தூத்துக்குடி லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

நிகழ்ச்சியில் புதிய தலைவராக ராஜ்குமார், செயலாளராக சுரேஷ் மற்றும் பொருளாளராக ஜேசா ஆகியோருக்கு முன்னாள் அரிமா ஆளுநர் கதிரேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் சுமார் 7 பயனாளிகளுக்கு 50 கிலோ அரிசி, கல்வி பயிலும் மாணவர்கள் 3 பேருக்கு ரூ. 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது.
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தபோது எடுத்த படம்.
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தபோது எடுத்த படம்.
Published on

தென்திருப்பேரை:

தூத்துக்குடி லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி தூத்துக்குடி புறவழிச்சாலை தனியார் கார்டனில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய தலைவராக ராஜ்குமார், செயலாளராக சுரேஷ் மற்றும் பொருளாளராக ஜேசா ஆகியோருக்கு முன்னாள் அரிமா ஆளுநர் கதிரேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் முன்னாள் அரிமா ஆளுநர் முருகன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சுமார் 7 பயனாளிகளுக்கு 50 கிலோ அரிசி, கல்வி பயிலும் மாணவர்கள் 3 பேருக்கு ரூ. 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. வட்டார தலைவர் டாக்டர் ஆரோக்கிய பழம் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க மண்டல தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com