தஞ்சை மாட்டு மேஸ்திரி சந்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக மாநகராட்சி பணியாளர்கள் வந்தனர்.கடை முன்பு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வாசல் உள்ளிட்டவற்றை அகற்றினர்.
ஆக்கிரப்புகள் அகற்றப்படுவதை ஆணையர் சரவணகுமார் பார்வையிட்டார்.
ஆக்கிரப்புகள் அகற்றப்படுவதை ஆணையர் சரவணகுமார் பார்வையிட்டார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்து உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் ஆணையர் சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு கடைக்கு வெளியே மேற்கூரை, கடையின் விளம்பர போர்டு உள்ளிட்ட எதையும் ஆக்கிரமிப்பு செய்து அமைக்க கூடாது.

மழைநீர் செல்லும் வடிகால் பகுதியை ஆக்கிரமிக்க கூடாது.

மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் கடைகளுக்கு வெளியே மற்றும் நடைபா தையே ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மேற்கூரை சீட், பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே கடை உரிமையா ளர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டது.

ஆனால் சில கடைகளின் உரிமை யாளர்கள் ஆக்கிரமி ப்பை அகற்றவி ல்லை.

இந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவ தற்காக மாநகராட்சி பணியா ளர்கள் வந்தனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் ஒன்று திரண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நேரில் வந்து கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது உரிமையாளர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கால அவகாசம் வேண்டும் என ஆணையரிடம் கேட்டனர். அதற்கு அவர் ஏற்கனவே உங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு அதற்கான நாள் முடிந்து விட்டது.

எனவே இன்று ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதிப்பட கூறினார்.

இதை தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் கடையின் வெளியே ஆக்கிரமித்து மேலே வைக்கப்பட்டிருந்த மேற்கூரை, பெயர் பலகை, கடை முன்பு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வாசல் உள்ளிட்ட வற்றை அகற்றினர்.

தங்கு தடையின்றி வடிகாலில் மழைநீர் செல்வதற்கு நடவடி க்கை மேற்கொ ண்டனர்.

அப்போது மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com