என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Premier League"

    • மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை, பெங்களூரு, குஜராத், உபி, டெல்லி ஆகிய மாநிலங்கள் சார்பில் அணிகள் உள்ளது.
    • மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தமிழகம் சார்பில் எந்த அணியும் இல்லை.

    5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் (6 வெற்றி, 2 தோல்வி) பிடித்த ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களுரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    2-வது இடம் பிடித்த குஜராத் ஜெயன்ட்சும் (5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளி), 3-வது இடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்சும் (4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளி) இன்று வெளியேற்றுதல் சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி காணும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை, பெங்களூரு, குஜராத், உபி, டெல்லி ஆகிய மாநிலங்கள் சார்பில் அணிகள் உள்ளது. இதில் தமிழகம் சார்பில் எந்த அணியும் இல்லை.

    இந்நிலையில் சிஎஸ்கே-வின் அடுத்த கட்ட நடவடிக்கை மகளிர் கிரிக்கெட்டில் முதலீடு செய்வதாக இருக்கும் என்று சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

    அதன்படி மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தமிழகத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு அணி உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    முதல் 3 சீசன்கள் முறையே மகளிர் கோப்பையை மும்பை, ஆர்சிபி, மும்பை அணிகள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமர்க்களப்படுத்தியது.
    • கடைசி லீக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த பெங்களூரு தீவிரம் காட்டும்.

    5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் 2-வது அணியாக நுழையும்.

    இதுவரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (10 புள்ளி) அணி மட்டுமே 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து இருக்கிறது. எஞ்சிய இரு இடங்களுக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் (8 புள்ளி), மும்பை இந்தியன்ஸ் (6 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (6 புள்ளி), உ.பி.வாரியர்ஸ் (4 புள்ளி) ஆகிய அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இன்னும் 3 லீக் ஆட்டங்களே எஞ்சி இருக்கிறது. கடைசி இடத்தில் இருக்கும் உ.பி.வாரியர்ஸ் அணி ரன் ரேட்டிலும் பின்தங்கி இருப்பதால் தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும்.

    இந்த நிலையில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கடைசி இடத்தில் உள்ள உ.பி.வாரியர்சை எதிர்கொள்கிறது.

    முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமர்க்களப்படுத்தியது. அதன் பிறகு 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடமும், 15 ரன் வித்தியாசத்தில் மும்பையிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவி தொய்வு கண்டுள்ளது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (236 ரன்), ரிச்சா கோஷ் (183), கிரேஸ் ஹாரிசும், பந்து வீச்சில் லாரென் பெல் (11 விக்கெட்), நடினே டி கிளார்க், சயாலி சத்கரேவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    உ.பி.வாரியர்ஸ் அணியில் பேட்டிங்கில் கேப்டன் மெக் லானிங் (207 ரன்), ஹர்லீன் தியோலும், பந்து வீச்சில் சோபி எக்லெஸ்டோன், தீப்தி ஷர்மாவும் நம்பிக்கை அளிக்கின்றனர். 243 ரன்கள் குவித்த போபி லிட்ச்பீல்டு காயம் காரணமாக வெளியேறி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான அமே ஜோன்ஸ் (ரூ.50 லட்சம்) சேர்க்கப்பட்டுள்ளார்.

    மொத்தத்தில் இன்றைய தங்களது கடைசி லீக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த பெங்களூரு தீவிரம் காட்டும். ஏற்கனவே முந்தைய லீக்கில் உ.பி. வாரியர்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருப்பதால் கூடுதல் நம்பிக்கையோடு இறங்குவார்கள். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு காலியாகி விடும் என்பதால் உ.பி.வாரியர்ஸ் வெற்றிக்காக எல்லா வகையிலும் போராடும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    • ரிச்சா கோஷ் கடைசி 2 ஓவரில் 5 சிக்சர்கள் ஒரு பவுண்டரி விளாசியுள்ளார்.
    • ரிச்சா கோஷ் 50 பந்தில் 90 ரன்களை விளாசி அசத்தினார்.

    பெண்கள் பிரீமியர் லீக் 2026 சீசனில் வதோதராவில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.

    டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. நாட் ஸ்கைவர்-பிரன்ட் சதத்தால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

    200 என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. ஸ்மிருதி மந்தனா 18 ரன்களில் அவுட் ஆக, ரிச்சா கோஷ் தனி ஆளாகப் போராடி 50 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

    இருப்பினும் ஆர்சிபி அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எட்ட முடிந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் போராடி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவி உள்ளது.

    ஆர்சிபி அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியின் வீராங்கனை ரிச்சா கோஷ்-க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கடைசி 2 ஓவரில் ஆர்சிபி அணி 43 ரன்களை எடுக்க ரிச்சா கோஷ் முக்கிய பங்காற்றினார். அவர் கடைசி 2 ஓவரில் 5 சிக்சர்கள் ஒரு பவுண்டரி விளாசியுள்ளார்.

    வெற்றிக்காக போராடிய ரிச்சா கோஷ் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளார். அவரை பினிஷ்சர் என்றும் எம் எஸ் தோனியுடன் ஒப்பிட்டும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • மும்பை அணியில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் கமலினி காயம் காரணமாக விலகி உள்ளார்.
    • மும்பை அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

    5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவி மும்பையில் நடந்தன. இந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த நிலையில் மும்பை அணியில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் கமலினி காயம் காரணமாக மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா மும்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.

    2025-ம் ஆண்டு இந்தியாவின் ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். இந்தியாவுக்காக 5 டி20 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


    மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் அடைந்துள்ளது.
    • டெல்லி அணி 4 போட்டிகளில் 1 வெற்றி 3 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் நவி மும்பையில் நடந்தன. இந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் குஜராத் மாநிலம் வதோதராவில் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள 13-வது ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

    மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 3-ல் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 4 போட்டிகளில் 1 வெற்றி 3 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    • 4-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.
    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 ஆட்டத்திலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.

    நேற்றுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன. இன்று ஓய்வு நாளாகும்.

    நாளை முதல் 2-வது மற்றும் இறுதிகட்ட ஆட்டங்கள் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெறுகிறது.

    11 போட்டிகள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 ஆட்டத்திலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் (5 போட்டி), குஜராத் ஜெய்ன்ட்ஸ் (4), உ.பி. வாரியர்ஸ் (5) தலா 4 புள்ளிகளுடனும், டெல்லிகேப்பிடல்ஸ் 2 புள்ளியுடனும் (4) உள்ளன.

    நாளை நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன.

    • உ.பி. வாரியர்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
    • கிரேஸ் ஹாரிஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 5வது லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    உ.பி. வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மேக் லென்னிங் , ஹெர்லின் டியோல் களமிறங்கினர்.

    லென்னிங் 14 ரன்னிலும், டியோல் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த லிட்ச்பில்ட் 20 ரன்கள் , கிரன் 5 ரன்கள் எடுத்தனர். ஷிராவத் டக் அவுட் ஆனார்.

    பின்னர் களமிறங்கிய டெண்ட்ரா , தீப்தி சர்மாவுடன் ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்தது.

    20 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.

    144 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் கிரேஸ் ஹாரிஸ் களமிறங்கினர்.

    கிரேஸ் ஹாரிஸ் 22 பந்துகளில் அரைசதமும் 40 பந்துகளில் 85 ரன்களும் அடித்து ஷிகா பாண்டேவிடம் பந்தில் அவுட் ஆனார். மந்தனா ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் குவித்தார்.

    இறுதியில் 12.1 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 74 ரன்கள் குவித்தார்.

    நவிமும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீராங்கனைகளாக அமேலியா கெர்- கமாலினி களமிறங்கினர். இதில் கெர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து கமாலினி 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து நாட் ஸ்கிவர்-பிரண்ட்- ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஸ்கிவர் 46 பந்தில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து வந்த நிக்கோலா கேரி தொடக்க முதலே அதிரடியாக விளையாடி 12 பந்தில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய கவுர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 74 ரன்கள் குவித்தார்.

    இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.

    • தனி ஆளாக போராடிய லிட்ச் பீல்ட் 78 ரன்னில் அவுட் ஆனார்.
    • உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ்-மெக் லானிங் தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    சோபி டிவைன், அனுஷ்கா சர்மா, கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்தது.

    கடினமான இலக்கை நோக்கி உபி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக டியான்ட்ரா டோட்டின், மெக் லேனிங் இதில் டோட்டின் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து லேனிங் மற்றும் போப் லிட்ச்பீல்ட் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    குறிப்பாக போப் லிட்ச்பீல்ட் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். நிதானமாக விளையாடிய லேனிங் 27 பந்தில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த வந்த வீராங்கனைகளான தியோல் (0), தீப்தி ஷர்மா (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தனி ஆளாக போராடிய லிட்ச் பீல்ட் 78 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில் உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

    • குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அரை சதம் விளாசினார்.
    • 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ரன்கள் குவித்தது.

    5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ்-மெக் லானிங் தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீராங்கனைகளாக சோபி டிவைன், பெத் மூனி களமிறங்கினர். இதில் பெத் மூனி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிவைன் அனுஷ்கா சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    டிவைன் 38 ரன்னிலும் அனுஷ்கா 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 65 ரன்னில் வெளியேறினார்.

    அதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ரன்கள் குவித்தது.

    • தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • கடந்த ஆண்டில் பட்டம் வென்ற அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.3 கோடியும் வழங்கப்பட்டது.

    நவிமும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் 2023-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அறிமுக ஆண்டில் மும்பை இந்தியன்சும், அடுத்த ஆண்டில் (2024) பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், கடந்த ஆண்டு 2-வது முறையாக மும்பை இந்தியன்சும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

    இந்த நிலையில் 4-வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    பிப்ரவரி 5-ந் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில், முதல் 11 லீக் ஆட்டங்கள் நவிமும்பையிலும், இதைத்தொடர்ந்து அடுத்த 9 லீக் ஆட்டங்கள், வெளியேற்றுதல் சுற்று, இறுதிப்போட்டி ஆகியவை குஜராத் மாநிலம் வதோதராவிலும் அரங்கேறுகிறது. சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய பெண்கள் அணி வென்ற பிறகு நடக்கும் பெரிய போட்டி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    கடந்த 3 சீசன்களிலும் டெல்லி அணிக்கு தலைமை தாங்கி அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற மெக் லானிங் (ஆஸ்திரேலியா) உ.பி.வாரியர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டதுடன் அந்த அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பையில் கலக்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். மற்றபடி எல்லா அணிகளும் ஒரு சில வீராங்கனைகள் மாற்றத்துடன் தங்களது படை பலத்தை அதிகரித்து களம் காணுகின்றன.

    ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நட்சத்திர பட்டாளங்கள் அதிகம் இடம் பிடித்துள்ளனர். இதனால் எந்த அணி வாகை சூடும் என்று கணிப்பது கடினமான காரியமாகும். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இடையே கோப்பையை வெல்வதில் கடும் போட்டி நிலவும் என கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    போட்டிக்கான பரிசுத் தொகை விவரம் அறிவிக்கப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டில் பட்டம் வென்ற அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.3 கோடியும் வழங்கப்பட்டது. அதே பரிசுத் தொகையே இந்த முறையும் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    நவிமும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணியில் நாட் சிவெர், ஹெய்லி மேத்யூஸ், அமெலியா கெர், இல்லிங்வொர்த், அமன்ஜோத் கவுர், ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக், தமிழக விக்கெட் கீப்பர் கமலினி உள்ளிட்ட சிறந்த வீராங்கனைகள் அங்கம் வகிக்கின்றனர்.

    இதேப ோல் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியில் ஜார்ஜியா வோல், கிரேஸ் ஹாரிஸ் நடினே டி கிளார்க், அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்ட்ராகர், லாரென் பெல், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பட்டீல், ரிச்சா கோஷ் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தனிப்பட்ட காரணத்தால் ஆல்-ரவுண்டரான எலிசி பெர்ரி (ஆஸ்திரேலியா) விலகி இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும்.

    உலகக் கோப்பையில் ஒன்றாக கலக்கிய ஹர்மன்பிரீத், மந்தனா இருவரும் எதிரும், புதிருமாக கோதாவில் குதிப்பதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்

    இருவரும் நேற்று நிருபர்களிடம் பேசும் போது, 'நாங்கள் (இந்தியா) உலகின் தலைச்சிறந்த அணியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இன்னும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. அதற்கு டபிள்யூ.பி.எல். போட்டி உதவிகரமாக இருக்கும்' என்றனர்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 4 ஆட்டத்திலும், பெங்களூரு 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம்.

    • வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலியாவின் மெக்லேனிங் டெல்லி அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
    • தீப்தி சர்மாவை ஏலத்தில் எடுப்பதற்கு போட்டி நிலவும்.

    புதுடெல்லி:

    மகளிர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் டபிள்யூ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

    5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் 2 முறையும் (2023, 2025), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு தடவையும் (2024) சாம்பியன் பட்டம் பெற்றன.

    4-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான மெகா ஏலம் டெல்லியில் நாளை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.

    இந்த ஏலத்துக்கான பட்டியலில் 194 இந்திய வீராங்கனைகள், 83 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 277 பேர் இடம் பெற்றுள்ளனர். 5 அணிகளில் விளையாடுவதற்காக 50 இந்திய வீராங்கனைகள், 23 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த தீப்தி சர்மாவை ஏலத்தில் எடுப்பதற்கு போட்டி நிலவும்.

    வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலியாவின் மெக்லேனிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்ட், இங்கிலாந்தின் சோபி எக்லஸ் டோன், நியூசிலாந்தின் சோபி டிவைன், அமீலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல் வார்ட் ஆகியோரை ஏலம் எடுக்கவும் அணிகள் இடையே போட்டி ஏற்படும்.

    ×