என் மலர்
நீங்கள் தேடியது "கிராம சபை கூட்டம்"
- வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார்.
- பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள 10,000 கிராம பஞ்சாயத்துகளில் பேசுவது நேரலையாக ஒளிபரப்பாகும்.
சென்னை:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை, தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள 10,000 கிராம பஞ்சாயத்துகளில் பேசுவது நேரலையாக ஒளிபரப்பாகும்.
குறிப்பாக, கிராம சபைக் கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதில் முதன்மையாக கருதப்படும் மூன்று தேவைகளை தேர்வு செய்வது அதனை நிவர்த்தி செய்வதுதான் அரசின் நோக்கம். நம்ம ஊரு, நம்ம அரசு திட்டத்தின் கீழ் இந்த மூன்று தேவைகளை குறைவான கால கட்டத்தில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உதாரணத்திற்கு, குடிநீர் பிரச்சனை, தெரு விளக்கு, குப்பை உள்ளிட்டவை ஆகும். மேலும், கிராமங்களில் இழிவுப்படுத்தும் பொருள் தரும் சாதி பெயர்கள் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் பொது உட்கட்டமைப்பு போன்றவற்றுக்கு வைக்கப்பட்டுள்ள பெயரை நீக்கி வேறு பெயர்களை சூட்டுவது குறித்து கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் விவாதிக்கப்படும்.
குறிப்பாக, ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணாங்குளம், பறையர் தெரு, சக்கிலியர் தெரு போன்ற பல்வேறு பெயர்கள் மாற்றப்பட வேண்டியவை தொடர்பாக கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுவார்கள். அவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும். இதனை பரிசீலனை செய்து அரசு முடிவு எடுக்கும்.
கிராமங்களில் உள்ள மிக ஏழ்மையான குடும்பங்களை கிராம சபை மூலமாக தேர்வு செய்து தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக நலிவுநிலை குறைப்பு நிதி கொடுத்து அவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்காக முன்னுரிமை பட்டியல் தயார் செய்து கிராம சபையில் ஒப்புதல் பெறுதல் இதற்கென தயாரிக்கப்பட்ட நலிவுநிலை குறைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும். கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்றத்தின் நிதி, வரவு-செலவு மற்றும் தணிக்கை அறிக்கைகள் விவாதிக்கப்படும். தூய்மை பாரத இயக்கம் திட்டம், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, கிராம புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம் குறித்தும் விவா திக்கப்படும். கிராமப்புற மக்கள் தங்களின் உரிமைகளை அறிந்திடவும் தேவைகளை கோரிப் பெறுவதற்காகவும் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. ஒரு ஆண்டில் 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது.
- மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 157-ஆம் பிறந்தநாளையொட்டி நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் நாள் உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைகள் மிகவும் வலிமையான அமைப்புகள் ஆகும். அவற்றில் எடுக்கப்படும் முடிவுகளை உச்சநீதிமன்றம் கூட மதிக்கும் என்பதால், அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிக்க கிராமசபைக் கூட்டங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் இன்றைய தலையாய பிரச்சனை மது மற்றும் போதை ஒழிப்பு தான். ஒருபுறம் தெருத்தெருவாக மதுக்கடைகளைத் திறந்து இளைஞர்களையும், மாணவர்களையும் அரசே குடிகாரர்களாக்கி வரும் நிலையில், இன்னொருபுறம் ஆளுங்கட்சியின் ஆசிகளுடன் செயல்படும் போதை வணிகர்கள் கிராமங்கள் வரை கஞ்சா, அபின், கோகெயின், பிரவுன் சுகர், எல்.எஸ்.டி, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை கொண்டு வந்துவிட்டனர்.
மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது. மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
- அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் 01.11.2022 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது
- சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் 01.11.2022 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.இதில் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதி க்கப்படும்.
இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து த்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 1-ந் தேதி நடக்கிறது.
- பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அரசு விதித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிமுறைகளுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளையும் கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.
இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணி புரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி வரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல், பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்கள், மக்கள் நிலை ஆய்வு, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்ட பயனாளிகள் தேர்வு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்க அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளாட்சி தினமான வருகிற 1-ந் தேதி நடக்கிறது
- அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
நாகர்கோவில்:
உள்ளாட்சி தினமான வருகிற 1-ந் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்க ளுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சி களிலும் 1-ந் தேதி பகல் 11 மணிக்கு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து ரைக்கப்பட உள்ளது.அரசால் பல்வேறு துறை களின் மூலமாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்ட ங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்து ரைக்கவும், பொது மக்க ளுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர்அரவிந்த் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
- கலெக்டர் உத்தரவு
- உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடவடிக்கை
திருப்பத்தூர்:
நவம்பர் மாதம் 1-ந்தேதி உள் ளாட்சிகள் தினம் கொண் டாட தெரிவிக்கப்பட்டுள் ளது. அதன்படி அன்று கிராம சபை கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எனவே திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிக ளிலும் வருகிற 1-ந் தேதி பகல் 11 மணிக்கு தவறாமல் கிராம சபை கூட்டப்பட வேண்டும். கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப் பாக பணிபுரிந்த ஊ ஊழியர் களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக் கும் மகளிர் சுய உதவிக் குழுக் களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழக் கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், வடகி ழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடி யிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கிராம சபைக்கூட்டத்தில் விவாதிக் கப்பட வேண்டும்.
கிராமசபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையா ளர்களாகவும், கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அள வில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித் துள்ளார்.
- இறுதியில், இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளி வருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- கல்லூரியில் சேர்வதை கண்காணிக்கும் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
திருப்பூர்,அக்.30-
மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூரில் நடந்த கூட்டத்தில் பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியபடி பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் செயலியில் (TNSED Parent App) வருகை பதிவு, பள்ளிகளில் திட்டமிடுதல் சார்ந்த விவரங்களை பதிவேற்றினர்.
இதன்மூலமே பள்ளி வளர்ச்சிக்கு விவாதிக்கப்பட்ட பொருள், தீர்மானங்கள் பெற்றோர்களுக்கு பகிரப்பட்டன. மேலும் பெற்றோர்களிடம் காலாண்டு தேர்வு தேர்ச்சி விவரங்களை பகிர்ந்து கற்றல் அடைவு சார்ந்த கலந்தாலோசனை நடைபெற்றது.
கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்த ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளி வருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு உதவ வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து, அதற்கான தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே பிளஸ் 2 முடித்து இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்களில் உயர்கல்வி முகாமில் பங்கேற்ற 47 பேர் உயர்கல்வி சேர முன்வந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர்கள் உயர்கல்வி சேர்ந்துள்ளார்களா, என்று பள்ளி கல்வித்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவ்வகையில் திருப்பூரில் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் 150 பேர் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர் கல்வியை தொடரவில்லை.
இவர்கள் உயர் கல்வியை தொடர உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டி முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களில், 47 பேர் உயர்கல்வி சேர்வதற்கான வாய்ப்புகளை கேட்டறிந்தனர். இதில் 8 பேர் ஐ.டி.ஐ., தொழிற்கல்வியில் சேரவும், 3 பேர் கலை அறிவியல் கல்லூரியில் சேர்க்கை நீட்டிப்பு செய்தால், விண்ணப்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.பலர் நீட், வேளாண் படிப்பு கலந்தாய்வு முடிவுக்கு காத்திருப்பதாகவும், நிச்சயம் உயர்கல்வி தொடர்வதாக உறுதியளித்தனர். இவ்வாறு மொத்தம் 47 பேர் உயர்கல்வி தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தேர்ச்சியடையாத மாணவர்கள் பலர் பியூட்டிஷியன், டெய்லரிங், கம்ப்யூட்டர் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். 2 கல்விக்கடன் பெறுவதற்கான வழிமுறைகளை கேட்டறிந்தனர்.கல்லூரியில் சேர்வதை கண்காணிக்கும் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி முகாமில் பங்கேற்க தவறியவர்கள் வெள்ளிக்கிழமை நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்கேற்று தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுள்ளனர்.
- பொறுப்பு அலுவலர் மூலம் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும்.
- பயனடைந்த விவசாயிகளின் விபரம் பார்வைக்கு வைக்கப்படும்.
நவம்பர் மாதம் 1-ந்தேதி (நாளை) உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதையொட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக வேளாண் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, நவம்பர் ஒன்றாம் தேதி நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும்.
மேலும், முக்கிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன் துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். நடப்பு ஆண்டில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரம் கிராம வாரியாக தயாரிக்கப்பட்டு அக்டோபர் இரண்டாம் தேதியன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அக்டோபர் இரண்டாம் தேதிக்குப் பின் வேளாண் - உழவர் நலத்துறையின் திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரமும், நவம்பர் ஒன்றாம் தேதியன்று நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். எனவே,கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து விவசாயிகளும் திரளாகப் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.
- உள்ளாட்சி தினத்தையொட்டி நடைபெறுகிறது
பெரம்பலூர்
தமிழக அரசின் உத்தரவின்படி உள்ளாட்சி தினத்தையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது. இதில் துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல், அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல், அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும். மேலும், கிராம சபை கூட்டத்தில் கூட்டப்பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும். கிராம சபை கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் எடுத்துக் கூறிட வேண்டும். கிராம சபை கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் (கிராம ஊராட்சிகள்) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள், மண்டல அலுவலர்களாக கிராம சபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே கிராம சபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்."
- 21 ஊராட்சிகளும் மற்றும் பேரூராட்சிகளிலும் இன்று நடைபெற்றது
- பல்வேறு விஷயங்களை குறித்து கிராம மக்களிடம் விவாதிக்கப்பட்டது.
அன்னூர்:
கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்தில் 21 ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளது. இந்த நிலையில் இன்று உள்ளாட்சி தினத்தையொட்டி ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்-அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இதையடுத்து கிராம சபை கூட்டம் 21 ஊராட்சிகளும் மற்றும் பேரூராட்சிகளிலும் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை கவுரவித்தல், மகளிர் சுய உதவி குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், சஜீவன் திட்டம், பருவமழை முனஎச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்களை குறித்து கிராம மக்களிடம் விவாதிக்கப்பட்டது.
இந்த கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர் நியமனம் செய்ய அனைத்து கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.இந்த கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- நகராட்சிகளில் பகுதி சபா கூட்டம் முதன்முதலாக நடந்தது
- உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடந்தது
வேலூர்:
கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் இன்று நவம்பர் மாதம் 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் 247 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. வேலூர் அருகே உள்ள வெங்கடாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது.
நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர் குப்பம் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலெக்டர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. வாலாஜா ஒன்றியம் முகுந்தராயபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு ,ஆரணி ஆகிய நகராட்சிகளில் பகுதி சபா கூட்டங்கள் முதன் முதலாக இன்று நடந்தன.
திருவண்ணாமலை நகராட்சி 1-வது வார்டு பச்சையம்மன் கோவில் பகுதியில் நடந்த பகுதி சபா கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு மனு வாங்கினார்.
இதேபோல வேலூர் மாநகராட்சி மற்றும் குடியாத்தம், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய நகராட்சிகளிலும் தற்போது பகுதி சபாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் இன்று முதன் முதலாக பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றன.
- கல்குவாரி மூட வலியுறுத்தல்
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் அடுத்த பெருமுகை கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது.இதனை அப்பகுதி மக்கள் புறக்கணித்தனர்.
இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டும் கூட்டம் நடந்த இடத்தில் இருந்தனர்.
கடந்த முறை கிராம சபை கூட்டம் நடந்தபோது பெருமுகை கல் குவாரியை மூட வேண்டும், மக்கள் வசிக்கும் பகுதியில் தொழிற்சாலை அமைத்து கனரக வாகனங்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றபட்டன.
ஆனால் இதுவரை கல்குவாரி மூடப்படவில்லை. வாகனங்கள் அந்த பகுதி வழியாக செல்வது நிறுத்தப்படவில்லை.
ஊராட்சியின் வரவு செலவு கணக்கை கேட்டதற்க்கு இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை என்பதால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.






