search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் திடீர் நிறுத்தம்
    X

    பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் திடீர் நிறுத்தம்

    • 4 வயது குழந்தை காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் பரவியது.
    • காங்கயம் காவல் துறையினா் கழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக வாய்க்காலில் அதிக அளவு தண்ணீா் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தோ்த் திருவிழாவுக்கு வந்திருந்த ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 4 வயது குழந்தை காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் பரவியது. இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நீா்வளத் துறை மூலம் பிஏபி., வாய்க்காலில் தற்காலிகமாக தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது.

    வெள்ளக்கோவில் , காங்கயம் காவல் துறையினா் கழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இருப்பினும் குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்தது உறுதிப்படுத்தபடாததால், வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    Next Story
    ×