search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Akash"

    • காப்பீடு திட்டத்தில் பணியாற்றிய சிறந்த தனியார் மருத்துவமனையாக தென்காசி சாந்தி பன்நோக்கு மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டது.
    • கலெக்டர் ஆகாஷ் பாராட்டு சான்றிதழை நிர்வாக தலைவர் டாக்டர் அன்பரசனிடம் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் நடந்த 74-வது குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பணியாற்றிய சிறந்த தனியார் மருத்துவமனையாக தென்காசி சாந்தி பன்நோக்கு மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அதனை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்க சாந்தி பன்நோக்கு மருத்துவமனை நிர்வாக தலைவர் டாக்டர் அன்பரசன் பெற்றுக்கொண்டார்.

    இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டேவிட் செல்லதுரை மற்றும் மருத்துவமனை முதன்மை மருத்துவர் டாக்டர் தமிழரசன் கூறுகையில், இந்த பாராட்டு மற்றும் சான்றிதழ் எங்கள் மருத்துவமனையில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் சமர்ப்பிக்கின்றோம் என்று பெருமையுடன் தெரிவித்தனர்.

    • கலெக்டர் ஆகாஷ் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பதக்கங்களை வழங்கினார்.
    • ரூ.2.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், பயனாளிகளுக்கு வழங்கினார்.

    தென்காசி:

    நாட்டின் 74- வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தேசிய கொடியை ஏற்றினார்.

    அதனைத் தொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு , காவலர்களுக்கான முதல்-அமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.

    தொடர்ந்து, மாவட்டத்தின் சிறப்பாக செயல்பட்ட 29 துறையை சேர்ந்தவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 10 பேர் உள்பட 257 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

    மேலும், 21 பயனாளிகளுக்கு ரூ.2.14 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட கலெக்டர், என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பள்ளி மாணவ- மாணவிகள் நிகழ்த்தி வரும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பாராட்டினார்.

    இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தியாகி சொக்கலிங்கம் பிள்ளை அவர்களின் மனைவி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி லட்சுமிகாந்தன்பாரதி உள்பட பல்வேறு துறையை சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) , பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்பு திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    இந்த கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி மாவட்டம் சார்பாக பொதுப்பிரிவு, பள்ளி கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் இந்த மாதம் நடைபெறவுள்ளது.
    • பொது மக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் நாளைக்குள் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தென்காசி மாவட்டம் சார்பாக பொதுப்பிரிவு, பள்ளி கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் இந்த மாதம் நடைபெறவுள்ளது.

    தற்போது பொதுப்பிரிவு (15 முதல் 35 வயது வரை), பள்ளி (12முதல் 19 வயது வரை), கல்லூரி (17 முதல் 25 வயது வரை) கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் நாளைக்குள் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் விபரங்களுக்கு 04633- 212580 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.65 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
    • கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை யில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நல துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4-மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் ரூ.48 ஆயிரம் மதிப்பிலும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் ரூ.17 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.65 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

    கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 371 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலு வலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவிலான முதல்- அமைச்சர் விளையாட்டு போட்டிகள் வருகிற ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.
    • விளையாட்டு போட்டிகளில் இணையதள பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி கல்லூரி , மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்- அமைச்சர் விளை யாட்டு போட்டிகள் வருகிற ஜனவரி மாதம் தென்காசி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

    இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in என்ற முகவரியில் வீரர்களின் தனி நபர் விவரங்கள், அணி விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

    போட்டியில் திறமையாக செயல்படும் பள்ளி, கல்லூரி மாணவர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள காலி இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் நேரடியாக சேர்த்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

    இப்போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா போட்டிகள், அகில இந்திய அளவிலான குடிமைப் பணியாளர்கள் போட்டிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பப்படுவர்.

    ஒவ்வொரு போட்டியிலும் மாநில அளவில் முதல் 3 இடங்கள் பெறுவோருக்கு பரிசுத் தொகையுடன் முதல்-அமைச்சர் கோப்பை வழங்கப்படும்

    அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக அதிக பதக்கங்கள் பெற்று முதல் 3 இடம் பெறும் மாவட்டங்களுக்கு ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்புக்கான முதல்-அமைச்சர் கோப்பை வழங்கப்படும்.

    மேலும் இணையதள பதிவு செய்தவர்கள் மட்டுமே விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இயலும். எக்காரணம் கொண்டும் வேறு வழிமுறை மூலமாக போட்டிகளில் பங்கேற்க இயலாது.

    இதுகுறித்த மேலும் விபரங்கள் அறிய 7401703454 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினர்.
    • 862 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.50.54 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.

    தென்காசி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் உதவி கடன் உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் இ.சி.ஈஸ்வரன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடனுதவிகளை பயனாளி களுக்கு வழங்கினர்.

    தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, 541 ஊரக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிகடன் இணைப்பு தொகை ரூ.38.02 கோடி மதிப்பிலும், 125 நகர்புறம் மகளிர் சுய உதவிக்குழுக்கான தொகை ரூ.11.03 கோடி மதிப்பிலும், 163 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சமுதாய முதலீட்டு நிதி மூலம் ரூ.1.07 கோடி மதிப்பிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 13 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இணை மானியம் தொகை ரூ.29 லட்சம் மதிப்பிலும், 8 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய திறன் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி ரூ.5 லட்சம் மதிப்பிலும், 12 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய பண்ணை பள்ளிகள் அமைப்பதற்காக தொகை ரூ.8 லட்சம் மதிப்பிலும், என மொத்தம் 862 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.50.54 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) குருநாதன், மாவட்ட தொழில் மைய மேலாளார் மாரியம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணு வர்தன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சேக் அப்துல்லா (தென்காசி), சுப்பம்மாள் (கடையநல்லூர்), காவேரி சீனித்துரை (கீழப்பாவூர்) மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் ரூ. 87 ஆயிரத்து 515 மதிப்பில் நலத்திட்டங்களை கலெக்டர் ஆகாஷ் பயனாளிகளுக்கு வழங்கினார்.
    • 50 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கூறினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் ஆகாஷ் பங்கேற்றார்.

    அதில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை உள்பட ரூ. 87 ஆயிரத்து 515 மதிப்பில் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியக்கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே தொழில் முனைவோர் அனைவரும் தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனுதவிகளை பெற்று பயனடையலாம். மேலும், நமது மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 பள்ளிகளை தேர்வு செய்து கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


    குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நேரில் வர இயலாதவர்கள் 1800 599 3599 மற்றும் வாட்ஸ் அப் எண் 7190079008 ஆகியவற்றில் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்

    முகாமில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திவ்யா மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அமுதா தேன்ராஜ் (கடங்கனேரி), மாலதி (தெற்கு காவலாக்குறிச்சி), தனித்துணை கலெக்டர் ஷீலா, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தமிழ்மலர், ஆலங்குளம் தாசில்தார் ரவீந்திரன், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • 25 பயனாளிகளுக்கு ரூ.16.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
    • கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மனுக்கள் உள்பட மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஆகாஷ் பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில், தென்காசி மாவட்ட வருவாய் துறையின் சார்பாக, இந்திய படைப்பிரிவில் பணிபுரிந்து பணியிடை காலமானவர்கள் மற்றும் கொடுங்காயமுற்றோர்கள் ஆகியோரின் வாரிசுதாரர்க ளுக்கு கருணை அடிப்படை யில் 6 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8,500 மதிப்பிலும் என மொத்தம் ரூ.4 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களையும், மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் திருநங்கை களுக்கான சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் 12 திருநங்கையர்களுக்கு ரு.12 லட்சம் மதிப்பில் சிறுதொழில் கடன் உதவி தொகைக்கான ஆணை என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.16.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணு வர்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், அலுவலக மேலாளர் (பொது) ஹரிஹரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • கலெக்டர் ஆகாஷ், தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த நிலையில் சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை தருவதாக பழனி நாடார் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டரிடம் உறுதி அளித்திருந்தார்.

    இந்த நிலையில் தென்காசி கலெக்டர் ஆகாஷ், பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் வீ.கே.புதூர் தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அதேபோல் சுரண்டையில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது மண்டல நிலைய வட்டார அலுவலர் முருகன்,வருவாய் அலுவலர் கண்ணன்,கிராம நிர்வாக அலுவலர் ராஜ லட்சுமி,நில அளவையர் பஷீர் அகமது, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இயன்முறை சிகிச்சை கருவிகளோடு இருப்பிடத்திற்கே சென்று மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனத்தை தொடங்கி வைத்தார்.
    • மாற்றுத்திறனாளி நலத்துறையின் வாயிலாக மறுவாழ்வு திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கான வாகனத்தை வழங்கி இருந்தார்.

    தென்காசி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தின் மூலம் இயன்முறை சிகிச்சை கருவிகளோடு இருப்பிடத்திற்கே சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனத்தை தொடங்கி வைத்தார்.

    அதன்படி தசை பயிற்சி அளித்தல், செயல் திறன் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, உதவி உபகரணங்களுக்கான மதிப்பீடு,விளையாட்டு முறையில் சிகிச்சை அளித்தல் மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறையின் வாயிலாக மறுவாழ்வு திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கான வாகனத்தை வழங்கி இருந்தார்.

    அந்த வகையில் தென்காசி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் கலெக்டர் ஆகாஷ் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளி களுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தை கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காசி மேஜர்புரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தினையும் கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு ,கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    • அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருந்து கிடங்கினை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து, தென்காசி ஊராட்சி ஒன்றியம், காசி மேஜர்புரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மூலம் ஊரணியில் அமைக்கப்பட்ட சிறு குளம் , படித்துறை மற்றும் தடுப்பு சுவர் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    மேலும், ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    அப்போது பொது சுகா தார துணை இயக்குநர் முரளிசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×