search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senji Mastan"

    • சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.
    • அமைச்சர் கொடுத்த லட்டை வாங்கிக்கொண்டு அந்தப் பெண் சென்றுவிட்டார்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆர். நயம்பாடி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சாமி ஆடிக்கொண்டு ஒரு பெண் வந்தார். அவரிடம் சென்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் என்ன என்று கேட்டபோது அண்ணாநகர் பகுதியில் மலைவாழ் மக்கள் வசிக்கிறோம் எங்கள் பகுதிக்கு ரோடு போட்டு தரணும் என்று கேட்டார் .

    அதற்கு வழியில் உள்ளவர்கள் நிலம் தந்தால் சாலை அமைத்து தருகிறேன் என்று அமைச்சர் சொன்னதற்கு அதையெல்லாம் நீ பார்த்துக்கோ எங்களுக்கு ரோடு தான் வேணும் என்று சொன்னார். பின்னர் அமைச்சர் கொடுத்த லட்டை வாங்கிக்கொண்டு அந்தப் பெண் சென்றுவிட்டார்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

    • 33 பயனாளிகளுக்கு தையல் எந்திரத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
    • 150 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்தில் உதவித் தொகை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மை யினர் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

    நலத்திட்ட உதவிகள்

    நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதில் 33 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 280 மதிப்பிலான மின்மோட்டாருடன் கூடிய தையல் எந்திரத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். மேலும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 150 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்தில் உதவித் தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 110 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்தில் உதவித்தொகை வழங்கினார். மொத்தமாக 293 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

    சட்டத்தின் ஆட்சி

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், தமிழகத்தில் மட்டும் தான் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் சிறுபான்மை யினர் நிம்மதியாக வாழ்வதாக சொல்ல முடியாது.

    சிறுபான்மை மக்க ளுக்குமட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கான முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றார்.

    அமைச்சர் பேச்சு

    விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு தி.மு.க அரசு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அயலக பணிக்கு செல்வோர் எந்த பணிக்கு செல்கிறோம் என்பதை அறிந்து செல்வதோடு அரசிடம் பதிவு செய்து செல்ல வேண்டும். வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலைக்கு செல்லும் நாட்டின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து தான் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். போலி ஏஜெண்ட்கள் ஆசை வார்த்தை காட்டி இங்கு உள்ளவர்களை வேலைக்கு அழைத்து செல்கின்றனர். மாவட்ட கலெக்டரிடம், வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கட்டாயம் பதிவு செய்து செல்ல வேண்டும்.

    சிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்தினாலும், அவர்களுக்கு தொடர்ந்து கிடைத்திட மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், முஸ்லீம் மகளிர் உதவும் கரங்கள் சங்க செயலாளர் செய்யது அகமது, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க செயலாளர் பிரான்சிஸ் சேவியர், சிறுபான்மை நல அலுவலர் சம்பத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அப்பம்பட்டு கிராமத்தில் 1970-ல் சையது அப்துல் கபார் என்ற சிறு வியாபாரி வீட்டில் முட்டை மிட்டாய் தயார் செய்து சிறிய அளவில் விற்பனை செய்து வந்தார்.
    • செஞ்சி பகுதியில் வணிகக் குறியீடாக முட்டை மிட்டாய் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அப்பம்பட்டு கிராமத்தில் 1970-ல் சையது அப்துல் கபார் என்ற சிறு வியாபாரி வீட்டில் முட்டை மிட்டாய் தயார் செய்து சிறிய அளவில் விற்பனை செய்து வந்தார்.

    அல்வா, அசோகா, பால்கோவா, போன்ற வடிவில் தனித்துவமான பிரவுன் நிறத்தையும் தன்னி–கரில்லா சுவையையும் கொண்டது முட்டை மிட்டாய். செஞ்சி கூட்ரோட்டில் சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கடை திறக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவை பெற்றது.

    செஞ்சி பகுதியில் வணிகக் குறியீடாக முட்டை மிட்டாய் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. செஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், உளுந்தூர்பேட்டை, சென்னையில் ராயப்பேட்டை, முகப்பேர் மேற்கு, விருகம்பாக்கம், அண்ணா நகர், மாயாஜால் (ஈ.சி.ஆர்) ஆகிய இடங்களிலும் சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கிளைகளை உருவாக்கி வாடிக்கையாளர்களின் வர–வேற்பேப்பை பெற்றுள்ளது.

    52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சையத் ஸ்வீட்ஸின் முட்டை மிட்டாய் புதிய கிளை புதுவை முத்தியால்பேட்டை வள்ளி மோட்டார்ஸ் எதிரில் திறக்கப்பட உள்ளது.

    இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையேற்று கடையை திறந்து வைக்கிறார்.

    இந்நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார், அகில இந்திய வணிகர் சம்மேளன முதன்மை துணைத் தலைவரும் புதுவை வணிகர் கூட்டமைப்பு தலைவரும் உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவசங்கர், நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ், புதுவை மாநில ஹோட்டல் சங்கத் தலைவர் ஜனாப். ஹாஜி.அப்துல் சுபான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் புதுவை, தமிழக வணிகர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், பொது மக்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரையும் சையது ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனர் சைய்யது உஸ்மான் மற்றும் குடும்பத்தினர் வரவேற்கின்றனர்.

    ×