search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் -  கலெக்டர் ஆகாஷ் தகவல்
    X

    தென்காசி மாவட்டத்தில் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஆகாஷ் தகவல்

    • உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
    • மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றுவபராக இருத்தல் வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்விருது பெறுவோ ருக்கு 8 கிராம் (22காரட்) எடையுள்ள தங்கப் பதக்கமும், ரூ.1 லட்சத் திற்கான காசோலை மற்றும் சான்றிதழ், சால்வை வழங்கப்படும். 2023-ம் ஆண்டு அவ்வையார் விருதுக்கான கருத்து ருக்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தின் (https://awards.tn.gov.in) வழியாக வருகிற டிசம்பர் 10-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் அனுப்ப வேண்டும்.

    அவ்வையார் விருதுக்கான கருத்து ருக்களை அனுப்புபவர்கள், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்ட வராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணி யாற்றுவபராக இருத்தல் வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×