search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DCW"

    • தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகள் விளையாடியுள்ளார் இஸ்மாயில்.
    • இதற்கு முன்னதாக 129 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசியுள்ளார்.

    பெண்கள் பிரீமியர் லீக் டி20 தொடர் இந்தியாவின் பெங்களூரு, டெல்லி நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் உள்ள போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டத்தின் 3-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின 2-வது பந்தை மேக் லேனிங் வீராங்கனைக்கு எதிராக 132.1 கி.மீட்டர் வேகத்தில் வீசினார்.

    இதன்மூலம் பெண்கள் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக எந்த வீராங்கனையும் 130 கி.மீட்டர் வேகத்தை தாண்டியது கிடையாது.

    இதற்கு முன்னதாக 2016-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 128 கி.மீட்டர் வேகத்தில் வீசியதே சாதனையாக இருந்தது. தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார். மேலும் 2022 உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை 127 கி.மீட்டர் வேகத்தில் வீசியுள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகள் விளையாடிய 34 வயதான இஸ்மாயில் 127 ஒருநாள் மற்றும் 113 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் களம் இறங்கியுள்ளார்.

    நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 192 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 163 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் லேனிங் 41 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார்.
    • ஜெஸ் ஜோனாஸ்சன் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பெண்கள் பிரீமியர் லீக்கில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான லேனிங் 41 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார். அலிஸ் கேப்சி 17 பந்தில் 27 ரன்களும், சதர்லேண்டு 12 பந்தில் 20 ரன்களும் அடித்தனர். குஜராத் டைட்டன்ஸ் வீராங்கனை மேக்னா சிங் 4 ஓவரில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 53 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ஆஷ்லே கார்டனர் 31 பந்தில் 40 ரன்கள் அடித்தார். என்றாலும் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜெஸ் ஜோனாஸ்சன் 3 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    ஜெஸ் ஜோனாஸ்சன்

    இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 போட்டிகள் முடியவில் 3-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 2-வது இடத்தையும், உ.பி. வாரியர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    • மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்களுக்கு நடந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
    • சுவாதி மலிவால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இம்பால் :

    மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    அப்போது அவரிடம் அந்த பெண்கள், அரசு சார்பில் யாரும் தங்களை சந்திக்கவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பேசிய சுவாதி மலிவால், "முதல்-மந்திரி பைரன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களை அவர் ஏன் சந்திக்கவில்லை. நான் டெல்லியில் இருந்து வந்து அவர்களை (பாதிக்கப்பட்டவர்களை) சந்திக்க முடியுமானால், அவரால் ஏன் முடியாது?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

    • மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சனை குறித்து முதல்வருடன் விவாதிக்க உள்ளதாக கடிதம்.
    • பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள்.

    புதுடெல்லி:

    கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசவும் தீர்மானித்திருந்தார். ஆனால் அவரது பயணத்துக்கு மணிப்பூர் அரசு அனுமதி மறுத்துள்ளது. அவரது பயணத்தை தள்ளிவைக்கும்படி கேட்டுக்கொண்டது. எனினும் ஸ்வாதி மாலிவால் திட்டமிட்டபடி இன்று மதியம் மணிப்பூருக்கு புறப்பட்டார்.

    மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அவரை இன்று சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாகவும் ஸ்வாதி மாலிவால் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

    மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான பிரச்சனையை விவாதிக்க உங்களை அவசரமாகச் சந்திக்க விரும்புகிறேன். மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையில் இருந்து தப்பிக்க பல மணிப்பூரி பெண்கள் டெல்லிக்கு வந்துள்ளனர். அவர்களின் நலன் தொடர்பான பிரச்சனைகளையும் உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன். எனவே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட ஆதரவு அளிக்க வேண்டும் என ஸ்வாதி மாலிவால் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • விழாவுக்கு டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
    • ஆறுமுகநேரியை சேர்ந்த செல்வலீலாவுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் சுரேஷ், உதவி துணை தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா மாவட்ட முதல் துணை ஆளுநர் அய்யாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் சீனியர் மேலாளரான ஒயிட் பீல்டு ஆர்தர் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயலாளர்களாக முத்துப்பாண்டியன், லோகா கிருஷ்ணசாமி, பொருளாளராக ராமசுப்பிரமணியன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். அனைவரும் உறுதிமொழியுடன் பதவி ஏற்று கொண்டனர்.

    தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆறுமுகநேரியை சேர்ந்த செல்வலீலா என்பவருக்கு தையல் எந்திரமும், சிவராமகிருஷ்ணனுக்கு மருத்துவ உதவி தொகையும், முக்காணி அவிஸ்டன், மேலஆத்தூர் அருள்ராஜ், ஆத்தூர் சாக்ஷினி ஆகியோருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டன. லையன் பிரகாஷ், சுப்பிரமணியன், பொன் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தந்தை வீட்டுக்கு வரும்போது நான் பயந்து போய் கட்டிலுக்கு அடியில் மறைந்துகொள்வேன்.
    • நான்காம் வகுப்பு படிக்கும் வரை தந்தையுடன் வசித்ததாக ஸ்வாதி மாலிவால் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று மகளிர் ஆணையம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் சிறுமியாக இருந்தபோது, அவரது தந்தை அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    "நான் சிறுமியாக இருந்தபோது எனது தந்தை என்னை அடிக்கடி அடிப்பார். என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அவர் வீட்டுக்கு வரும்போது நான் பயந்துபோய் கட்டிலுக்கு அடியில் மறைந்துகொள்வேன். பயத்துடனேயே கழித்த பல இரவுகளை இன்றும் நினைவுகூர்கிறேன். இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக பெண்களுக்கு எப்படி அதிகாரம் அளிப்பது என்று இரவெல்லாம் யோசித்திருக்கிறேன்" என்றார் ஸ்வாதி மாலிவால்.

    விருது பெற்ற பெண்களின் போராட்டம் தனது சொந்த போராட்டத்தை நினைவூட்டியதால், இந்த நிகழ்வு தன்னை உணர்ச்சிவசப்படச் செய்ததாக ஸ்வாதி மாலிவால் கூறினார். நான்காம் வகுப்பு படிக்கும் வரை தந்தையுடன் வசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    இதேபோல் பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்பூ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் சிறுமியாக இருந்தபோது தந்தையால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்பு வார விழாவில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு உறுதி மொழியினை ஏற்றனர்.
    • வதந்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிவக்குமார் தெரிவித்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை வளாகத்தில் 52- வது பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

    இதனை நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு உறுதி மொழியினை ஏற்றனர்.

    தொடர்ந்து கடந்த 10 நாட்களாக கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி, கோலப்போட்டி மற்றும் தீயணைப்பு சாதனங்களை பயன்படுத்தி விபத்தினை தடுப்பது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று நடந்த நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் கேசவன் தலைமை தாங்கினார். மனித வளம் மற்றும் சட்டப்பிரிவு மேலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, தீங்கு அற்ற பணியிடமே எங்களது குறிக்கோள் என்ற கருப்பொருளை மையமாக வைத்து தொழிற்சாலை இயங்க வேண்டும். வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தவறான வதந்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். பாதுகாப்பு நடவடிக்கையில் டி.சி.டபிள்யூ. அன்றாடம் பின்பற்றி வரும் நடைமுறை செயல்களை விளக்கி நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பேசினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை நிறுவனத்தின் பாதுகாப்பு துறையினர் செய்திருந்தனர்.

    • ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் 64-வது கால்கோள் தின விழா நடைபெற்றது.
    • தொழிலாளர்களும், அலுவலர்களும், நிர்வாகி களும் ஒரு குடும்பத்தினர் போல மகிழ்வுடன் இருப்பதை காண்கிறேன்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் 64-வது கால்கோள் தின விழா நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினர்

    விழாவிற்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் பக்குல் ஜெயின், விவேக் ஜெயின், மூத்த ஆலோசகர் முடித் ஜெயின், சீனியர் பிரசிடெண்ட் ஆசிஸ் ஜெயின், பிரசிடெண்ட் சாத்விக் ஜெயின், முதன்மை செயல் அலுவலர் அமிதாப் குப்தா, முதன்மை ஆப்பரேட்டிங் அலுவலர் சுதர்சன் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா குழு தலைவர் கேசவன் வரவேற்று பேசினார்.

    நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.சீனிவாசன் அறிமுக உரை நிகழ்த்தினார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக தலைவர் டி.கே. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-


    இந்த டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை 64-வது ஆண்டை தொட்டிருப்பது ஒரு மைல்கல். நமது நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தோம். அதேபோல் இந்த நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவையும் விரைவில் கொண்டாட உள்ளோம். ஒரு தொழிற்சாலை லாபகரமாக இயங்குவதில்தான் அதன் வெற்றி உள்ளது.

    இங்கு தொழிலாளர்களும், அலுவலர்களும், நிர்வாகி களும் ஒரு குடும்பத்தினர் போல மகிழ்வுடன் இருப்பதை காண்கிறேன். இந்த ஒற்றுமை உணர்வை பாராட்டுகிறேன்.சிறந்த நிர்வாகத்தை தந்து வரும் ஜெயின் குடும்பத்தினர் மேலும் பல தலைமுறைகளை கடந்தும் இந்த தொழிற்சாலையை சீரிய முறையில் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் கிராம சூழலில் இருக்கும் இப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளி கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதையும் பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிறப்பு மலர் வெளியீடு

    விழாவின் சிறப்பு மலரை டி.கே.ராமச்சந்திரன் வெளியிட அதனை டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் பெற்றுக் கொண்டனர். தொழிற்சாலையில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 29 தொழிலாளர்களுக்கு தலா 6 கிராம் தங்க நாணயமும், 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 136 தொழிலாளர்களுக்கு தலா 4 கிராம் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 90 பேருக்கு கைகடிகாரம் வழங்கப்பட்டது.

    மேலும் சுற்று வட்டார பள்ளிகளில் அரசு பொது தேர்வில் சாதனை புரிந்த மாணவ- மாணவிகளுக்கும் ரத்த தானம் செய்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் தொழிலதிபர்கள் எஸ்.ஆர்.எஸ். சுரேஷ்குமார், டி.ராஜா, ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் அ.கல்யாணசுந்தரம், காண்ட்ராக்டர்கள் கே.சிவகுமார், எஸ்.வெற்றிவேல், ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    விழா குழு துணைத் தலைவர் முருகேந்திரன் நன்றி கூறினார்.

    • சாகுபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • அனைவரும் சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றனர்.

    ஆறுமுகநேரி:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    தொழிற்சாலை அலுவலர்கள், தொழிலாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    அனைவரும் சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றனர். விழாவில் சீனிவாசன், நந்தினி சீனிவாசன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

    நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை நிறைவேற்றாதது ஏன்? என திகார் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு டெல்லி பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #NirbhayaMurderCase #DCW
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அந்த பெண் 13 நாள்கள் மருத்துவமனையில் இருந்து, பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவர் தாமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். முகேஷ், வினய் உள்பட மற்ற 4 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.

    டெல்லி நீதிமன்றம் விதித்த தூக்குதண்டனையை எதிர்த்து 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். குற்றவாளிகளில் ஒருவர் மேல்முறையீடு செய்யவில்லை. அவர்களது மேல்முறையீட்டு மனுவில் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, அவர்களது மனுவை நிராகரித்து தூக்கு தண்டனையை கடந்த ஜூலை மாதம் உறுதி செய்தது. ஆனால், தற்போது வரை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

    இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை விதிக்கப்படாதது ஏன்? என டெல்லி மகளிர் ஆணையம் திகார் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #NirbhayaMurderCase #DCW
    ×