என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணிக்க நத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சித் தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்ற காட்சி.
100 நாள் வேலை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம்
- பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மாணிக்கநத்தம் ஊராட்சி சார்பில் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மாணிக்கநத்தம் ஊராட்சி சார்பில் சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வசந்தகுமாரி சரவணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் உதயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2023- 2024 -ம் நிதிஆண்டுக்கான வேலைக்கான பணிகள் தயாரித்து கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.






