search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் தொடக்கம்
    X

    மாணவர்கள் கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் தொடக்கம்

    • கலெக்டர் தகவல்
    • விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ- மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கு இன்று முதல் இணையதளம் செயல்பட தொடங்கும்.

    புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 6.12.22-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய பதிவுக்கு 15.12.22 முதல் இணையதளம் செயல்படத் தொடங்கும்.

    புதிய விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship shcemes- யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×