என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Muthusamy"

    • டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூட வேண்டும் என்பதால் 500 கடைகள் மூடப்பட்டுள்ளது.
    • பில்லிங் மெஷின் 12 ஆயிரம் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களுக்கு பணம் வாங்குகின்றனர் என தவறாக புரிந்து கொள்கின்றனர். அப்படி அல்ல. பாட்டில் திரும்ப அளிக்கும்போது 10 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு லேபிள் ஒட்டுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பல டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெற்று வைப்பதற்கு இடம் இல்லாமல் சிரமம் உள்ளது. இது போன்ற சிரமங்கள் வருங்காலங்களில் தவிர்க்க இனி வரும் கடை கள் குறைந்தளவு 500 சதுர அடியில் கடை இருக்க வேண்டும் என கட்டாயமாக இருக்க வேண்டும் அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூட வேண்டும் என்பதால் 500 கடைகள் மூடப்பட்டுள்ளது. எப்.எல் 2 கொடுக்க வேண்டுவது அரசின் விருப்பமோ, திட்டமோ அல்ல. டாஸ்மாக் கடைகள் இல்லாத இடத்தில் கள்ளச்சாராயம், வெளி மாநிலத்தில் இருந்து வரும் மது போன்ற தவறான இடத்திற்கு சென்று விடக்கூடாது என தடுப்பதற்காக தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்றது. மதுவை மறைமுகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தான். டாஸ்மாக் கடையை ஒரே நாளில் உத்தரவிட்டு மூட முடியும். ஆனால் அதற்கு பிறகு ஏற்படும் நிலை என்பது அனைவரும் அறிந்ததே. எனவே படிப்படியாக குறைத்து கொண்டு வருவது தான் அரசாங்கத்தின் முதல் நோக்கமாக உள்ளது.

    டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என தெரிவித்துள்ளோம். இதற்கு தகுந்தாற்போல் அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். சமாளிப்பதற்காக சொல்லவில்லை. மதுவை பழகிவிட்டனர். தவறாக சொல்லமுடியாது. அவர்களுக்கு குடும்ப சூழ்நிலையோ, பணிச்சுமையோ இப்படி சூழ்நிலையை உருவாக்கி விட்டது.

    இதனை சொன்னால் பலவிதமாக சித்தரிக்கின்றனர். விருப்பப்பட்டு மது வாங்க செலவழிப்பது அல்ல. அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உள்ளது. சூழ்நிலை காரணமாக டாஸ்மாக் கடையில் தினமும் பணத்தை செலவிட்டு வருகின்றனர். இதனை மாற்றி கொண்டு வரவேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது.

    தற்போது வரை 500 டாஸ்மாக் கடைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகள் நிறுத்துவதற்காக மனுக்கள் வந்துள்ளது. அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    டெட்ரா பேக் நடை முறைப்படுத்த ஆய்வு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டியுள்ளது. டெட்ரா பேக் திட்டம் மது விற்பனையை பிரமோட் செய்வதற்கு அல்ல. அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்றம் கூறும் கருத்தை வைத்து தான் முடிவெடுக்க முடியும். எனவே இதில் உடனடியாக முடிவெடுக்க முடியாது.

    பில்லிங் மெஷின் 12 ஆயிரம் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    எங்காவது மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெற்றிருந்தால் தனிப்பட்டவரின் தவறு. அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 451 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.அரசாங்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு நிறுவனமும் ஒரு வருடாந்திர அறிக்கையை தயாரிக்க வேண்டும்.
    • டாஸ்மாக் அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை தொடர்ந்து 8-வது ஆண்டாக வெளியிடப்படாதது பேசுபொருளாகி உள்ளது. கடைசியாக 2016-17-ம் நிதியாண்டிற்கான 34-வது ஆண்டு அறிக்கையை டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.

    நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிறுவனமும் ஒரு வருடாந்திர அறிக்கையை தயாரிக்க வேண்டும். இது அதன் செயல்பாடுகள் மற்றும் நிதி செயல்திறன் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை அதன் பங்குதாரர்களுக்கு வழங்கும் ஒரு விரிவான ஆவணமாகும்.

    உதாரணமாக, அரசுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனமான தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் 2023-24ம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கைகளை 2023-24ம் நிதியாண்டு வரை முறையாக சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதாகவும், 2024-25-ம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், ஏன் அவை வெளியிடப்படவில்லை என்பதை சரிபார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

    மேலும், இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    முன்னதாக, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது. மேலும் இதுதொடர்பாக நடைபெற்ற சோதனை தொடர்பான வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடுகளில் சோதனைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.
    • அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது.

    சென்னை:

    வீட்டு வசதி, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறு வனத்தின் தலைமை அலு வலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது.

    இந்த சோதனைகளின்போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், ஆயிரம் கோடி ருபாய் ஊழல் நடை பெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத்துறை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக, நேற்று டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடுகளில் சோதனைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.

    இந்த சோதனைகளின்போதும், எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது.

    பல அமலாக்கத்துறை வழக்குகளில், உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிமுறைகளைத் தொடர்ந்து மீறி, இவ்வாறு அமலாக்கத்துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகத் தேவையான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் பதிந்த வழக்கை தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு போல் சித்தரிப்பதற்காக ரெய்டு.
    • தவறான அறிக்கையை நியாயப்படுத்த ED டாஸ்மாக் நிறுவன ஊழியர்களை தொடர்ந்து துன்புறுத்துகிறது.

    டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் 2-வது நாளாக சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களை துன்புறுத்தும் அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * அரசியல் உள்நோக்கத்தோடு அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

    * உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறி அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு கண்டனம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் விஜிலென்ஸ் பதிவு செய்த வழக்குகளை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் பதிந்த வழக்கை தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு போல் சித்தரிப்பதற்காக ரெய்டு.

    * எந்த ஆதாரமும் கிடைக்காததால் ரூ.1,000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை அமலாக்கத்துறை வெளியிட்டது.

    * வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்த ED டாஸ்மாக் நிறுவன ஊழியர்களை தொடர்ந்து துன்புறுத்துகிறது.

    * அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் அரசு எப்போது துணை நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டிடமும் முடிவடையும் தருவாயில் உள்ளது.
    • பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    வண்டலூர்:

    பரனூர் சுங்கச்சாவடி அருகே சுமார் 2 ஏக்கர் 58 சென்ட் பரப்பளவில் ரூ.25 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 971 மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 116 அறைகள் வருகின்றன. இதில் எல்.ஐ.ஜி. 26 அறைகளும், எம்.ஐ.ஜி. 90 அறைகளும் கொண்ட 13 தளங்கள் ஒரு பிரிவாகவும், 15 தளங்கள் ஒரு பிரிவாகவும் கட்டப்படுகிறது.

    புதிய கட்டிடப் பணிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த கட்டிடத்தில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. வருகிற மார்ச் மாத இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. கட்டிடத்தின் அருகே உள்ள 13.73 ஏக்கர் பரப்பளவில் காலி மனைகளையும் 145 அறைகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும்.

    ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி 121 குடியிருப்புகளில் 61 குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து மறுசீரமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இதற்கான பணியும் நடந்து வருகிறது.

    ரெயில்வே துறையில் வாங்க வேண்டிய அனுமதியும் விரைவில் முறையாக பெற்று வருகிற மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். இதேபோல் கேளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டிடமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சஞ்சீவனா, ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், துணைத் தலைவர் ஆராமுதன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், தலைமை பொறியாளர் சீனிவாச ராவ் உடன் இருந்தனர்.

    • ஈரோடு மாநகராட்சி எல்லை பகுதி தேவை அடிப்படையில் வரிவுபடுத்தப்படும்.
    • புதிதாக ஈரோடு பகுதியில் துணை நகரம் அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பன்னீர்செல்வம் பார்க்க அருகே கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை இன்று அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். எனவே எனக்கும் அந்த விருப்பம் உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் புறநகர் பஸ்கள் வந்து செல்ல சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் அங்கு நிற்கும். இதேபோன்று சத்தி, கோபி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் நிற்க கனி ராவுத்தர் குளம் அருகே மற்றொரு பஸ் நிலையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக இடம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் இடம் வாங்கப்பட்டு அங்கும் பஸ் நிலையம் அமைக்கப்படும். எனவே ஒரே சமயத்தில் 2 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. பின்னர் அவைகள் நிரந்தர பஸ் நிலைய கட்டிட வசதியுடன் அமையும்.

    அத்திக்கடவு -அவினாசி திட்ட பணிகளை வரும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிக்க அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. அப்பணிகளை வரும் ஜனவரி 15-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகரம் அச்சரப்பாக்கம் மற்றும் அரக்கோணம் வரையும் விரிவுபடுத்தப்படுகிறது. இதனால் மக்களுக்கு பல அடிப்படை வசதிகள் உருவாகும். வளர்ச்சி மேலும் துரிதப்படும்.

    எனவே தற்போது சென்னையில் உள்ள சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் அலுவலகங்கள் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளிலும் புதிதாக உருவாக்கப்படும்.

    ஈரோடு மாநகராட்சி எல்லை பகுதி தேவை அடிப்படையில் வரிவுபடுத்தப்படும். புதிதாக ஈரோடு பகுதியில் துணை நகரம் அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆனால் ஏற்கனவே முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியபகுதியில் பல மனைகள் விற்பனையாகாமல் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீரேற்று நிலையங்களில் ராட்சத மின் மோட்டார்களை இயக்கி குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்லும் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
    • கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராய ன்பாளையத்தில் இருந்து பவானி ஆற்றின் உபரி நீரை ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி. அளவிற்கு குழாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நீரேற்று திட்டம் தான் அத்திக்கடவு- அவிநாசி திட்டம்.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 1756 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் 106 கிமீ தொலைவிற்கு குழாய் அமைத்து 3 மாவட்டங்களில் உள்ள 1045 குளம் குட்டைகளை நிரப்பும் வகையில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்த திட்டத்திற்காக 6 இடங்களில் நீரேற்று நிலையங்களும. அமைக்கப்பட்டன. பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீரேற்று நிலையங்களில் ராட்சத மின் மோட்டார்களை இயக்கி குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்லும் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இந்நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கி அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார்.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் பல கோடி மதிப்பில் திட்டங்கள் உள்ளன.
    • பழைய குடியிருப்புகளை இடிக்கும் இடத்தில் நவீன குடியிருப்புகள் கட்டப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள கதிரம்பட்டி, வாவிகடை, சிலேட்டர்நகர், பெருந்துறையில் 3 இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, சாலை விரிவாக்கம் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

    அமைச்சர் சு.முத்துசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சாலை அமைப்பதற்கான பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 பணிகள், பெருந்துறையில் 3 பணிகள் என மொத்தம் 6 பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பில் இந்த 6 பணிகளும் நடைபெற உள்ளது. மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த திட்டம் இது. இன்னும் 6 மாதத்தில் முடிவடையும். மக்களுக்காக இதேபோல் இன்னும் ஏராளமான திட்டங்கள் உள்ளன.

    இதேப்போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் பல கோடி மதிப்பில் திட்டங்கள் உள்ளன. வீட்டு வசதி வாரியத்தில் 50 சதவீத காலி பணியிடங்கள் உள்ளன. இதில் வாரிசு அடிப்படையில் சில பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடங்கியுள்ளது. சர்வீஸ் கமிஷன் மூலம் இவை நிரப்பப்பட வேண்டும். அதற்கு சில கால அவகாசம் தேவைப்படுகிறது.

    வீட்டு வசதி வாரியத்தில் தமிழகம் முழுவதும் இடிந்து விழும் நிலையில் இருந்த 138 கட்டிடங்கள் கண்டறியபட்டு அதில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் 60 கட்டிங்கள் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பழைய குடியிருப்புகளை இடிக்கும் இடத்தில் நவீன குடியிருப்புகள் கட்டப்படும். வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக சுயநிதி திட்டத்தின் கீழ் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட இடங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டும் பணிக்கான சட்டத்திருத்தத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
    • மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு , திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலை புனரமைக்க ஒருத்தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி இருதரப்பு விவசாயிகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எனினும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும், விவசாயம் காக்க வேண்டியும், மண் கால்வாயிகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தி அரச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள் கடை வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர்.

    அதன்படி இன்று காலையில் இருந்து அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான பிச்சாண்டாம் பாளையம், கருக்கம் பாளையம், வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அரச்சலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக ஆட்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

    புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை அப்படியே தொடர வேண்டும், கசிவுநீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அரச்சலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்.
    • அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்.

    அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டாஸ்மாக் கடைகளில் தரப்படும் மது பாட்டில்கள் சில இடங்களில் பிரச்சினையாக உள்ளது.
    • ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    முதலமைச்சர் ஒவ்வொரு மாதமும் பல்வேறு துறைகளில் ஆய்வு செய்து வருகிறார். இதுவரை என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளது, இனிமேல் என்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் அடிப்படையில் நாங்களும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.

    மதுக்கடையில் தவறுகள் நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிப்பது சாதாரணமான விசயம் தான். அவர்கள் அப்படி கூறாமல் இருந்தால் தான் அதிசயம். சில இடத்தில் தவறு நடந்துள்ளதை அனைத்து இடங்களிலும் நடந்துள்ளதாக சித்தரிக்கின்றனர்.

    இதுகுறித்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மது விற்பனை நேரம் குறைப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுக்கடையில் வியாபாரம் அதிகமானால் பெருமை இல்லை, குறைய வேண்டும் என நினைக்கிறோம்.

    மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது அபராதம், பணிமாறுதல் செய்யப்படுகிறது. மேலும் அதிக புகார் வந்தால் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். முதலில் மதுக்கடை பணியாளர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு வருகிறோம். அவர்கள் கூறும் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிகாரிகளுடனும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினேன். ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். மது விற்பனை அதிகரிப்பது எங்கள் நோக்கமல்ல. கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டும் என்பது நோக்கமாகும். மதுக்கடையில் செயல்படும் பார் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்கு முடிந்ததும் பார் டெண்டர் வைக்கப்படும் தற்போது லைசன்ஸ் பெற்ற பார்கள் மட்டுமே நடக்கின்றன.

    டாஸ்மாக் கடைகளில் தரப்படும் மது பாட்டில்கள் சில இடங்களில் பிரச்சினையாக உள்ளது. அவைகளைப் பெற்றுக் கொண்டு ரூபாய் பத்து வழங்க தீர்ப்பு உள்ளது. மேலும் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதன் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது 500 மது கடைகளை மூடி உள்ளோம். பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த கடைகள் மூடப்பட்டன. இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதமே முடிவெடுக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் அண்மையில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை குறைந்து வருவதாக தகவல்கள் வரத் தொடங்கியது. இதன் காரணமாக டாஸ்மாக் மதுபான விற்பனையை அதிகப்படுத்துவது குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, கம்ப்யூட்டர் மூலம் ரசீது வழங்குவது, கட்டுப்பாட்டு அறை அமைத்து கடைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது, கர்நாடகாவை போல தமிழகத்திலும் டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் விற்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    ×