search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி., வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
    X

    பி.ஏ.பி., வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

    • கையகப்படுத்திய நிலங்களுக்கு தற்போது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
    • வாய்க்கால்களை உடைக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றியச் செயலாளா் வை.பழனிசாமி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாவட்டம் பல்லடம் வட்டம் பூமலூா் கிராமத்தில் பிஏபி. பாசனத் திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு தற்போது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆகவே பூமலூா் கிராமத்தில் பிரதான வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்களுக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாமளாபுரம் கிராம நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தின் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- பிஏபி., வாய்க்கால்களிலும், கிளை வாய்க்கால்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் ஒரு சில இடங்களில் கிளை வாய்க்கால்களையும் சோ்த்து கம்பிவேலி போடுகின்றனா். மேலும் கிளை வாய்க்கால்களில் மண்ணை அப்புறப்படுத்துவதால் கரைகளில் உடைப்பும் ஏற்படுகிறது. ஆகவே, பிஏபி., வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாய்க்கால்களை உடைக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

    Next Story
    ×