search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி பாசன வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
    X

    அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி. 

    பி.ஏ.பி பாசன வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

    • பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.
    • வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :

    பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதனையொட்டி பாசன தண்ணீர் கடை மடை வரை சென்றடைய வேண்டும் என்பதற்காக பல்லடம் பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி அந்தந்த பாசன சபைகள் மூலம் நடைபெற்று வருகிறது.

    இதனை பொள்ளாச்சி பி.ஏ.பி. தலைமை செயற்பொறியாளர் ரவி நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மாபாளையம் பிரிவில் உள்ள அரசங்காடு பகுதியில் உள்ள அமுக்குபாலம் இறங்கி இருப்பதால் அதனை சீரமைக்கும் பணியை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பல்லடம் உதவி செயற்பொறியாளர் ஆனந்தபாலதண்டபாணி, உதவி பொறியாளர் சியாமளா, பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பாசன திட்ட உதவியாளர்கள் உதயகுமார், ராஜ்குமார், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×