக்கிரமி ப்பை அகற்றவி ல்லை.

    இந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவ தற்காக மாநகராட்சி பணியா ளர்கள் வந்தனர்.

    ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் ஒன்று திரண்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நேரில் வந்து கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது உரிமையாளர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கால அவகாசம் வேண்டும் என ஆணையரிடம் கேட்டனர். அதற்கு அவர் ஏற்கனவே உங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு அதற்கான நாள் முடிந்து விட்டது.

    எனவே இன்று ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதிப்பட கூறினார்.

    இதை தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் கடையின் வெளியே ஆக்கிரமித்து மேலே வைக்கப்பட்டிருந்த மேற்கூரை, பெயர் பலகை, கடை முன்பு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வாசல் உள்ளிட்ட வற்றை அகற்றினர்.

    தங்கு தடையின்றி வடிகாலில் மழைநீர் செல்வதற்கு நடவடி க்கை மேற்கொ ண்டனர்.

    அப்போது மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • வடிகாலில் தண்ணீர் தடையின்றி செல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் இன்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டார்.

    வடிகாலில் தண்ணீர் தடையின்றி செல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கடைகளை தாண்டி மேற்கூரை போடக்கூடாது.

    கடைகளை ஆக்கிரமித்து அமைக்க கூடாது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விதி மீறல்களில் ஈடுபட கூடாது.

    மேலும் மாட்டு மேஸ்திரி சந்தில் இன்று முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நடைபாதைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேலும் மின்விளக்கு பொருத்த உத்தரவிட்டார்.முன்னதாக நேற்று மாலை தெற்கலங்கம் பகுதியில் தனியார் நகைக்கடை சார்பில் வாகனத்தில் விளம்பர ஸ்டிக்கர் பதாகை அமைத்து ஆடியோ மூலம் விளம்பரம் செய்யப்பட்டது.

    ஆனால் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் வாகனத்தில் ஸ்டிக்கர் பதாகை அமைத்து விளம்பரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நகைக்கடைக்கு ரூ .25 ஆயிரத்தை அபராதமாக விதித்து ஆணையர் சரவணகுமார் உத்தர விட்டார்.

    இந்த ஆய்வில் மாநகராட்சி இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • 25 வருடங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
    • விநாயகர் கோவிலினை விரிவுபடுத்துகிறோம் என்று சிலர் வழிப்பாதையில் சுற்றுச்சுவர் கட்ட ஆரம்பித்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் கன்னிமார் தோட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பங்களுடன் வந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் மேற்கூறிய முகவரியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றோம். எங்கள் குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள நத்தம் காலி இடத்தை 25 வருடங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். 10 மீட்டர் நீளமுடைய இந்த பாதையானது கொண்டத்துக்காளியம்மன் நகர், அறிவொளி நகர், பஞ்சாயத்து அலுவலக பின்புறம் உள்ள தெரு மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்தை எங்கள் தெருவோடு இணைக்கும் முக்கிய வழிப்பாதை ஆகும்.

    இந்நிலையில் நத்தம் காலியிடத்தில் உள்ள விநாயகர் கோவிலினை விரிவுபடுத்துகிறோம் என்று சிலர் வழிப்பாதையில் சுற்றுச்சுவர் கட்ட ஆரம்பித்துள்ளனர். மேலும் வழிப்பாதையினை முழுவதுமாக பயன்படுத்த முடியாதவாறு கழிவறை கட்டியும் துணி துவைக்கும் கல்லை வைத்து கழிவு நீரை ஊற்றியும் கூர்மையான தகரங்களை வைத்தும் பொதுமக்கள் நடக்க முடியாதவாறு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • ஆனி தேரோட்டத்தின் போது நெல்லையப்பர் தேர் உள்பட 5 தேர்கள் வலம் வரும்.
    • தேரோட்டத்தின் போது வாகையடிமுனை பகுதியில் தேர் திரும்புவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் 4 ரத வீதிகள் அமைந்துள்ளது. இந்த ரதவீதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி தேரோட்டத்தின் போது நெல்லையப்பர் தேர் உள்பட 5 தேர்கள் வலம் வரும். இதுதவிர ஒவ்வொரு மாதத்திலும் விழாக்களின் போது சப்பரங்கள் வீதிஉலா வரும்.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆனி தேரோட்டத்தின் போது வாகையடிமுனை பகுதியில் தேர் திரும்புவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் தெற்கு ரத வீதியில் வாகையடி முனையில் இருந்து சந்தி பிள்ளையார் முக்கு வரையிலும் ஆக்கிர மிப்புகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின்படி இன்று நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தெற்கு ரத வீதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள், கடை கூரைகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

    • நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலானது நின்ற சீர் நெடுமாறன் என்ற மன்னரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
    • 2 மாட வீதிகளான தெற்கு மாட வீதியும், மேல மாட வீதியும் தான் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    நலத்திட்ட உதவிகள்

    இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மேலும் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

    சங்கர் நகர் அருகே நாரணம்மாள்புரம் வ.உ.சி. நகரை சேர்ந்த திருமா அழகு என்பவர் தலைமையில் வந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தாழையூத்து பகுதியை சேர்ந்த ஒரு நபர் சாதி ரீதியான மோதல்களுக்கு வழி வகுப்பதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    சுடுகாட்டுக்கு தனிப்பட்டா

    அம்பை தாலுகா செட்டி மேடு மற்றும் மேல ஏர்மாள் புரத்தைச் சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிமேடு மற்றும் மேல ஏர்மாள்புரத்தில் நாடார் சமுதாய மக்கள் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாங்கள் இங்கு உள்ள சுடுகாட்டை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றோம்.

    தற்போது இந்த இடம் புறம்போக்கு என்று கூறி தனி நபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர். தற்போது அந்த இடத்தில் நன்மை கூடம் சீரமைப்பு பணி நடைபெற்று வரும் நிலையில் அம்பை தாசில்தார் சுமதி சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்து கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினார்.

    இது தொடர்பாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் தனி நபர்களுக்கு அந்த இடத்தை பட்டா போட முயற்சி நடப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் கலெக்டர் கவனத்தில் எடுத்து சுடுகாட் டிற்கு உரிய அந்த இடத்தை அரசு பதிவேட்டில் ஏற்றி தனி பட்டா வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    பா.ஜனதா மனு

    பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலானது நின்ற சீர் நெடுமாறன் என்ற மன்னரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. பழமையான இந்த கோவிலுக்கு 3 மாட வீதிகளும், 4 ரத வீதிகளும் இருக்க வேண்டும்.

    சிவாலயம் மற்றும் விஷ்ணு ஆலயம் எல்லாம் ஆகம விதிகளின்படி 3 மாட வீதிகளும், 4 ரத வீதிகளும் அமையும் படி நிர்மானிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் நெல்லையப்பர் கோவிலில் 2 மாட வீதிகளான தெற்கு மாட வீதியும், மேல மாட வீதியும் தான் உள்ளது. வடக்கு மாடவீதியை காணவில்லை. எனவே வடக்கு மாட வீதியை கண்டுபிடித்து வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

    • பாதையை பல ஆண்டு காலமாக சிலர் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர்.
    • தனியார் பள்ளிக்கு மேற்கு பகுதியில் இருந்து கொத்தாடப்பட்டி பகுதி வரை உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரியில் இருந்து விஸ்வநாதபேரி, தென்மலை, ராயகிரி போன்ற பகுதிகளுக்கு தார் சாலை வசதி இல்லாத காலத்தில் மக்கள், வாகனங்கள், கால்நடைகள் போக்குவரத்து பாதையாகவும், தென்மலை, வடுகபட்டி, ராயகிரி விஸ்வநாதபேரி போன்ற பகுதிகளில் இருந்து சிவகிரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாணவ - மாணவிகள் கல்வி பயில்வதற்கு சென்று வர முக்கிய பாதையாகவும், தேவிப்பட்டணத்திற்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள வனபகுதிகளுக்கும், புஞ்செய் பகுதிகளுக்கு கால்நடைகள் மேய்ச்சலுக்காக சென்று வருவதற்காகவும் பயன்படுத்தி வந்த 30 அடி அகலம் கொண்ட பசுப்பாதை என்று அழைக்கப்பட்ட பாதையை பல ஆண்டு காலமாக சிலர் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர்.

    சிவகிரி தாலுகா பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்களை கைப்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதின்பேரில் சிவகிரி தாசில்தார் ஆனந்த் தலைமையில், வாசு தேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி மயில், ஊர் நல அலுவலர் தெய்வானை ஆகியோர் முன்னிலையில், சிவகிரி அருகே விஸ்வநாதபேரி தனியார் உயர்நிலைப்பள்ளிக்கு மேற்கு பகுதியில் இருந்து சிவகிரி பேரூராட்சி பகுதியை சேர்ந்த கொத்தாடப்பட்டி பகுதி வரை உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

    இதில் மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்கர வடிவு, தலையாரி வேல்மு ருகன், சர்வேயர் பாண்டி செல்வி, விஸ்வநாதபேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், துணைத்தலைவர் காளீஸ்வரி, செயலர் உமா மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

    • கரூர் மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
    • ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள், போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் அகற்றினர்.

    கரூர்:

    கரூர் மாநகராட்சி சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள், மளிகை கடை சாலை, அண்ணாசாலை, மேற்கு காந்தி நகர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டனர். அப்போது வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், மளிகைக் கடைகள் உள்ளிட்டவை முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள், போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் அகற்றினர்.

    • ரெட்டிபாளையத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
    • கோவில்களுக்கு சொந்தமான 3.88 ஏக்கர் நிலங்களை அப்பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை குடியிருப்பு பகுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே ரெட்டிபாளையம் கிராமத்தில் விநாயகர் கோயில்,செல்லியம்மன் கோயில்,சொர்ணபுரீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு சொந்தமான 3.88 ஏக்கர் நிலங்களை அப்பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை குடியிருப்பு பகுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதை அரியலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ், தனி வட்டாட்சியர் கலைவாணன் மற்றும் கோயில் செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு பகுதி என உறுதி செய்தனர். இந்த நிலங்களை அளவீடு செய்த பின் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78ன் படி ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


    • வேளாண் அதிகாரிகள் புறக்கணிப்பது குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்படும்
    • பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ்பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

    மோகன்தாஸ்:-

    கிடாரங்கொண்டான்- தலையுடையவர் கோயில்பத்து, பொன்செய்-முடிகண்டநல்லூர் ஆகிய பகுதியில் இணைப்பு பாலம் வேண்டும்.

    நாச்சிகட்டளை -தலைச்சங்காடு செல்லும் சாலையில் விவசாயிகள், பொதுமக்களுக்கு இடையூறாக பாதிப்புகளை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

    ராஜ்கண்ணன்:-

    ஆக்கூரில் பிடாரி குளத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

    புங்கையன் தோப்பு பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்.

    சுப்பிரமணியன்:-

    கஞ்சாநகரம் அருகே மங்கனூர் கிராமத்தில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும்.

    சக்கரபாணி:-

    கருவாழக்கரை மாரியம்மன் கோயில் பகுதியில் வடிகால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    மருதூர் அரசு பள்ளி நடுநிலைப் பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

    ரஜினி:-

    1-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட குளங்களை தூர்வார வேண்டும். சேமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.

    தேவிகா:-

    இலுப்பூர் ஊராட்சி எரவாஞ்சேரி- மாரியம்மன் கோயில் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    லெனின் தாஸ்:-

    காழியப்பநல்லூர் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு ஆகியவற்றை தனிநபர் ஆக்கிரமித்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டி.மணல்மேடு ஊராட்சியில் காடுவெட்டி, நடுவலூர், நட்சத்திரமாலை ஆகிய கிராமங்களுக்கு சுடுகாடு சாலை அமைத்து தரவேண்டும்.

    ஜெயந்தி:-

    தில்லையாடி-திருவிடைக்கழி இடையே பூச்சாத்தனூர் பகுதியில் உள்ள சேதமடைந்த பாலத்தை புதிதாக கட்டித் தர வேண்டும்.

    ஊராட்சியில் 100 நாள் பணியில் ஈடுபடும் மக்களுக்கு விடுபடாமல் சம்பளம் வழங்க வேண்டும்.

    இதுதொடர்பாக ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு கூட்டத்துக்கும் முன்கூட்டியே அழைப்புகள் விடுக்கப்படுகிறது.

    அவர்கள் இதுவரை எதிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருவதை கண்டித்து மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் அனுப்பப்படும்.

    உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஒன்றிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், உள்ளிட்ட யூனியன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசால் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன.
    • அத்துமீறி நுழைந்து கற்களை ஊன்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    ஒரத்தநாடு தாலுகா கருக்காடிப்பட்டி ஊராட்சி அம்மையன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் சுமார் 20 -க்கும் மேற்பட்ட விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு கடந்த 2000-ம் வருடம் தமிழக அரசால் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன.

    இந்த மனைகளில் ஓட்டு மற்றும் குடிசை வீடுகளை கட்டி குடியிருந்து வருகிறோம்.மேலும் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, மின்சாரக் கட்டணங்கள் கட்டி அதற்கான ரசீதும் சட்டப்படி பெற்று உள்ளோம்.

    இந்த நிலையில் ஒரு நபர், அரசு வழங்கிய அந்த இடத்திலும் வீட்டிற்குள்ளும் அத்து மீறி நுழைந்து கற்களை ஊன்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    அவரிடம் கேட்டதற்கு இது எனது இடம் என்று கூறி வருகிறார். எனவே அந்த நபரிடமிருந்து , இடங்களை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×