search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welfare help"

    • நட்டாத்தி இ-சேவை மைய வளாகத்தில் பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகளுக்கு இடுபொருட்கள், வேளாண்மை கருவிகள், மகளிர் சுய உதவிக் கடன் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பேசினார்.

    சாயர்புரம்:

    நட்டாத்தி இ-சேவை மைய வளாகத்தில் பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, பஞ்சாயத்து துணை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி கலந்து கொண்டு அரசு துறை சார்பில் அமைக்கபட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

    தொடர்ந்து பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு மழை கோர்ட் மற்றும் சால்வை கொடுத்து கவுரவபடுத்தினார். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் தனி நபர் வேலை அடையாள அட்டை, சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கினார். பலவேறு அரசு துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்று, விவசாயிகளுக்கு இடுபொருட்கள், வேளாண்மை கருவிகள், மருந்து மாத்திரைகள், மகளிர் சுய உதவிக் கடன் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    தொடர்ந்து ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் கோபால கிருஷ்ணன், சாயர்புரம் ஆர்.ஐ. விஜய் ஆனந்த், திட்ட இயக்குநர் வீரபுத்திரன், மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் உலகநாதன், செயலர் ஜெயஸ்ரீ, திருவை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன் பானு.ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிவகலா, ஸ்ரீவை யூனியன் துணை தலைவர் விஜயன், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய், பற்றாளர் ஜோசப், வட்டார ஒருங்கிணைப்பாளர் சாம்துரை, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைசாமி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் அன்னகனி, ஜான்சிராணி, சுப்புலட்சுமி, சரோஜா, கொம்புகாரன் பொட்டல் பண்டாரம், பிரியா, மணிமந்திரம் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பஞ்சாயத்து செயலர் முத்துராஜ் நன்றி கூறினார்.

    • அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பாளை கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகே தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நெல்லை:

    தமிழக நிதி அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று காலை நெல்லை மாவட் டத்திற்கு வருகை தந்தார்.

    உற்சாக வரவேற்பு

    அவருக்கு பாளை கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகே வைத்து தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மாவட்ட அவைத் தலைவர் கிரகாம் பெல், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பாளை யூனியன் சேர்மன் தங்க பாண்டியன், சித்திக், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக் கோட்டை செல்லத்துரை, மத்திய மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார், முன்னாள் துணைச் செயலாளர் நவநீதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் அனுராதா ரவி முருகன், ஒன்றிய செயலாளர்கள் போர்வெல் கணேசன், ஜோசப் பெல்சி, அருள்மணி, ராஜன், நிர்வாகிகள் வீர பாண்டி யன், ஆறுமுக ராஜா, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் ஆய்வு

    அதனைத்தொடர்ந்து கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ண ப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெறும் பாளை யூனியன் பாளை யஞ்செட்டி குளம் பஞ்சாயத்து மற்றும் ரெட்டி யார்பட்டி பஞ்சாயத்துகளில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

    பின்னர் அங்கு மரக்கன்று கள் நட்டு வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உடன் இருந்தார். அதன் பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார்.

    நலத்திட்ட உதவிகள்

    அங்கு அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் 25 பயனாளிகளுக்கு உழவர் காசுக்கடன்கள் உள்பட மொத்தம் 643 பயனாளி களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி எப்போ தெல்லாம் அமைகிறதோ அப்போ தெல்லாம் மகளிருக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு மாவட்டத்தில் உள்ள 528 நியாய விலை கடைகள் மூலம் முதல் கட்டமாக 2.46 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, அதில் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு மையங்களில் பயனாளிகளால் பூர்த்தி செய்யப்பட்டு தற்போது வரை பெறப்பட்டுள்ளது.மீத முள்ள சுமார் 2 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 33 பயனாளிகளுக்கு தையல் எந்திரத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
    • 150 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்தில் உதவித் தொகை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மை யினர் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

    நலத்திட்ட உதவிகள்

    நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதில் 33 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 280 மதிப்பிலான மின்மோட்டாருடன் கூடிய தையல் எந்திரத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். மேலும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 150 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்தில் உதவித் தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 110 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்தில் உதவித்தொகை வழங்கினார். மொத்தமாக 293 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

    சட்டத்தின் ஆட்சி

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், தமிழகத்தில் மட்டும் தான் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் சிறுபான்மை யினர் நிம்மதியாக வாழ்வதாக சொல்ல முடியாது.

    சிறுபான்மை மக்க ளுக்குமட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கான முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றார்.

    அமைச்சர் பேச்சு

    விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு தி.மு.க அரசு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அயலக பணிக்கு செல்வோர் எந்த பணிக்கு செல்கிறோம் என்பதை அறிந்து செல்வதோடு அரசிடம் பதிவு செய்து செல்ல வேண்டும். வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலைக்கு செல்லும் நாட்டின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து தான் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். போலி ஏஜெண்ட்கள் ஆசை வார்த்தை காட்டி இங்கு உள்ளவர்களை வேலைக்கு அழைத்து செல்கின்றனர். மாவட்ட கலெக்டரிடம், வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கட்டாயம் பதிவு செய்து செல்ல வேண்டும்.

    சிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்தினாலும், அவர்களுக்கு தொடர்ந்து கிடைத்திட மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், முஸ்லீம் மகளிர் உதவும் கரங்கள் சங்க செயலாளர் செய்யது அகமது, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க செயலாளர் பிரான்சிஸ் சேவியர், சிறுபான்மை நல அலுவலர் சம்பத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார்.
    • 132 தூய்மை பணியாளர் களுக்கு சீருடைகளை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் வழங்கினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அரசு எஸ்சி, எஸ்.டி. அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை யொட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

    நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆண்டி வரவேற்றார். நலத்திட்ட உதவிகள் மற்றும் 132 தூய்மை பணியாளர் களுக்கு சீருடைகளை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் வழங்கினர்.

    இதில் நெல்லை முத்திரைத்தாள் பிரிவு தாசில்தார் மோகன், மாமன்ற உறுப்பினர்கள் அஜய், ஜெகநாதன், பெருமாள் தேவி, அர்ஜுன் ராஜா, இந்து மக்கள் கட்சி தென் மண்டல செயலாளர் மகாராஜன், மாநில துணைத்தலைவர் உடையார் உள்பட பலர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட ஏராள மான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

    இதில் சங்க நிர்வாகிகள் முருகன், பாப்பா, பரமசிவன், முருகானந்தம், முருகன், கடற்கரையாண்டி, தங்கராஜ், மாரியப்பன், குமரேசன், விஜய பாண்டி யன், வீர மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொ ண்டனர். எஸ்.சி. எஸ்.டி அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணன் நன்றி கூறினார்.

    • முகாமில் ரூ. 87 ஆயிரத்து 515 மதிப்பில் நலத்திட்டங்களை கலெக்டர் ஆகாஷ் பயனாளிகளுக்கு வழங்கினார்.
    • 50 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கூறினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் ஆகாஷ் பங்கேற்றார்.

    அதில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை உள்பட ரூ. 87 ஆயிரத்து 515 மதிப்பில் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியக்கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே தொழில் முனைவோர் அனைவரும் தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனுதவிகளை பெற்று பயனடையலாம். மேலும், நமது மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 பள்ளிகளை தேர்வு செய்து கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


    குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நேரில் வர இயலாதவர்கள் 1800 599 3599 மற்றும் வாட்ஸ் அப் எண் 7190079008 ஆகியவற்றில் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்

    முகாமில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திவ்யா மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அமுதா தேன்ராஜ் (கடங்கனேரி), மாலதி (தெற்கு காவலாக்குறிச்சி), தனித்துணை கலெக்டர் ஷீலா, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தமிழ்மலர், ஆலங்குளம் தாசில்தார் ரவீந்திரன், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • 25 பயனாளிகளுக்கு ரூ.16.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
    • கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மனுக்கள் உள்பட மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஆகாஷ் பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில், தென்காசி மாவட்ட வருவாய் துறையின் சார்பாக, இந்திய படைப்பிரிவில் பணிபுரிந்து பணியிடை காலமானவர்கள் மற்றும் கொடுங்காயமுற்றோர்கள் ஆகியோரின் வாரிசுதாரர்க ளுக்கு கருணை அடிப்படை யில் 6 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8,500 மதிப்பிலும் என மொத்தம் ரூ.4 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களையும், மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் திருநங்கை களுக்கான சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் 12 திருநங்கையர்களுக்கு ரு.12 லட்சம் மதிப்பில் சிறுதொழில் கடன் உதவி தொகைக்கான ஆணை என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.16.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணு வர்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், அலுவலக மேலாளர் (பொது) ஹரிஹரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. சார்பில் உச்சினி மாகாளியம்மன் கோவிலுக்கு கிரீடம், வேல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நலத்திட்ட உதவிகளை ராஜா எம்.எல்.ஏ. மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் வழங்கினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் 27- வது வார்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் புனிதா அஜய் மகேஷ் குமார் ஏற்பாட்டில் உச்சினி மாகாளியம்மன் கோவில் கிரீடம் மற்றும் வேல் மற்றும் கருப்பசாமி கோவிலில் 1,000 லிட்டர் குடிநீர் தொட்டி வழங்குதல், கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா, நகர செயலாளர் பிரகாஷ், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அஜய்மகேஷ்குமார் வரவேற்றார்.

    நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் சுப்புத்தாய், முத்துக்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் அலமேலு, புஷ்பம், செல்வராஜ், வேல்ராஜ், 27-வது வார்டு அவை தலைவர் முப்பிடாதி, வார்டு துணை செயலாளர் ராசு, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வார்டு செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.

    • சாகுபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் பயனாளிகளுக்கு இலவச சைக்கிள்களும், தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் விருந்தினர் மாளிகையில் அரிமா மாவட்டத்தின் தொலை நோக்கில் மாற்றத்திற்கான எழுச்சி என்கிற அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    சாகுபுரம் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மண்டல தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சாகுபுரம் அரிமா சங்க தலைவர் தாமஸ் மாசிலாமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் பொன் சரவணன் அறிக்கை வாசித்தார். ஜெயம் மண்டல அரிமா நிர்வாகி ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். விழாவில் 2 பயனாளி களுக்கு இலவச சைக்கிள்களும், 2 பேருக்கு தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன. இதில் சாகுபுரம் அரிமா சங்க செயலாளர்கள் முத்துப்பா ண்டியன், சுப்பிரமணியன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 45 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளை முன்னிட்டு 14-வது வார்டுக்குட்பட்ட சின்னகன்னுபுரம் பாரதி நகரில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர தி.மு.க. துணை செயயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதா முருகேசன் தலைமை தாங்கினார்.

    உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் அப்பகுதியில் 45 மரக்கன்று களை நடும் திட்டத்தை தொடங்கி வைத்து, 300 பேருக்கு சேலை, நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட வழக்க றிஞர் அணி அமைப்பாளர் மோகன் தாஸ் சாமுவேல், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், வார்டு அவைத்தலைவர் அந்தோணிமுத்து, வட்ட பிரதிநிதிகள் முருகேசன், குமார், தங்கமாரியப்பன், முனியசாமி, ஆல்கன் டிரஸ்ட் நிர்வாகிகள் செந்தில், அய்யப்பன், கேசவன், வேல்பாண்டி, தினேஷ் குமார், ரகுபதி, நாராயணன், கமல் தனசேகரன், மகேஸ்வரசிங், ஊனமுற்றோர் நலச்சங்க தலைவர் மருதபெருமாள், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, கருணா, பிரபாகர், பாஸ்கர், ரமேஷ், மகளிர் அணி சீதாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்பு முதன் முறையாக மு.க.ஸ்டாலின் வர உள்ளார்.
    • தென்காசி மாவட்டம் முழுவதும் பேனர்கள் மற்றும் கட்டவுட் களை வைக்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 8-ந் தேதி வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக தென்காசி கணக்கப்பிள்ளை வலசை அருகே உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதனை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பார்வை யிட்டார். அப்பொழுது அவருடன் மாவட்ட கலெக்டர் ஆகாஷ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ. மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    வருகின்ற 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்பு முதன் முறையாக மு.க.ஸ்டாலின் வர உள்ளார். சுமார் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் காலை 7.30 மணிக்கு முதல்-அமைச்சர் தென்காசியில் வந்து இறங்குகிறார்.

    அங்கிருந்து குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகையில் சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு விழா நடைபெறும் இடத்திற்கு காலை 10 மணிக்கு வர உள்ளார். பின்னர் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை நேரில் வழங்குகிறார்.

    நிகழ்ச்சிகள் முடிந்து அங்கிருந்து ராஜபாளையம் செல்கிறார். இருப்பினும் ரெயில் மூலம் தென்காசிக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு வழி நெடு கிலும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விழா மேடை அமைக்கும் பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் ராமச்சந்திரனுடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், சீனிதுரை, ரவிசங்கர், திவான் ஒலி, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ஷெரிப், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல், செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேசன், முன்னாள் செயலாளர் ரஹீம், தொழிலதிபர் மாரிதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி தற்பொழுது தென்காசி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் பேனர்கள் மற்றும் கட்டவுட் களை வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • டி.சி.டபிள்யூ விருந்தினர் மாளிகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அரிமா சங்கத்தின் மண்டல தலைவர் தாமஸ் மாசிலாமணி தலைமை தாங்கினார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ விருந்தினர் மாளிகையில் அரிமா சங்கத்தின் சார்பில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    சாகுபுரம் அரிமா சங்கத்தின் மண்டல தலைவர் தாமஸ் மாசிலாமணி தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன் அறிக்கை வாசித்தார். டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு உதவி தலைவர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகளையும், சாதனைகளையும் பாராட்டி பேசினார்.

    விழாவில் 2 பேருக்கு இலவச சைக்கிளும், ஒருவருக்கு தையல் எந்திரமும் வழங்கப்பட்டன. மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. திரளானோர் விழாவில் கலந்து கொண்டனர். நிறைவில் சங்கத்தின் நிர்வாகி சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

    • கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    கம்பம்:

    தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் 73-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி தேனி தெற்கு மாவட்டத்திலிருந்து நகர்மன்றத் தலைவர்கள், நகர பொறுப்பாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கம்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், கம்பம் நகர செயலாளர்கள் (வடக்கு) துரை நெப்போலியன், (தெற்கு) சூர்யா செல்வகுமார், நகர்மன்றத் தலைவர் வனிதா, துணைத்தலைவர் சுனோதா, தேனி தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் வீரபாண்டியன்,கம்பம் 16 வார்டு நகர்மன்ற உறுப்பினர் தேயிலை சம்பத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சசி மற்றும் கம்பம் நகர மன்ற தி.மு.க. உறுப்பினர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் 25 பயனாளிகளுக்கு 3 சக்கர பைக், தையல் எந்திரங்கள், சிகை அலங்கார கடை சாய்வு நாற்காலிகள், வீல் சேர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ×