search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PAP"

    • வாகனங்கள் ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ரோட்டில் அதிக அளவு செல்கின்றன.
    • பாலத்தின் மீதுள்ள ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே தளியில் இருந்து எரிசனம்பட்டி வழியாக தேவனூர்புதூர் வரை செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது.திருமூர்த்திமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் வாகனங்கள், ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ரோட்டில் அதிக அளவு செல்கின்றன.

    இந்த ரோட்டில் தீபாலபட்டி அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது. இந்த கால்வாய் மீது கட்டப்பட்ட பாலம் ,தொடர் பயன்பாடு, நீண்ட காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாதது உள்ளிட்ட காரணங்களால் வலுவிழந்து வருகிறது.

    பாலத்தின் மீதுள்ள ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அருகிலுள்ள குடிநீர் குழாய் உடைப்பில் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி அப்பகுதியில் தேங்குவது பாலத்தின் உறுதித்தன்மையை பாதிக்கிறது.இவ்வாறு படிப்படியாக வலுவிழந்து வரும் பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டுனர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் கூறுகையில், தளி- எரிசனம்பட்டி ரோட்டில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே பி.ஏ.பி., பாலத்தை புதுப்பிக்க வேண்டும். உடனடி நடவடிக்கையாக ஓடுதளத்தை சீரமைக்காவது நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்தாண்டு டிசம்பர் 28ல் நீர் திறக்கப்பட்டது.
    • நீர் கசிவை தடுக்க ரூ. 72 கோடி செலவில் நடப்பாண்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    உடுமலை :

    பரம்பிக்குளம் - ஆழியாறு 3ம் மண்டல பாசனத்திற்கு ட்பட்ட 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்தா ண்டு டிசம்பர் 28ல் நீர் திறக்கப்பட்டது. 4 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு வருகிற 22ல் நிறைவு செய்ய ப்படுகிறது. திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாயில் நீர் கசிவை தடுக்க ரூ. 72 கோடி செலவில் நடப்பாண்டு பணி மேற்கொள்ள ப்படுகிறது.பாசனம் நிறைவு பெற்றதும் உடனடியாக பணியை துவக்கவும், வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் நிறைவு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பயன்பெறும் 5 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. தினமும் 21 மில்லியன் கன அடி நீர் தேவை உள்ளது.

    தற்போதைய நிலவரப்படி அணையில் மொத்தமுள்ள, 60 அடியில் 28.69 அடி நீரும், மொத்த கொள்ளளவான 1,337 மில்லியன் கனஅடியில் 802.86 மில்லியன் கன அடிநீர் மட்டுமே இருப்பு உள்ளது.நடப்பாண்டு கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பராமரிப்பு பணி முடிய 4 மாதமாகும். குடிநீர் மற்றும் அணை உயிரினங்கள், வன விலங்குகளுக்கு தேவையான அளவு நீர் இருப்பு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து பி.ஏ.பி., தலைமை பொறியாளர் முத்துசாமி கூறுகையில், தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக ஏப்ரல் 30ந் தேதி வரை தண்ணீர் பெறப்படும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை. விவசாயி கள் கோரிக்கை அடிப்ப டையில், பாசன காலம் இரு நாட்கள் நீட்டிக்கப்ப ட்டுள்ளது என்றார்.

    • பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.
    • குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசடைந்து விட்டது.

    குடிமங்கலம் : 

    பி.ஏ.பி., வாய்க்கால் ஓரங்களில் திருட்டுத்தனமாக மது, போதை வஸ்து விற்பது, மரங்களை தீ வைத்து எரிப்பது, வெட்டி கடத்து வது, வெள்ளை வேளாண் மரத்தில் பட்டை உரிப்பது, தண்ணீர் திருட்டு, கொலை செய்துவாய்க்காலில் வீசுவது, தற்கொலை செய்து கொள்வது என பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.வாய்க்காலில்இருந்து மீட்கப்படும்உடல்கள் அழுகி விடுவதால்இறப்பு க்கானமுழுமையான காரணத்தையும் கண்டறிய முடிவதில்லை. போலீசாரும் கண்டு கொள்வதில்லை. வாய்க்கால் முழுக்க உடைந்த மதுபாட்டில்கள், குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர்மாசடைந்து விட்டது. கால்நடைகள் கூட குடிக்க தகுதியற்றதாக மாறி வருகிறது.பல இடங்களில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கழிவுநீர் நேரடியாக வாய்க்காலில் கலக்கப்படுகிறது. சிலர் வீடு, காம்பவுண்ட் சுவர் கட்டி குடியிருந்து வருகின்றனர். செப்டிக் டேங்க் கூட வாய்க்காலில் கட்டப்பட்டு ள்ளது. சில இட ங்களில் வாய்க்காலையே காணவில்லை.பாசனத்தை முறைப்படுத்தவும், வா ய்க்காலை கண்காணிக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், 134 பாசன சபை தலைவர்கள், 876 ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பாசன சபை தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பது பகிர்மான குழு தலைவர்கள், ஒரு திட்ட குழு தலைவர் உள்ளனர். ஆனாலும் வாய்க்காலை கண்காணிக்கவும் சட்டவிரோத செயல்களை தடுக்கவோ யாரும் குரல் கொடுப்பதில்லை என்ற மனக்குறை விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி நொச்சிப்பாளையம் பிரிவு திருவள்ளுவர் நகர் சாலையில் வசிக்கும் செல்வகுமார் என்பவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்,திருவள்ளுவர் நகரில் உள்ள சத்துணவு அங்கன்வாடி மையத்தின் பின் நீண்ட நெடுங்காலமாக பி.ஏ.பி., வாய்க்கால் பயன்பாட்டில் இருந்து வருகிறது.இக்கால்வாய் மேற்புறமுள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர், கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட 2, 3 முறை முயற்சி மேற்கொண்டனர். மக்களின் ஆட்சேபனையை தொடர்ந்து அவர்களது முயற்சி கைவிடப்பட்டது.தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி செய்கின்றனர். இது குறித்து கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.
    • தண்ணீர் திருட்டு அபரிமிதமாக நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.

    திருமூர்த்தி அணையிலி ருந்து பாசனத்திற்கு நீர் செல்லும், 132 கி.மீ., நீளம் உள்ள பிரதான கால்வாய், ஆயிரம் கி.மீ., நீளம் உடைய கிளைக்கால்வாய்கள் மற்றும் பகிர்மான கால்வாய்களில், நேரடியாகவும், ஓஸ் அமைத்தும், கரையோரம் கிணறு அமைத்து, சைடு போர் முறை என, தண்ணீர் திருட்டு அபரிமிதமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை கட்டுப்படுத்தவும், பாசன விவசாயிகளுக்கு முறையாக பயிர் சாகுபடிக்கு உரிய நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

    உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், திருப்பூர், கோவை மாவட்டங்களில், பி.ஏ.பி., கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கை குழுவினர், கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கடந்த பிப்., 27ம் தேதி நிலவரப்படி, கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பி.ஏ.பி., பாசனம் உள்ள வருவாய் கிராமங்களில், மொத்தம், 2,069 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், பாசன கால்வாய்களுக்கு அருகில், 2,895 கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. விதி மீறி மின் இணைப்பு பெற்றதாக, 1,004 கிணற்றின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், 884 கிணறுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், 780 கிணறுகளில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டது. அதோடு, 288 கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்க நோட்டீஸ் வினியோகிக்க ப்பட்டுள்ளது. தற்போது வரை,21 கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்ப ட்டுள்ளது. விதிமீறல் தொடர்பாக, 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கையகப்படுத்திய நிலங்களுக்கு தற்போது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
    • வாய்க்கால்களை உடைக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றியச் செயலாளா் வை.பழனிசாமி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாவட்டம் பல்லடம் வட்டம் பூமலூா் கிராமத்தில் பிஏபி. பாசனத் திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு தற்போது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆகவே பூமலூா் கிராமத்தில் பிரதான வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்களுக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாமளாபுரம் கிராம நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தின் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- பிஏபி., வாய்க்கால்களிலும், கிளை வாய்க்கால்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் ஒரு சில இடங்களில் கிளை வாய்க்கால்களையும் சோ்த்து கம்பிவேலி போடுகின்றனா். மேலும் கிளை வாய்க்கால்களில் மண்ணை அப்புறப்படுத்துவதால் கரைகளில் உடைப்பும் ஏற்படுகிறது. ஆகவே, பிஏபி., வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாய்க்கால்களை உடைக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

    • இடைவெளியின்றி மூன்றாம் சுற்றுக்கு நீர் வழங்கப்படுகிறது.
    • பிரதான கால்வாய் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப் படும் என்றனர்.

    உடுமலை :

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று       வருகின்ற ன. நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 3ம் மண்டல பாசனத்திற்கு கடந்த டிசம்பர் 28ந் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.

    இதன் வாயிலாக இரு மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, வருகிற ஏப்ரல் 27-ந்தேதி வரை 120 நாட்களுக்குள், உரிய இடைவெளி விட்டு 4 சுற்றுக்களில் 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் மூன்றாம் மண்டலம் முதல் சுற்று முடிந்து 7நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டது. இரண்டாம் சுற்று நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து இடைவெளியின்றி மூன்றாம் சுற்றுக்கு நீர் வழங்கப்படுகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் மூன்றாம் சுற்றுக்கு இடைவெளியின்றி திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 21 நாட்கள் நீர் வழங்கப்படும். பாசன காலத்தை விரைந்து முடிந்து காண்டூர் கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

    • 4 வயது குழந்தை காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் பரவியது.
    • காங்கயம் காவல் துறையினா் கழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக வாய்க்காலில் அதிக அளவு தண்ணீா் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தோ்த் திருவிழாவுக்கு வந்திருந்த ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 4 வயது குழந்தை காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் பரவியது. இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நீா்வளத் துறை மூலம் பிஏபி., வாய்க்காலில் தற்காலிகமாக தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது.

    வெள்ளக்கோவில் , காங்கயம் காவல் துறையினா் கழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இருப்பினும் குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்தது உறுதிப்படுத்தபடாததால், வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெறுகிறது.
    • அரசுக்கு பரிந்துரை செய்து கருத்துரு பெற்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து நான்கு மண்டல பாசனத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அதில் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றுடன் பாசன காலம் நிறைவு பெறுகிறது.

    தொடர்ந்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் எப்போது திறக்கப்படும் என பி.ஏ.பி., விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் திருமூர்த்தி நீர் தேக்க முன்னாள் திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் முன்னாள் பகிர்மான குழு தலைவர்கள், பாசன சபை தலைவர்கள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் தேவராஜனை சந்தித்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினர். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    இது குறித்து திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறியதாவது:-

    திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.

    வருகிற 28ந் தேதி தண்ணீர் திறந்து நான்கு சுற்றுகளாக தண்ணீர் வினியோகிக்க வேண்டும். மொத்தம் 7,600 மில்லியன் கனஅடி நீர் வினியோகிக்க வேண்டும். இதன் வாயிலாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 94,500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். அரசுக்கு பரிந்துரை செய்து கருத்துரு பெற்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • நான்கு மண்டலங்களாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • காங்கயம் தாலுகாவிலுள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    உடுமலை : 

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதன் வாயிலாக கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, சூலூர் தாலுகா மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் தாலுகாவிலுள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நான்கு சுற்றுக்கள் உரிய இடைவெளி விட்டு டிசம்பர் 24 வரை 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் முதல் இரண்டு சுற்றுக்கள் இடைவெளியின்றி வழங்கப்பட்டு மூன்றாம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் நீர் திறக்கப்பட்டது.

    கடந்த மாதம் 25ந் தேதி, இறுதிச்சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டு 21 நாட்கள் வழங்க திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் நீர் வழங்கப்பட்ட நிலையில் பாசனம் நிறைவு பெற உள்ளதால் திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாயில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெற உள்ளதால் பிரதான கால்வாயில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியிலுள்ள ஒரு சில கால்வாய்களுக்கு மூன்று நாட்கள் வரை நீர் வழங்க வேண்டியுள்ளது. அதற்கு பின் முழுமையாக நீர் திறப்பு நிறுத்தப்படும்.

    திருமூர்த்தி அணையில் நீர் சேகரிப்பு , கால்வாய் பராமரிப்பு மற்றும் கால்வாய்களில் மடை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்புள்ளது என்றனர்.

    • பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.
    • வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :

    பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதனையொட்டி பாசன தண்ணீர் கடை மடை வரை சென்றடைய வேண்டும் என்பதற்காக பல்லடம் பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி அந்தந்த பாசன சபைகள் மூலம் நடைபெற்று வருகிறது.

    இதனை பொள்ளாச்சி பி.ஏ.பி. தலைமை செயற்பொறியாளர் ரவி நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மாபாளையம் பிரிவில் உள்ள அரசங்காடு பகுதியில் உள்ள அமுக்குபாலம் இறங்கி இருப்பதால் அதனை சீரமைக்கும் பணியை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பல்லடம் உதவி செயற்பொறியாளர் ஆனந்தபாலதண்டபாணி, உதவி பொறியாளர் சியாமளா, பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பாசன திட்ட உதவியாளர்கள் உதயகுமார், ராஜ்குமார், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • பருவமழையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
    • காங்கயம் பகுதிகளில் வறட்சி நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி பி.ஏ.பி., அலுவலகத்தில் நடந்தது.

    இதில் பாசன சபை தலைவர்கள் பேசுகையில், பருவமழையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. வரும் 26ந் தேதி முதல் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நீர் வழங்க வேண்டும்.வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளில் வறட்சி நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும். சுற்று எண்ணிக்கையை குறைத்தால் நாட்கள் எண்ணிக்கையை அதிகரித்து கூடுதல் தண்ணீர் வழங்க சாத்தியம் உள்ளதா என ஆலோசிக்க வேண்டும்.இரண்டாம் மண்டல பாசனத்துக்கு சுற்று எண்ணிக்கை குறைக்க காண்டூர் கால்வாய் பணிகள் தான் காரணமா அல்லது உபரியாக நீர் வீணாக சென்றதால் குறைத்து வழங்கப்படுகிறதா என விளக்கமளிக்க வேண்டும்.கடந்தாண்டை போன்று எத்தனை சுற்று தண்ணீர் வழங்கலாம். இவ்வளவு எடுக்கிறோம், எத்தனை நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் உள்ளிட்ட விபரங்கள் முறையாக தெரிவிக்க வேண்டும். சமமான நீர் பங்கீடு வழங்க வேண்டும். நீர் வழங்குவது குறித்து அட்டவணை அனைவருக்கும் வழங்க வேண்டும்.

    கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் கூறுகையில்,காண்டூர் கால்வாய் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் 5 சுற்றுக்கு பதிலாக 4 சுற்று தண்ணீர் வழங்கலாம். அதன் பின் உரிய இடைவெளி கிடைப்பதால் பணிகள் தாமதமின்றி மேற்கொள்ள முடியும்.திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயிகள் கோரிக்கையின் படி, வரும் 26ந் தேதி தண்ணீர் திறப்பது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.காண்டூர் கால்வாய் பணிகள் தாமதமின்றி முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுற்று எண்ணிக்கை குறைக்க கேட்டோம். வாட்டர் பட்ஜெட் போட்டதும் எவ்வளவு மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படும்.

    திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறுகையில், வரும் 26ந் தேதி தண்ணீர் திறக்க பாசன சபை தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனங்களுக்கு ஒரு சுற்று குறைத்து தலா 4 சுற்று வீதம் தண்ணீர் வழங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதிகாரிகள் பேசுகையில், மொத்தம் 72 கோடி ரூபாய் செலவில் காண்டூர் கால்வாய் பணிகளை முடிக்க, 2 ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.அதற்கு பாசன சபை தலைவர்கள், நல்லாறு பகுதியில் மேற்கொண்ட பணிகள் முடிவடைந்த நிலையில், மீதம் உள்ள பணிகளை, ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டால் பாசனம் பாதிக்காது. இது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

    • திருப்பூா் மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
    • நீா் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது.

    திருப்பூர் :

    சுதந்திர தின விழாவையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக குண்டடம் அருகே நந்தவனம்பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டமானது அரசு தொடக்கப் பள்ளி அருகே நடைபெற்றது.

    இதில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. நிா்வாகிகள் தீா்மானம் ஒன்றைக் கொண்டு வந்தனா். இதில், கோவை, திருப்பூா் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் குடிநீா் ஆதாரமாகவும், வேளாண்மை மேம்பாட்டுக்கும் உதவியாக உள்ள பிஏபி. பாசன திட்டம் ஆண்டுக்கு 8 டிஎம்சி. நீா் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்தத் திட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 1 டி.எம்.சி. நீரை ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீா் என்ற பெயரில் கொண்டு செல்ல தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. பிஏபி. திட்டத்தில் ஏற்கனவே ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்கான தண்ணீா் பற்றாக்குறையாக உள்ளது.மேலும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிஏபி. தொகுப்பு அணைகளாக உள்ள வட்டமலைக்கரை அணை, உப்பாறு அணைஆகியவற்றுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆகவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த தீா்மானம் ஊராட்சி மன்றத்தால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    ஊத்துக்குளி ஒன்றியம், சின்னேகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் வினீத் பங்கேற்றாா்.இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    ×