search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேளம்பாக்கம் புதிய பஸ்நிலையம் பொங்கல் பண்டிகைக்குள் திறக்க ஏற்பாடு- அமைச்சர் முத்துசாமி
    X

    கேளம்பாக்கம் புதிய பஸ்நிலையம் பொங்கல் பண்டிகைக்குள் திறக்க ஏற்பாடு- அமைச்சர் முத்துசாமி

    • கேளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டிடமும் முடிவடையும் தருவாயில் உள்ளது.
    • பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    வண்டலூர்:

    பரனூர் சுங்கச்சாவடி அருகே சுமார் 2 ஏக்கர் 58 சென்ட் பரப்பளவில் ரூ.25 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 971 மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 116 அறைகள் வருகின்றன. இதில் எல்.ஐ.ஜி. 26 அறைகளும், எம்.ஐ.ஜி. 90 அறைகளும் கொண்ட 13 தளங்கள் ஒரு பிரிவாகவும், 15 தளங்கள் ஒரு பிரிவாகவும் கட்டப்படுகிறது.

    புதிய கட்டிடப் பணிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த கட்டிடத்தில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. வருகிற மார்ச் மாத இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. கட்டிடத்தின் அருகே உள்ள 13.73 ஏக்கர் பரப்பளவில் காலி மனைகளையும் 145 அறைகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும்.

    ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி 121 குடியிருப்புகளில் 61 குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து மறுசீரமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இதற்கான பணியும் நடந்து வருகிறது.

    ரெயில்வே துறையில் வாங்க வேண்டிய அனுமதியும் விரைவில் முறையாக பெற்று வருகிற மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். இதேபோல் கேளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டிடமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சஞ்சீவனா, ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், துணைத் தலைவர் ஆராமுதன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், தலைமை பொறியாளர் சீனிவாச ராவ் உடன் இருந்தனர்.

    Next Story
    ×