search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private Employment"

    • கள்ளக்குறிச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
    • கலந்து கொள்ள இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்வரன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமை தனி யார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.

    தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தனியார் துறை நிறுவனங்கள் அவ்வப்பொழுது கலந்து கொண்டு தங்களது பணிக்காலியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால் இம்முகாமிற்கு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ள இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்ப டமாட்டாது. எனவே இவ்வேலை வாய்ப்பு முகாமிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞ ர்களும், தனியார்த்துறை நிறுவனங்களும் வருகிற 16- ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள டேனிஷ் மிஷன் நகர தொடக்க ப்பள்ளியில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • தனியாா் வேலை வாய்ப்பு திருவிழா பிப்ரவரி 11-ந் தேதி நடைபெறுகிறது.
    • 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி ஆகியவை சாா்பில் தனியாா் வேலை வாய்ப்பு திருவிழா பிப்ரவரி 11 -ந் தேதி நடைபெறுகிறது.இது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் தலைமை வகித்து பேசியதாவது :- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்புத் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தி இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பிப்ரவரி 11 -ந் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில், 800 நிறுவனங்கள் பங்கேற்பதன் மூலமாக 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த முகாமில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களை திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொண்டோ அல்லது இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றாா்.கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம்,உதவி ஆணையா்கள் கண்ணன், வாசுகுமாா், செல்வநாயகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது.
    • 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது.

    இம்முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடுவோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் .

    தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்ற வர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்க ப்படாது என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • திருப்பூர் வட்டாரங்களில் உள்ள இளைஞர்களுக்கு அக்டோபர் 8-ந்தேதி பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடக்கிறது

    திருப்பூர் :

    மாநில ஊரகம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கி உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் காங்கயம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு வெள்ளக்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இன்று தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வருகிற 2-ந்தேதி குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 3-ந் தேதி குடிமங்கலம் என்.வி., பாலிடெக்னிக் கல்லூரியிலும், 7-ந் தேதி உடுமலை மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. ஊத்துக்குளி மற்றும் அவிநாசி பகுதி இளைஞர்களுக்கு 17-ந் தேதி அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அக்டோபர் 1-ந் தேதி மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பல்லடம், பொங்கலூர் திருப்பூர் வட்டாரங்களில் உள்ள இளைஞர்களுக்கு அக்டோபர் 8-ந்தேதி பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது

    இதில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், விற்பனை நிறுவனங்கள், பழுதுபார்ப்பு நிறுவனங்கள், ஐ.டி., நிறுவனங்கள், மருந்து விற்பனை நிறுவனங்கள், உணவு உற்பத்தி நிறுவனம், நிதி நிறுவனம் என பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்த முகாமில் இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • கொள்ளுக்காரன்குட்டையில் தனியார்வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பணி ஆணை வழங்க உள்ளனர்.

    கடலூர்:

    நெய்வேலி தொகுதி பண்ருட்டி ஒன்றியம், மருங்கூர் ஊராட்சி, கொள்ளுக்காரன்கு ட்டைவள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டவேலை வாய்ப்புதுறை, மாவட்ட நிர்வாகம் மாவட்டவேலை வாய்ப்பு மையம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்வேலை வாய்ப்பு முகாம் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையிலும்,சபா.ராஜேந்திரன்மு ன்னிலையிலும் நடந்தது. இதில்க்கு2000-க்கும்மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்க லந்துகொண்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தனர் . இதில்பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கல்வி சான்றிதழ்கள் ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்பு ஆகியவற்று டன்ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நேரில் கலந்து கொண்டனர். பிற்பகல் நடைபெறவுள்ள பணி ஆணை வழங்கும் விழாவில் அமைச்சர் கணேசன், சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுபணி ஆணை வழங்க உள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருகைதரும் அனைவருக்கும் சபா.ராஜேந்திரன் எம்எல்ஏஉணவு ஏற்பாடுகள் செய்து உள்ளார்.

    ×