search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lions Club"

    • நிகழ்ச்சியில் புதிய தலைவராக ராஜ்குமார், செயலாளராக சுரேஷ் மற்றும் பொருளாளராக ஜேசா ஆகியோருக்கு முன்னாள் அரிமா ஆளுநர் கதிரேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • இதில் சுமார் 7 பயனாளிகளுக்கு 50 கிலோ அரிசி, கல்வி பயிலும் மாணவர்கள் 3 பேருக்கு ரூ. 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி தூத்துக்குடி புறவழிச்சாலை தனியார் கார்டனில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய தலைவராக ராஜ்குமார், செயலாளராக சுரேஷ் மற்றும் பொருளாளராக ஜேசா ஆகியோருக்கு முன்னாள் அரிமா ஆளுநர் கதிரேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    விழாவில் முன்னாள் அரிமா ஆளுநர் முருகன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சுமார் 7 பயனாளிகளுக்கு 50 கிலோ அரிசி, கல்வி பயிலும் மாணவர்கள் 3 பேருக்கு ரூ. 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. வட்டார தலைவர் டாக்டர் ஆரோக்கிய பழம் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க மண்டல தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
    • ஆறுமுகநேரியை சேர்ந்த செல்வலீலாவுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் சுரேஷ், உதவி துணை தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா மாவட்ட முதல் துணை ஆளுநர் அய்யாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் சீனியர் மேலாளரான ஒயிட் பீல்டு ஆர்தர் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயலாளர்களாக முத்துப்பாண்டியன், லோகா கிருஷ்ணசாமி, பொருளாளராக ராமசுப்பிரமணியன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். அனைவரும் உறுதிமொழியுடன் பதவி ஏற்று கொண்டனர்.

    தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆறுமுகநேரியை சேர்ந்த செல்வலீலா என்பவருக்கு தையல் எந்திரமும், சிவராமகிருஷ்ணனுக்கு மருத்துவ உதவி தொகையும், முக்காணி அவிஸ்டன், மேலஆத்தூர் அருள்ராஜ், ஆத்தூர் சாக்ஷினி ஆகியோருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டன. லையன் பிரகாஷ், சுப்பிரமணியன், பொன் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முப்பெரும் விழாவிற்கு கே.ஆர்.பி.இளங்கோ தலைமை தாங்கினார்.
    • சிறந்த சேவை புரிந்தோருக்கு, விஸ்வநாதன் விருதுகளை வழங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் ஆளுனர் வருகை தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சமுதாயத்தில் சேவை புரிந்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கீழப்பாவூரில் நடைபெற்றது. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், அரிமா மாவட்ட கண்தான ஒருங்கிணைப்பாளருமான கே.ஆர்.பி.இளங்கோ தலைமை தாங்கினார். லட்சுமி சேகர், சசி ஞானசேகர், ஆனந்த், ஜேக்கப் சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செல்வராஜ் வரவேற்றார். முன்னாள் தலைவர் பொன்அறிவழகன் தொகுத்து வழங்கினார்.

    உடல் தானம், ரத்த தானம், மருத்துவம், கல்வி,காவல்துறை, முதியோர் உதவித்தொகை, விளையாட்டு துறை, மரக்கன்று நடுதல், பத்திரிகைத்துறை, பனைவிதை விதைத்தல், கனிமவளம், பாரதிக்கு விழா, காமராஜருக்கு விழா, மரக்கன்று வளர்த்தல் போன்ற சிறந்த சேவை புரிந்தோருக்கு, மாவட்ட ஆளுனர் விஸ்வநாதன் விருதுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் தையல்எந்திரம், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், சாரண இயக்க மாணவிகளுக்கு சீருடை, நலிவுற்ற, பார்வையற்றோருக்கு உதவித்தொகை மற்றும் அரிசி, சேலைகள் ஆகியன வழங்கப்பட்டன. திருமலைக்கொழுந்து கொடிவணக்கம் செய்தார். ராமச்சந்திரபாண்டி அரிமா வழிபாடு செய்தார். தங்கராஜ் அரிமா கோட்பாடுகளை செய்தார். சுரேஷ் அரிமா குறிக்கோள்களை வாசித் தார். அருணாசலம் செயலர் அறிக்கை வாசித்தார். மண்டலத்தலைவர் மணிகண்டன் அரிமா மலரை வெளியிட, வட்டார தலைவர் செல்வம் பெற்றுக்கொண்டார். முன்னாள் செயலாளர் கலைச்செல்வன் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார் .மாவட்ட ஆளுனர் விஸ்வநாதன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்தார்.விழாவில் வெண்ணிநாடார், ஆனந்த், அருணாசலமுத்துச்சாமி, கவுதமன், ஞானசெல்வன், மதியழகன், ராமசாமி என்ற தமிழ்செல்வன், திருப்பாண்டியராஜ், சிவகுமார், ராஜலிங்கராஜா, சினேகாபாரதி, ஜெயன், முருகேசன், ஜேசுராஜா, ராஜாமணி, சரோஜா, விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    • சாகுபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் பயனாளிகளுக்கு இலவச சைக்கிள்களும், தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் விருந்தினர் மாளிகையில் அரிமா மாவட்டத்தின் தொலை நோக்கில் மாற்றத்திற்கான எழுச்சி என்கிற அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    சாகுபுரம் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மண்டல தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சாகுபுரம் அரிமா சங்க தலைவர் தாமஸ் மாசிலாமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் பொன் சரவணன் அறிக்கை வாசித்தார். ஜெயம் மண்டல அரிமா நிர்வாகி ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். விழாவில் 2 பயனாளி களுக்கு இலவச சைக்கிள்களும், 2 பேருக்கு தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன. இதில் சாகுபுரம் அரிமா சங்க செயலாளர்கள் முத்துப்பா ண்டியன், சுப்பிரமணியன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.
    • மாவட்ட கண் தான ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.பி.இளங்கோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்புணர்வு குழு இணைந்து புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தினர்.

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் முன்னாள் செயலாளர் ரஜினி முன்னிலை வகித்தார். ஆவுடையனூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரதீப் வரவேற்று பேசினார்.

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவரும், கண் தான விழிப்புணர்வினுடைய நிறுவனரும், 324-ஏ மாவட்ட கண் தான ஒருங்கிணைப்பாளருமாகிய கே.ஆர்.பி.இளங்கோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் அபர்ணா 2,546 மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் 116 மாணவர்களுக்கு கண் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டது. மாண வர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் மரிய கிளிண்டன் ஏற்பாடுகளை செய்திருந்தார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    • ரெயில் நிலைய அதிகாரிகளின் ஒப்புதலோடு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
    • கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக பாவூர்சத்திரம் ரெயில் நிலைய நடைமேடையை சுத்தம் செய்ய வேண்டும் என நிர்வாகிகள் உறுப்பினர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு ரெயில் நிலைய அதிகாரிகளின் ஒப்புதலோடு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு துணை கோட்ட பொறியாளர் கபிலன், பிரிவு பொறியாளர் யூசுப், பாவூர்சத்திரம் நிலைய கண்காணிப்பாளர் மாணிக்க்ஷா மற்றும் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தை சேர்ந்த கே.ஆர்.பி. இளங்கோ, பொன்னறிவழகன் உள்ளிட்ட 25 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    • டி.சி.டபிள்யூ விருந்தினர் மாளிகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அரிமா சங்கத்தின் மண்டல தலைவர் தாமஸ் மாசிலாமணி தலைமை தாங்கினார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ விருந்தினர் மாளிகையில் அரிமா சங்கத்தின் சார்பில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    சாகுபுரம் அரிமா சங்கத்தின் மண்டல தலைவர் தாமஸ் மாசிலாமணி தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன் அறிக்கை வாசித்தார். டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு உதவி தலைவர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகளையும், சாதனைகளையும் பாராட்டி பேசினார்.

    விழாவில் 2 பேருக்கு இலவச சைக்கிளும், ஒருவருக்கு தையல் எந்திரமும் வழங்கப்பட்டன. மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. திரளானோர் விழாவில் கலந்து கொண்டனர். நிறைவில் சங்கத்தின் நிர்வாகி சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

    • பதவியேற்பு விழாவிற்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் மூத்த தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
    • அரசுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற வெள்ளைபனையேறிப்பட்டி பள்ளிக்கு கேடயம்,பரிசு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் 18-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கீழப்பாவூரில் நடைபெற்றது.

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் மூத்த தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கலைச்செல்வன், முருககிங்ஸ்டன், திருமலைக்கொழுந்து, ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உடனடி முன்னாள் தலைவர் அருணாசலம் என்ற அந்தமான் அருண் வரவேற்றார். அறிவழகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    புதிய நிர்வாகிகளை முன்னாள் கூட்டு மாவட்டத்தலைவர் பிரகாஷ் பதவியில் அமர்த்தினார். தலைவராக இளங்கோ, செயலாளராக முருகன், பொருளாளராக பரமசிவன், முதல் துணைத்தலைவராக சுரேஷ், 2ம் துணைத்தலைவராக ஆனந்த், 3ம் துணைத்தலைவராக சிநேகாபாரதி, சங்க நிர்வாகியாக செல்வராஜ், சங்க உறுப்பினர் குழு தலைவராக வெண்ணிநாடார், சேவைத்தலைவராக அருணாச்சலம், சங்க அறக்கட்டளை பொறுப்பா ளராக ஞானசெல்வன், சங்க தகவல் தொடர்புத்தலைவராக லெட்சுமிசேகர் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

    மேலும் முதலாம் ஆண்டு இயக்குனர்களாக திருப்பாண்டியராஜ், ராஜீ, மதியழகன், ராமசாமி என்ற தமிழ்செல்வன், 2-ம் ஆண்டு இயக்குனர்களாக சொக்கலிங்கம், ராஜேந்திரன்,கவுதமன், மாயவநாதன், அருணாசல முத்துசாமி, ராஜேந்திரன், ராமச்சந்திரபாண்டி, ஸ்ரீமுருகன் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.

    ஞானசேகரன், ஜாண்சன், ஜெயன், சுப்பு ராஜ், ராஜாமணி, முருகேசன்,பாவநாசம் என்ற முத்துகுமார், சரோஜா, ஆனந்த் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக பதவியேற்றனர். நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் செல்வகுமார், ராஜலிங்கராஜா, ராஜா, சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக விழாவில் லதாஇளங்கோ, ரேவதி முருகன், முத்தமிழ்பரமசிவம், தமிழரசி, சிநேகா பாரதி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

    2021-2022 ஆண்டு செயலர் அறிக்கையை சங்கச்செயலாளர் சுரேஷ் அளித்தார் . புதிய நிர்வாகிகளை கலைச்செல்வனும், உறுப்பி னர்களை ஜேக்கப்சுமனும் அறிமுகப்படுத்தினர். வட்டார தலைவர் செல்வம் வாழ்த்தி பேசினார். விழாவில், அரசுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற வெள்ளைபனையேறிப்பட்டி பள்ளிக்கு கேடயம்,பரிசு வழங்கப்பட்டது.

    முன்னாள் கூட்டுறவு வங்கித்தலைவர் பால்துரை , வட்டார நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் கருத்தபாண்டிநாடார் , இலக்கிய மன்ற தலைவர் செல்வன் , தொழிலதிபர் கோல்டன் செல்வராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சங்கப்பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    • வத்தலக்குண்டு வெற்றிலை நகர்லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
    • ரூ.20 ஆயிரம் மதிப்பிலான அரிசி மற்றும் பலசரக்கு பொருட்கள் வழங்கும் சேவை திட்டங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு வெற்றிலை நகர்லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவுக்குதலைவர் குணபாலன் தலைமை வகித்தார்.புதிய தலைவர் மனோ தீபன், செயலாளர் கமலக்கண்ணன், பொருளாளர் மனோகரன்ஆகியோருக்கு முன்னாள் ஆளுநரும் கேட் ஏரியா லீடருமான பாண்டியராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் ஆளுநர் மணிகண்டன் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான அரிசி மற்றும் பலசரக்கு பொருட்கள் வழங்கும் சேவை திட்டங்களை தொடங்கி வைத்தார்.மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    மண்டல தலைவர் டாக்டர் அண்ணாதுரை ,வட்டாரத் தலைவர் அருண்குமார், பட்டய தலைவர் வீரராஜ், பட்டய செயலாளர் ஓவிய சுந்தரம்ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். புதிய தலைவர் மனோ தீபன் ஏற்புரை வழங்கினார். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    வெற்றிலை நகர் கிளப் நிர்வாகியும்விரிவாக்க தலைவருமான திருமணி தொகுத்து வழங்கினார். விழாவில் வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம், நாடார் உறவின்முறை நிர்வாகி மதியழகன், ரோட்டரி சங்க தலைவர் இளஞ்செழியன், வெற்றிலை நகர் லயன்ஸ்கிளப் நிர்வாகிகள் பாண்டியன் , சுப்பிரமணி, கிருஷ்ணன், ஞானவேல், ராஜா முகமது உள்பட ஏராளமானோர்கலந்துகொண்டனர். முடிவில் புதிய செயலாளர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

    ×