search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gram Sabha meeting"

    • உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி யில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரேவதி பெரிய கருப்பன், பற்றாளர் ரோஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலாளர் பாண்டி திட்டங்கள் குறித்து அறிக்கை வாசித்தார்.

    இதே போல் விக்கிர மங்கலம் ஊராட்சியில் செக்கான்கோவில்பட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் கலியுக நாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்விசெல்வம், பற்றாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார்.

    வாடிப்பட்டி ஒன்றியம் காடுபட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ஒய்யனன் அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் பவுன் முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாக்கியம் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் அறிக்கை வாசித்தார். தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா அய்யப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் முனி யராஜ் அறிக்கை வாசித்தார்.

    மேலக்கால் ஊராட்சியில் தலைவர் முருகேஸ்வரி, வீரபத்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சித்தாண்டி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் விக்னேஷ் அறிக்கை வாசித்தார்.

    திருவாலவாயநல்லூர் ஊராட்சியில்தலைவர் சகுபர் சாதிக் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாலிக் முன்னிலை வகித்தார். செயலாளர் வேலன் அறிக்கை வாசித்தார்.

    இதே போல் முள்ளி பள்ளம், சி.புதூர், சித்தாலங்குடி, ரிஷபம், நெடுங்குளம், திருவேடகம், இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம், குருவித்துறை மற்றும் செல்லம்பட்டி ஒன்றியத்தில் சக்கரப்ப நாயக்கனூர், எரவார்பட்டி, பானாமூப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    • குப்பைகளை எரிக்கும் எந்திரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
    • அனைத்து வீடுகளும் குடிநீர் வசதி பெற்ற ஊராட்சி என பொதுமக்களிடம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி-புக்குளிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.

    மேலும் இதில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மற்றும் திருப்பூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்), மங்கலம் பகுதி கனரா வங்கி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குப்பைகளை எரிக்கும் எந்திரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.அதேபோல சுமார் 40லட்சம் மதிப்பிலான குப்பைகள் எரிக்கும் எந்திரத்தை தமிழக அரசு மங்கலம் ஊராட்சிக்கு வழங்க வேண்டும் , திருப்பூர் மாநகராட்சி எல்லையில் இருந்து மங்கலம் ஊராட்சி எல்லை வரை உள்ள நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் தார் சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மங்கலம் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கியதை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் அனைத்து வீடுகளும் குடிநீர் வசதி பெற்ற ஊராட்சி என பொதுமக்களிடம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.

    • திண்டுக்கல் மாவட்ட த்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.
    • கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட த்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.

    கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணி க்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்க வைத்தல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கை கள், பிளாஸ்டிக்கை தவிர்த்து பொருட்கள் பயன்படுத்து வதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் கழிவு மேலா ண்மை குறித்த விழிப்பு ணர்வு, பொது அறிவிப்புகள், ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    எனவே, ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராம சபைகளில் தவறாது கலந்து கொண்டு விவாத த்தில், தங்களது கருத்து க்களை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்து ள்ளார்.

    • கருப்பம்புலம் ஊராட்சியில்காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடந்தது.
    • 30 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலம் ஊராட்சியில்காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் முருகையன் வரவேற்றார்.

    வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு, பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், 100 நாள் திட்ட பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் பணிகள் விரைந்து நடை பெற்று வருகிறது.

    அடுத்த ஆண்டிற்குள் பணிகள் முடிக்கபட்டு தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

    100 நாள் வேலைத்திட்ட பணியில்ஊதியம் வழங்குவதில் தேக்க நிலைஇருந்தது.

    தற்போது அது சரி செய்யப்பட்டு அவரவர் வங்கி கணக்கில் ஊதியம் ஏற்றப்படும். மேலும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு பெற்றவர்கள் உடனடியாக பணியை முடிக்க வேண்டும் .

    அப்படி முடித்தால் தான் மற்றவர்களுக்கு வீடு கிடைக்கும்.

    எனவே விரைந்து வீடு கட்டும் பணியை முடிக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய ஆணையர்ராஜு பேசினார்.

    கருப்பம்புலம் ஊராட்சியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு வீட்டு வரியை இனி ஊராட்சி மன்றமே செலுத்தும் என தீர்மானம் நிறைவே ற்றப்பட்டது.

    சென்ற ஆண்டு கிராம சபா கூட்டத்தில் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி கிடையாது என்று அறிவிப்பு செய்து நடைமுறைப்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூட்டம் முடிவில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தியராஜன் நன்றி கூறினார்.

    • முதுகுளத்தூரில் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • முடிவில் ஊராட்சி செயலர் பொன்மணி நன்றி கூறினார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கலகுறிச்சி ஊராட்சியில் தலைவர் செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா முன்னிலையில் காந்தி ெஜயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெங்கலகுறிச்சி ஊராட்சி தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகள், இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்ட உதவி எண்ணை கிராம சபைக் கூட்டத்தில் வெளியிட்டு ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இக்கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் பானுமதி முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் கலைச்செல்வி, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சேதுராமன், கிராம உதவியாளர் செண்பகவள்ளி மற்றும் வெங்கலகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பொன்மணி நன்றி கூறினார்.

    • 38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 253 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
    • காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    உடுமலை:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 253 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம். தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கி.ஊ), மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • உதயமார்தாண்புரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • நாச்சிகுளம் பகுதிக்கு புதிய நீர்நிலை தேக்க தொட்டி கட்டிதர கோரிக்கை வைத்திருந்தோம்.

    திருத்துறைப்பூண்டி:

    உதயமார்தாண்புரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது நாச்சிக்குளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கிளை துணை செயலாளர் கல்பான் தலைமையிலான பொறுப்பாளர்கள் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கடந்த மே மாதத்தில் குடிநீர் பிரச்சனை காரணமாக காலி குடங்களுடன் ஊராட்சியை நோக்கி கவன ஈர்ப்பு பேரணி நடத்த திட்டமிட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தை அடிப்படையில் பல கோரிக்கைகளை முன் வைத்து சுமூகமாக முடிந்தது.

    அதில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் முக்கிய கோரிக்கையான நாச்சிகுளம் பகுதிக்கு புதிய நீர்நிலை தேக்க தொட்டி கட்டிதர கோரிக்கை வைத்திருந்தோம்.அப்பேச்சுவார்த்தையில் நாச்சிகுளத்திற்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 30,000 லிட்டர் அளவுள்ள புதிய நீர் தேக்க தொட்டி கட்ட அனுமதி கிடைத்திருப்பதாக சொல்லப்பட்டது.

    இத்தொட்டியை விரைவாக கட்டினால் தான் நாச்சிகுளம் முக்கிய பகுதிகளுக்கு தண்ணீர் பிரச்சனை குறையும்.ஆகையால் ஜல்ஜீவன் திட்டத்தில் அனுமதி கிடைத்துள்ள குடிநீர் தேக்க தொட்டியை விரைவாக கட்டிதர வேண்டும்.

    மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு, புதியசாலை வசதி போன்ற பணிகளை விரைவாக அமைத்து தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து பொதுமக்க ளும் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

    • காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
    • ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட திருவெண்காடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார்.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், உமாமகேஸ்வரி சங்கர் முன்னிலை வகிக்க, திருவெண்காடு ஊராட்சிமன்ற தலைவர்.சுகந்தி நடராஜன் தலைமை வகித்தார்.

    இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

    முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தினை செயல்படுத்தி எல்லா சாலைகளையும் மேம்படுத்தி வருகிறார்.

    அந்த அடிப்படையில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வனபாதி தாமரைகுளம் ரோடு ரூ.49 லட்சம் மதிப்பிலும், தென்பாதி சாலை ரூ.32 லட்சம் மதிப்பிலும், திருவெண்காடு பாத்தம்பள்ளி சாலை ரூ.40 இலட்சம் மதிப்பிலும், பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட கலெக்டர் மூலமாக தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றி தரப்படும்.

    இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    நூறு நாள் வேலை நாட்களை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.

    அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு என்ற பெரிய கொடிய நோய் இன்று எங்கும் பரவக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    இது பரவாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும். வருவதற்கு முன் இதை நாம் தடுக்க வேண்டும். ஆகவே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இந்த கிராம சபை கூட்டத்திலே பிளாஸ்டிக் பயன்படு த்துவ தை தவிர்க்க வேண்டும்.

    அண்ணா பிறந்த நாள் அன்று யாரும் செயல்படுத்த முடியாத 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்குகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தி காட்டியவர் நம் முதல்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மயிலாடு துறை மாவட்ட கூட்டுறவு தலைவர் ஞானவேலன், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர்.கமலஜோதி தேவேந்திரன், ஒன்றியக்குழு துணைத்த லைவர் உஷா நந்தினி பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பி னர்கள் ஆனந்தன், தியாக விஜேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பஞ்சுகுமார், ஜான்சி ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், இளங்கோவன், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரம்
    • போலீசார் சமரசம் செய்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனுர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சி 3- வது வார்டு பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் சாலை மறியல்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி சம்பவ இடத்தில் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நேற்று காந்தி ஜெயந்தி என்பதால் ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கிராமப்புறங்களில் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால் அவர்களுடன் பேசி தீர்வு காணுவதாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • பொன்னாகுளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • இதில் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட பொன்னாகுளம் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் கலந்து கொண்டார்.

    காந்தி ஜெயந்தியை முன் னிட்டு பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம் சிறப் பாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் பொன்னாகுளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சிவக ங்கை சட்டமன்ற உறுப்பி னர் பி.ஆர்.செந்தில்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கிராம சபை கூட்டத்தில் அவர் பேசும்போது "பெற் றோர்கள் தங்கள் பிள்ளை களை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும். தீய வழியில் சென்று விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு பெற் றோர்களுக்கு உண்டு என் றும் தற்போது பரவி வரும் நோய்களில் இருந்து கிராம மக்கள் கவனமாக பாது காத்துக் கொள்ள வேண்டும். சுய வைத்தியம் செய்து கொண்டு அலட்சியமாக இருந்து விடாமல் உரிய மருத்துவர்களை அணுகி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்றும் கூறி னார்.

    இதில் சிவகங்கை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வமணி, பொன்னா குளம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகை சாமி, சித்தலூர் பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கமுதி அருகே முதல்-அமைச்சரின் எல்லாருக்கும் எல்லாம் திட்டம் குறித்து கீழராமநதி கிராமசபை கூட்டத்தில் விளக்கம் அளித்தனர்.
    • துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராம லிங்கம் முன்னிலை வகித்தார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பழனிஅழகர்சாமி முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் மைதீன், கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன், ஊராட்சி செயலர் முத்துராமு உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் முதல்-அமைச்சரின் எல்லாருக்கும் எல்லாம் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண் ஆகிய திட்டங்கள் குறித்து, ஊராட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    இதே போல் தலைவநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராம லிங்கம் முன்னிலை வகித்தார். இதில் துணைத் தலைவர் ஜெயராமன் கிராம நிர்வாக அலுவலர் புனிதா, ஊராட்சி செயலர் முகம்மதுஹக்கீம் உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பாக்குவெட்டி, ஆனையூர், பேரையூர், புதுக்கோட்டை, இடையங்குளம் உள்பட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    • சக்கரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • முடிவில் ஊராட்சி செயலர் காசி நாதன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மன்ற தலைவர் யாழினி புஷ்ப வள்ளி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் வரும் நிதியாண்டில் நிறை வேற்றப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப் பட்டது. 100 நாள் வேலை திட்டம் சம்பந்தமான குறைகள் கிராம மக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    பொது மக்கள் குடிநீர், மின் வசதி, கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். முடிவில் ஊராட்சி செயலர் காசி நாதன் நன்றி கூறினார்.

    ×