search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்துக்கு நீர் திறப்பு 22ந் தேதி நிறைவு
    X

    கோப்புபடம்.

    பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்துக்கு நீர் திறப்பு 22ந் தேதி நிறைவு

    • 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்தாண்டு டிசம்பர் 28ல் நீர் திறக்கப்பட்டது.
    • நீர் கசிவை தடுக்க ரூ. 72 கோடி செலவில் நடப்பாண்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    உடுமலை :

    பரம்பிக்குளம் - ஆழியாறு 3ம் மண்டல பாசனத்திற்கு ட்பட்ட 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்தா ண்டு டிசம்பர் 28ல் நீர் திறக்கப்பட்டது. 4 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு வருகிற 22ல் நிறைவு செய்ய ப்படுகிறது. திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாயில் நீர் கசிவை தடுக்க ரூ. 72 கோடி செலவில் நடப்பாண்டு பணி மேற்கொள்ள ப்படுகிறது.பாசனம் நிறைவு பெற்றதும் உடனடியாக பணியை துவக்கவும், வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் நிறைவு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பயன்பெறும் 5 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. தினமும் 21 மில்லியன் கன அடி நீர் தேவை உள்ளது.

    தற்போதைய நிலவரப்படி அணையில் மொத்தமுள்ள, 60 அடியில் 28.69 அடி நீரும், மொத்த கொள்ளளவான 1,337 மில்லியன் கனஅடியில் 802.86 மில்லியன் கன அடிநீர் மட்டுமே இருப்பு உள்ளது.நடப்பாண்டு கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பராமரிப்பு பணி முடிய 4 மாதமாகும். குடிநீர் மற்றும் அணை உயிரினங்கள், வன விலங்குகளுக்கு தேவையான அளவு நீர் இருப்பு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து பி.ஏ.பி., தலைமை பொறியாளர் முத்துசாமி கூறுகையில், தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக ஏப்ரல் 30ந் தேதி வரை தண்ணீர் பெறப்படும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை. விவசாயி கள் கோரிக்கை அடிப்ப டையில், பாசன காலம் இரு நாட்கள் நீட்டிக்கப்ப ட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×