என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தனியார் வேலைவாய்ப்பு திருவிழா குறித்து ஆலோசனை
- தனியாா் வேலை வாய்ப்பு திருவிழா பிப்ரவரி 11-ந் தேதி நடைபெறுகிறது.
- 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி ஆகியவை சாா்பில் தனியாா் வேலை வாய்ப்பு திருவிழா பிப்ரவரி 11 -ந் தேதி நடைபெறுகிறது.இது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் தலைமை வகித்து பேசியதாவது :- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்புத் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தி இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பிப்ரவரி 11 -ந் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில், 800 நிறுவனங்கள் பங்கேற்பதன் மூலமாக 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த முகாமில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களை திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொண்டோ அல்லது இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றாா்.கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம்,உதவி ஆணையா்கள் கண்ணன், வாசுகுமாா், செல்வநாயகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்