search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு
    X

    தென்காசி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்த காட்சி.


    தென்காசி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு

    • காசி மேஜர்புரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தினையும் கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு ,கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    • அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருந்து கிடங்கினை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து, தென்காசி ஊராட்சி ஒன்றியம், காசி மேஜர்புரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மூலம் ஊரணியில் அமைக்கப்பட்ட சிறு குளம் , படித்துறை மற்றும் தடுப்பு சுவர் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    மேலும், ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    அப்போது பொது சுகா தார துணை இயக்குநர் முரளிசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×