search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
    X

    பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

    • அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்தி ட்டத்தின்கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    நிகழாண்டில் புதுப்பித்தல் மாணவர்கள் https://ssp.tn.gov.in இணையதள முகவரியில் சென்று ஆதார் எண்ணை அளித்து இணைக்க செய்ய வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரி யில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுக வேண்டும்.

    கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் நாளை முதல் செயல்படத் தொடங்கும்.

    இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரையோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×