என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம்  வட்டார ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
    X

    கோப்புபடம்.

    பல்லடம் வட்டார ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

    • சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டங்கள் வட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் வட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளில், சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலர் புவனேஸ்வரி, அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற சமூக தணிக்கை கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், துணை தலைவர் முத்துக்குமார், அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டங்கள் வட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. இதில் கரைப்புதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், செம்மிபாளையம் ஊராட்சியில் ஷிலா புண்ணியமூர்த்தி, மாதப்பூர் ஊராட்சியில் அசோக்குமார், கரடிவாவி ஊராட்சியில் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் ,கோடங்கிபாளையம் ஊராட்சியில் காவி. பழனிச்சாமி, மாணிக்காபுரம் ஊராட்சியில் நந்தினி சண்முகசுந்தரம், மல்லேகவுண்டம்பாளையத்தில் முத்துக்குமாரசாமி,பருவாய் ஊராட்சியில் ரவிச்சந்திரன்,புளியம்பட்டி ஊராட்சியில் உத்தமராஜ் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×