search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Irrigation Canal"

    • பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992-ம் ஆண்டு ரூ.13.51 கோடி ரூபாய் செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது.
    • மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை, பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    முத்தூர்:

    நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் தண்ணீர் காவிரியுடன் கலந்து தண்ணீர் சென்றது. பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992-ம் ஆண்டு ரூ.13.51 கோடி ரூபாய் செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. இதிலிருந்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலூகாவில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவுள்ள அணைப்பாளையம் தடுப்பணைக்கு, ஊட்டுக்கால்வாய் வழியாக திறக்கப்படும். இதன் மூலம் கே.பரமத்தி, அரவக்குறிச்சி, கரூர் தாலூக்காவில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் கால்வாய்கள் உள்ளது.

    திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் தடுப்பணைக்கு தண்ணீர் திறந்து விடுவது 2004-க்கு பிறகு நிறுத்தப்பட்டது. மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை, பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 15 வருடங்கள் கழித்து 2019-ல் முத்தூர் தடுப்பணையில் இருந்து நொய்யல் வெள்ளநீர் அப்போது திறக்கப்பட்டது. இந்த ஆண்டு நொய்யல் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. தற்போது செல்லும் வெள்ளநீரில் டிடிஎஸ் 660 க்கும் குறைவாக உள்ளது.

    இதையடுத்து குப்பகவுண்டன்வலசு அருகே உள்ள அணைப்பாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் நேற்று முதல் ஊட்டு கால்வாய் வழியாக வினாடிக்கு 160 கன அடி வீதம் சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது நொய்யல் ஆற்றில் மழை நீர் வந்து கொண்டிருப்பதால் 5-ம் ஆண்டாக அணைப்பளையம் தடுப்பணைக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஊட்டு கால்வாய்க்கு திறந்தது போக நொய்யல் ஆற்றில் 250 கன அடி வரை காவிரிக்கு சென்றது. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிக ளிடம் கூறினர்.
    • துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைகட்டினை வடகிழக்கு பருவ மழை வருவதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையி னை முன்னிட்டு, எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து பிரியும் இடதுபக்க வாய்க்கா ல்களான கண்டம்பாக்கம் வாய்க்கால், மரகதபுரம் வாய்க்கால் மற்றும் ஆழங்கால் வாய்க்கால், தெளிமேடு என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றில் இடது கரையில் பிரியும் நேரடி பாசன வாய்க்கா ல்களான பெரும்பக்கம் வாய்க்கால், விழுப்புரம் வாய்க்கால், கோலியனூர் வாய்க்கால், கப்பூர் வாய்க்கால், வழுதரெட்டி வாய்க்கால் மற்றும் கண்டம்பாக்கம் வாய்க்கால் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    தற்போது, எல்லீஸ் அணை க்கட்டு சேதம் அடைந்து உள்ளதால் ஆழங்கால் வாய்க்கால் மூலம் பயன் பெறும் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஏதுவாக கண்டம்பா க்கம் வாய்க்கால் தூர்வாரி ஆழங்கால் வாய்க்காளுடன் இணைப்பதற்கு உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிக ளிடம் கூறினர். ஆய்வின்போது, செய ற்பொறியாளர், பொதுப்ப ணித்துறை (நீ.வ.ஆ) ஷோ பனா, திருவெண்ணைநல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஓம் சிவசக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • சோழவந்தானில் பாசன கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.
    • விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் விவசாய பூமியாகும். இங்கு முல்லை பெரியாறு பாசன நீர் மூலம் 3 போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தின் களஞ்சியமாக விளங்கும் சோழவந்தானில் பொதுப்பணித்துறை அதி காரிகளின் மெத்தனத்தால் விவசாயம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    சோழவந்தானில் உள்ள வடகரை கண்மாயில் இருந்து வைகை ஆறு வரை 40அடி கால்வாய் முற்றிலும் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள 200 ஏக்கருக்கு மேற் பட்ட விவசாய நிலங்கள் தண்ணீர் வசதி பெறமுடியாமல் உள்ளன. மேற்கண்ட கால்வாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனால் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படாததால் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்க வலை விரித்து வருகின்றன.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மழையின்போது ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் 40 அடி கால்வாயை தூர்வாரி தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • நத்தக்காடையூரில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • அரசாணை 276-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    காங்கயம் :

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதி வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை 276-ஐ ரத்து செய்ய கோரியும், மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பழைய கட்டுமானங்களை இடிக்க கூடாது என்றும், காவிரி தீர்ப்பின்படி நீர் நிர்வாகம் உரிய முறையில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் கீழ்பவானி பெயரல்ல - எங்கள் உயிர் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நத்தக்காடையூர், ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில் நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கீழ்பவானி பாசன விவசாயிகள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    • விவசாயிகள் திருக்கருகாவூர் பிரிவு வாய்க்கால் மற்றும் வெட்டாற்றை தூர்வாரி தர வேண்டும் என்றனர்.
    • இந்த பணிகளுக்காக 240 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அம்மாபேட்டை வட்டத்தில் நெடுந்தெரு பகுதியில் தேவரா யன்பேட்டை வாய்க்கால், காவளூர் பகுதியில் வடக்குராஜன், தெற்குராஜன் வாய்க்கால், வெண்ணுகுடி பகுதியில் ரெகுநாதகாவேரி உள்பட பாசன வாய்க்காலில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

    அப்போது விவசாயிகள் சிலர் அதிகாரிகளை நேரில் சந்தித்து திருக்கருகாவூர் பிரிவு வாய்க்கால் மற்றும் வெட்டாற்றை தூர்வாரி தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    தொடர்ந்து காவளூர் பகுதியில் வெட்டாற்றில் புதர் மண்டிய பகுதிகளை பார்வையிட்ட அதிகாரிகள் வெட்டாற்றை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.

    அப்போது கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் ரூ.20 கோடி மதிப்பில் 1068 கி.மீ. நீளத்துக்கு 189 பணிகள் தூர்வாருவதற்காக எடுத்து கொள்ளப்பட்டது. இந்த பணிகளுக்காக 240 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தேவைகேற்ப பொக்லைன் எந்திரங்கள் அதிகரிக்கப்படும்.

    மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது காவிரி வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற் பொறியாளர் சிவக்குமார், வெண்ணாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் மதனசுதாகரன், உதவி செயற்பொறியாளர் மலர்விழி உதவி பொறியா ளர்கள் செல்வபாரதி, சபரிநாதன், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
    • மின் மயானத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில் தற்போது கிராம சபை கூட்டம் நடைபெறுவது போன்று பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் நகராட்சியில் வார்டு எண் - 6 க்கான நகரசபை கூட்டம் ராயர்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி,தலைமை வகித்தார்.நகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ்,சுகாதார ஆய்வாளர் சங்கர்,பணி மேற்பார்வையாளர் ராசு,கணக்காளர் சசிகுமார், மற்றும் வார்டு பொதுமக்கள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில்,கரையான்புதூர் சக்தி நகரில், கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும், கிருஷ்ணா நகர் பகுதியில் போர்வெல், அமைத்து சப்பை தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும், கரையான் புதூரில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும், ராயர்பாளையம் மயானத்திற்கு போர் வசதி செய்து தர வேண்டும், பாசன வாய்க்காலில் கோழிக் கழிவுகள் போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை அருகே அமைய உள்ள மின் மயானத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதே போல வார்டு எண் 7-க்கான நகரசபை கூட்டம் ராயர்பாளையம் மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகர் மன்ற உறுப்பினர் கனகுமணி துரைக்கண்ணன் தலைமை வகித்தார்.நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அபிராமி நகரில் தெரு விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் ராயர்பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பராமரிக்க வேண்டும், தெருவிளக்குகள் பழுதடைந்ததை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், பச்சாபாளையத்தில் நீர்நிலை அருகே மின் மயானத்தை அமைக்காமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • நிலையூர் கால்வாயை பாசன கால்வாயாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிரச்சினைகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டரிடம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பல்வேறு கோரிக்கைகள் விடுத்தார்.

    அதில் ஒன்றாக நிலையூர் கால்வாயை பாசன கால்வாயாக மாற்றி மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதைப்போல திருப்பரங்குன்றம் பகுதிக்கும் நிரந்தரமாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் எம்எல்.ஏ. கோரிக்கை விடுத்திருந்தார்.

    அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் இன்று சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர் இப்பகுதியில் நிலையூர் கால்வாயை பாசன கால்வாயாக மாற்றி வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும், திருநகர் அண்ணா பூங்கா மைதானத்தை சிந்தடிக் ஹாக்கி மைதானமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    ஆலோசனை யின்போது இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே. சந்திரன் உள்பட பலர் இருந்தனர்.

    • பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.
    • வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :

    பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதனையொட்டி பாசன தண்ணீர் கடை மடை வரை சென்றடைய வேண்டும் என்பதற்காக பல்லடம் பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி அந்தந்த பாசன சபைகள் மூலம் நடைபெற்று வருகிறது.

    இதனை பொள்ளாச்சி பி.ஏ.பி. தலைமை செயற்பொறியாளர் ரவி நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மாபாளையம் பிரிவில் உள்ள அரசங்காடு பகுதியில் உள்ள அமுக்குபாலம் இறங்கி இருப்பதால் அதனை சீரமைக்கும் பணியை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பல்லடம் உதவி செயற்பொறியாளர் ஆனந்தபாலதண்டபாணி, உதவி பொறியாளர் சியாமளா, பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பாசன திட்ட உதவியாளர்கள் உதயகுமார், ராஜ்குமார், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×