search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Education Scholarship"

    தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளில் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர் விபரங்களை 'எமிஸ்' தளத்தில் இம்மாதம் 15-ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும்

    திருப்பூர்:

    தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளில் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர் விபரங்களை 'எமிஸ்' தளத்தில் இம்மாதம் 15-ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும். கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் கட்டாயம் ஆதார் இணைத்திருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள், இ-சேவை மையம் மூலமாக சாதி, வருமான சான்றிதழ் விண்ணப்பித்து பெற வேண்டும்.

    ஜாதிசான்றிதழ், ஆதார், குடும்ப வருமானம் உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் ஆவணங்களை முழுமையாக பெற்று தகுதியானவர் விபரங்களை தெரிவு செய்து வருகிற 15-ந் தேதிக்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

    • அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 18-ந் தேதி வரை பதிவு செய்யலாம்
    • கலெக்டர் தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

    தமிழ்நாடு அரசு சார்பில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டில் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் மூலம் எவ்வித நிபந்தனைகள் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்கும் போது ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் கல்வி நிறுவனம் மற்றும் கல்லூரிகளில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை அனுகலாம்.

    இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் விண்ணப்பங்களை அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 18-ந் தேதி வரை பதிவு செய்யலாம்.

    மேலும் கூடுதல் விவரங்களை பெற கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி தேவையான விவரங்களை பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    • அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்தி ட்டத்தின்கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    நிகழாண்டில் புதுப்பித்தல் மாணவர்கள் https://ssp.tn.gov.in இணையதள முகவரியில் சென்று ஆதார் எண்ணை அளித்து இணைக்க செய்ய வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரி யில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுக வேண்டும்.

    கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் நாளை முதல் செயல்படத் தொடங்கும்.

    இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரையோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் 9, 11 ம் வகுப்பு பயின்று வரும் 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
    • 30ஆயிரம் மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் 30ஆயிரம் மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9, 11 ம் வகுப்பு பயின்று வரும் 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இத்திட்டதின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத்தேர்வு முகமையால் 29.9.2023 அன்று நடத்தப்படவிருந்த YASASVI நுழைவுத்தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேற்படி எழுத்து தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் 8மற்றும் 10 ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள்பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத்தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயேஇந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானதுவழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National ScholarshipPortal (https://Scholarships.gov.in ) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும்அதிகாரமைளித்தல் துறையின் இணையதளத்தின் (https://socialjustice.gov.in ) என ,இணைய தளங்கள் தொடங்கிதொடர்ந்து நோக்கி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • பள்ளி தலைமை ஆசிரியை புனிதவதி தலைமை தாங்கினார்
    • தமிழாசிரியை. சந்திரவடிவு வரவேற்புரை ஆற்றினார்.

    அவினாசி:

    அவினாசி அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியை புனிதவதி தலைமை தாங்கினார்.உதவித்தலைமை ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார்.அறக்கட்டளை தலைவர் என்.பாலகிருஷ்ணன் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என ரூபாய் பத்தாயிரம் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.

    அறக்கட்டளை உறுப்பினர் வள்ளியாத்தாள் சார்பில் அவரது மகன் சம்பத்குமார் 12-ம் வகுப்பு மாணவிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார். அறக்கட்டளை உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பிளஸ்-2வில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு ரூ.3000 வழங்கினார்.

    அறக்கட்டளை செயலாளர் சு .நடராசன் அறக்கட்டளை யின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விளக்கி அறிமுக உரை ஆற்றினார். துணைத் தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் கணேஷ் அறிவுச்சுடர், அறக்கட்டளை முத்து குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.உதவி தலைமை ஆசிரியை திலகவதி நன்றி கூறினார். தொடர்ந்துஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தலைமை ஆசிரியை ஆனந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது. தமிழாசிரியை. சந்திரவடிவு வரவேற்புரை ஆற்றினார். 10ம் வகுப்பு மாணவர்களில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சேயூர் அரசு மருத்துவமனை டாக்டர் யசோதா தன் பெற்றோர் நினைவாக ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என ரூ.10000 வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற பிளஸ்-2மாணவர்களுக்கு அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் எஸ்.பழனிசாமி ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என ரூ.10000 வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

    • பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • குடும்பத்திலுள்ள அவர்தம் மகன்/மகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் அதில் கூறியிருப்பதாவது:

    தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த் தமிழ்நாட்டின் கடமையாகும். இப்படி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாட்டிற்குச் சென்று பணியாற்றி பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திலுள்ள அவர்தம் மகன்/மகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று அங்கு பணியின்போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்களின் குடும்பத்திலுள்ள மகன் / மகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிடும் வகையிலும், திருமணத்தின் பொருட்டு ஏற்படும் எதிர்பாராத கூடுதல் செலவினத்தால் அக்குடும்பத்தினர் கடனில் சிக்கித் தவிப்பதை தடுக்கும் பொருட்டும், அக்குடும்பத்திலுள்ள மகன் / மகளுக்கு திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும்; அவர்தம் குடும்பத்திலுள்ள மகன்/ மகளுக்கு கல்வியில் சிறந்த எதிர்காலத்தினை உருவாக்கிடும் வகையிலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் விகிதத்தை அதிகரிப்பதற்கும், கல்வியில் அவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் தொகையாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    மேற்குறிப்பிட்ட திருமண உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை பெற அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்திருந்தல் வேண்டும். திருமண உதவித் தொகை பெற திருமணத்தின் போது மணமகனுக்கு 21வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும், பழங்குடியினர் 5-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்களுக்கு மட்டும் திருமண உதவித் தொகை வழங்கப்படும்.

    கல்வி உதவித் தொகை பெற தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது அயல்நாடுகளின் அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்று 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு சேர்க்கை பெற்ற மாணவர்கள், மருத்துவக் கல்லூரி படிப்பு / பொறியியல் படிப்பு / வேளாண்மை பொறியியல் (Agri./Engg.) மற்றும் டிப்ளமோ படிப்பு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மூலம் தொழிற்கல்வி படிப்புகள் பாலிடெக்னிக்குகள் (Polytechnic)/ தொழிற் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை (Admission) பெற்ற மாணவர்கள் மட்டுமே இக்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். ஒரு குடும்பத்தில் இரண்டு மாணவர்களுக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.

    மேற்படி உதவித் தொகைகள் வழங்குவது தொடர்பான விரிவான நடைமுறை அயலகத் தமிழர் நல வாரியத்தால் வகுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 60 பேர் பயனடைந்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை (செல்ப்) காப்பாளர் ச.வேலாயுதம் ஆலோசனையின்படி செல்ப் அறக்கட்டளை சார்பில் உயர்கல்வி பயிலும் இருளர் பழங்குடி மாணவர்கள் 60 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் புனித அன்னாள் கல்விச்சுடர் மையத்தில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு லூசினா தலைமை தாங்கினார். ஆசிரியர் பொன்.மாரி வரவேற்றார். பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க தலைவி சிவகாமி, பொதுச்செயலர் ஆறுமுகம், பொருளாளர் நாகராஜ், துணைத்தலைவர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை செயலாளர் கோவி.பார்த்திபன், பொருளாளர் ச.கருணாகரன், திண்டிவனம் தாய் தமிழ் பள்ளி தலைவர் பேராசிரியர் கல்வி மணி, அரக்கோணம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கவுதம், அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் ஐ.டி.தேவாசீர்வாதம், செல்ப் அறக்கட்டளை துணை செயலர் இமயன், பழங்குடி இன விதவைகள் சங்கத் தலைவர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பழங்குடி இருளர் மாணவர்களுக்கு கல்வி உதவி செய்த சங்கீதாரா ஜேஷ், ராஜிநாராயணன், டாக்டர்.விஜிஆனந்த், சாந்திசுந்தர், டாக்டர் நந்தகுமார், ரம்யாராஜேஷ் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனை வருக்கும் இருளர் பழங்குடி மாணவர்கள் சார்பில் ராஜேஷ் நன்றி கூறினார்.

    • சைனிக் பள்ளிகளில் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 25சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
    • கவுரவ ஆணையம் தகுதி வரை உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டு வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பள்ளிக்கல்வி, கலை அறிவியல் கல்லூரி, தொழிற்கல்வி படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை தொகுப்பு நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. 2022-23-ம் கல்வியாண்டு முதல் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2 ஆயிரம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.4 ஆயிரம், 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புக்கு ரூ.5 ஆயிரம், 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. சைனிக் பள்ளிகளில் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 25சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சைனிக் பள்ளியில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் சைனிக் பள்ளியில் படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

    போர் மற்றும் போர் நடவடிக்கையில் உயிரிழந்தோரை சேர்ந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த கருணைத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இதில் உடல் ஊனமுற்றிருந்தால் கருணைத்தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கும் படை அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள், கவுரவ ஆணையம் தகுதி வரை உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண்.523, 5-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர்-641 604 என்ற முகவரியிலும், 0421 2971127 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   

    • மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
    • விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ, இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித் தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் (Fresh Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்கத்தையோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in welfschemes.htm scholarship schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது
    • 85 பேர் பயனடைந்தனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை ( செல்ப்) சார்பில் அதன் காப்பாளர் வேலாயுதம் ஆலோசனை பேரில் அரக்கோணம் சுற்று பகுதியில் வசிக்கும் 85 ஏழை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ. 5.50 லட்சம் கல்வி உதவித் தொகை பகிர்ந்து அளிக்கப்பட்டது.

    6 -ம் ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள் வளர்ச்சி சங்க தலைவர் கவுதம் தலைமை தாங்கினார். செல்ப் அறக்கட்டளை செயலாளர் கோவி.பார்த்திபன் வரவேற்றார்.

    அன்னை தெரேசா கிராம வளர்ச்சி இயக்கத் தலைவர் ஐடி தேவாசிர்வா தம் சிறப்பு அழைப்பாளர்களை அறிமுகம் செய்தார்.

    செல்ப் அறக்கட்டளை முன்னாள் செயலாளர் டாக்டர் ரவிச்சந்திரன், பொருளாளர் கருணாகரன், செல்ப் அறக்கட்டளை தன்னார்வ லர்கள் எஸ். இமையவன், செல்வராஜ். கலைச் செல்வன், சுந் தரம், முருகேசன், கனிமொழி, சரத்பாபு, கார்த்தி, தமிழ் முகி லன், சாம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரக்கோ ணம் நகராட்சி ஆணையாளர் ஆர்.லதா, மாவட்ட கல்வி அதி காரி ஹேமலதா, ராணிப் பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, அறம் கல்விச் சங்கத் தலைவர் முனைவர் கலை நேசன், தலைமையாசிரியர் பிரின்ஸ் தேவாசீர்வாதம், ஹானா பாண்டியன், குளோ அறக்கட்டளை ஜேம்ஸ், கொரோனா நல் லடக்க குழு தலைவர் முகமது அலி, சந்தர், அம்பேத் ஆனந் தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 85 மாணவர்களிடமும் காசோலைகளை வழங்கி வாழ்த்தி பேசியதாவது,

    மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து அரசு பணிக்கு சென்று தன் குடும்பத்தை மேம்படுத்த முன் வர வேண்டும்.

    அதுபோல் படிப்பை முடித்தவர்கள் கிராமபுற ஏழை மாண வர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும், மாணவர்கள் தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் ஒழுக்கத்துடன் தன்னடக் கத்துடன் பள்ளி, மற்றும் கல்லூரி படிப்புகளை முடிக்க வேண் டும் என்று ஊக்கப்படுத்தி பேசினர்.

    இறுதியாக கல்வி உத வித் தொகை வழங்கிய நன்கொடையாளர்கள் சங்கீதா ராஜேஷ், டாக்டர் ஆனந்த் விஜயலட்சுமி, டாக்டர் ஜெயராஜ் சுபா, நவீனா பாபு, டாக்டர் மோகன் குமார், காயத்ரி கவிதா, சரவணன் உள்ளிட்ட அனைவருக்கும் செல்ப் அறக்கட்டளை சார்பில் பௌத்த அரசி நன்றி கூறினார்.

    • கல்வி உதவித்தொகை பெற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 20-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அரியலூர்

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய இனங்களுக்கு இணையதளம் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற அரசின் இணையதளத்திலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது"

    • கலெக்டர் தகவல்
    • விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ- மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கு இன்று முதல் இணையதளம் செயல்பட தொடங்கும்.

    புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 6.12.22-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய பதிவுக்கு 15.12.22 முதல் இணையதளம் செயல்படத் தொடங்கும்.

    புதிய விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship shcemes- யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×