search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers demand"

    • நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மகிமலை ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி காழியப்பன்நல்லூர், எருக்கட்டாஞ்சேரி, பொறையார், காட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

    இந்த நிலையில் இப்பகுதியில் வடிகால் மற்றும் பாசனவாய்க்காலுக்கு தண்ணீர் வரும் மகிமலை ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து இருப்பதால் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டும் தண்ணீர் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மதகுகளில் ஆகாயத்தாமரை செடி கொடிகள் படர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் செல்வதில் தேக்க நிலை ஏற்படுகிறது .

    எனவே பருவ மழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்படும் முன்பே தேங்கியுள்ள ஆகாயத்தாமரை, செடி கொடிகளை அகற்றி சம்பா பயிர்களை காப்பாற்ற பொதுப்பணித்துறையினர் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாலாற்றின் இருகரையிலும், அமைந்துள்ள இப்பகுதியில், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது.
    • அந்த தண்ணீர் மீண்டும் கிடைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேவனுார்புதுார், ஆண்டியூர், வலையபாளையம், ராவணாபுரம், திருமூர்த்திநகர், பொன்னலாம்மன் சோலை உள்ளிட்ட 15-க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. பாலாற்றின் இருகரையிலும், அமைந்துள்ள இப்பகுதியில், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. தென்னை மரங்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- பி.ஏ.பி., பாசன திட்டத்தில், காண்டூர் கால்வாய் மற்றும் திருமூர்த்தி அணை கட்டப்படும் முன், மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து பல சிற்றாறுகள் சமவெளியை நோக்கி கரைபுரண்டு ஓடியது. இதனால், எங்கள் பகுதி வளமிக்கதாக இருந்தது. சிற்றாறுகளில் இருந்த நீரோட்டத்தால், நீர்மட்டம் குறையாமல் இருந்தது. காண்டூர் கால்வாய் கட்டப்பட்ட பிறகு, சிற்றாறுகளின் நீர்வரத்து, முழுமையாக தடைபட்டு, கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு சென்று விடுகிறது. இதனால், மலை அடிவாரத்திலுள்ள அனைத்து சிற்றாறுகளும் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு எவ்வித பாசன திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரின்றி தரிசு நிலமாக காட்சியளிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, வேதனையுடன் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட பல கிராம விவசாயிகள், தற்போது ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, அதன்மூலம் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். அதில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதிகளுக்கு, தனியாக பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள சிற்றாறுகளில், இருந்து வரும் தண்ணீர் காண்டூர் கால்வாயை அடைகிறது. அந்த தண்ணீரை அருகிலுள்ள விளை நிலங்களுக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும். பாலாற்றின் குறுக்கே திருமூர்த்தி அணை கட்டிய பிறகு இயற்கையான முறையில் கிடைக்கும் தண்ணீர் தடைபட்டுள்ளது. அந்த தண்ணீர் மீண்டும் கிடைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    • கலெக்டர் தகவல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது.

    அவர் பேசியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை கல்லூரி அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    1,133 செயல்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து மழைநீர் சேகரிக்கும் தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை பெற்று சிறு குட்டைகள், தடுப்பணைகள், பண்ணை குட்டைகள் அமைத்திட வேண்டும். இதன் மூலம் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு பயன் அளிக்கும்.

    விவசாயிகளுக்கு தேவையான இ-அடங்கல் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் உடனடியாக வழங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் புல் வெட்டும் கருவிகள் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வேளாண் உபகரணங்கள் வழங்க வேண்டும்.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவில் பயிர் கடன்களை வழங்க வேண்டும் இவ்வாறு அவர் பேரினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சோமசுந்தரம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன், முன்னோடி வங்கி மேலாளர் கௌரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 2 காட்டு யானைகள் தென்னை மரத்தை சேதம் செய்தது.
    • இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    உணவு தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    குறிப்பாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

    ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட அருள்வாடி பகுதியை சேர்ந்த பங்கஜப்பா விவசாயி 2 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளார்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த 2 காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரத்தை சேதம் செய்தது. அருகில் இருந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானைகளை இரவு 12 மணியளவில் காட்டு யானைகளை விரட்ட முயன்றனர்.

    3 மணி நேர போராட்டத்திக்கு பிறகு யானையை வனப்பகுதியில் விரட்டினார்கள். யானையால் 20 தென்னை மரம் சேதம் ஆனாது.

    இதனால் அபபகுதி விவசா யிகள் அச்சமடைந்த னர். யானைகள் விவசாயத் தோட்டத்தில் புகாதவாறு வணப்பகுதி சுற்றி அகழி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
    • வேளாண்மை அலுவலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவ தாகவும் சேதப்படுத்தும் நெற்பயிர்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டும் எனவும் ஏரியில் மணல் எடுப்பதை தடுக்கவும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதில் வேளாண்மை அலுவலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • 5,000 வாழை மரங்கள் சேதமானது
    • விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தல்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதிவேகமாக சூறைக்காற்று வீசியதில் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தது நாசமானது.

    இதில் குறிப்பாக வேதாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த கேசவன், சேகர், ராஜேந்திரன் உள்பட 5-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டிருந்த சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் பாதியில் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் நாசமடைந்துள்ளது.

    இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுபடுத்தும் வகையில் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சோழவந்தானில் பாசன கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.
    • விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் விவசாய பூமியாகும். இங்கு முல்லை பெரியாறு பாசன நீர் மூலம் 3 போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தின் களஞ்சியமாக விளங்கும் சோழவந்தானில் பொதுப்பணித்துறை அதி காரிகளின் மெத்தனத்தால் விவசாயம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    சோழவந்தானில் உள்ள வடகரை கண்மாயில் இருந்து வைகை ஆறு வரை 40அடி கால்வாய் முற்றிலும் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள 200 ஏக்கருக்கு மேற் பட்ட விவசாய நிலங்கள் தண்ணீர் வசதி பெறமுடியாமல் உள்ளன. மேற்கண்ட கால்வாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனால் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படாததால் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்க வலை விரித்து வருகின்றன.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மழையின்போது ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் 40 அடி கால்வாயை தூர்வாரி தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி அழியும் நிலையில் உள்ளது.
    • மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வத்திராயிருப்பு, கான்சாபுரம், மம்சாபுரம், ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், தேவதானம், சேத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    30 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த பகுதியில் ஏராளமானோர் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். வீரிய ரகங்கள் உட்பட பல ரகங்கள் பயிரிடப்பட்டு அதிகமாக விளைச்சல் பெற்று கரும்பாலைக்கு கரும்பை அனுப்பி வைத்தனர்.

    கடைசி 3 வருடங்களுக்கு முன்பு அனுப்பிவைத்த கரும்புக்கு ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு பணம் வராத நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் முறையிட்டும் எந்தவித பயனுமில்லாத நிலையில் பேச்சு வார்த்தை மட்டுமே நீடித்து வருகிறது.

    கரும்பு விவசாயிகளுக்கு பணம் கிடைத்த பாடில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டு கரும்பு பதிவும் நிறுத்தப்பட்டது. இந்த ஆலையை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் சிவகங்கை, ஆண்டிபட்டி உள்பட பல்வேறு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பி வைத்து வருகின்றனர்.

    25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். தற்போது சர்க்கரை ஆலை குளறுபடி மற்றும் பணம் வராத நிலை போன்ற வற்றால் மனம் மாறிய கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிடுவதற்கு பதிலாக நெல், வாழை, தென்னை போன்ற பயிர்களுக்கு மாறிவிட்டனர்.

    தற்போது இந்த பகுதியில் மொத்தத்தில் 5 ஆயிரம் ஏக்கர் கரும்பு மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. அதுவும் பாதிக்கு மேல் சொந்த ஆலை அமைத்து வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இன்னும் சிலர் பக்கத்து கரும்பாலை களுக்கு அனுப்பி வைத்து குறைந்த லாபத்தை ஈட்டி வருகின்றனர்.

    மத்திய-மாநில அரசுகள் உடனடியாக இந்த சர்க்கரை ஆலை விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வு காணப்பட்டால் மட்டுமே கரும்பு விவசாயம் இந்த பகுதியில் நடக்கும். இல்லாவிட்டால் கரும்பு விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    • திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வடமதுரையை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன.
    • அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள உணவு பூங்கா விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வடமதுரையை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இங்கு பயிரிடப்படும் காய்கறிகள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் சில நேரங்களில் விலை கிடைக்காமல் விவசாயி களுக்கு நஷ்டம் ஏற்படுத்து கிறது.

    மேலும் விலை அதிகரித்த போதும் போதுமான லாபம் அவர்களுக்கு கிடைக்க வில்லை. எனவே அரசு சார்பில் உணவு பூங்கா அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு 10 மெகா உணவு பூங்கா அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதில் ஒன்று அய்யலூர் அருகே தங்கம்மாபட்டியில் அமைக்க முடிவு செய்யப்ப ட்டது.

    அதன்படி ரூ.82 கோடி மதிப்பில் மாம்பழ கூழ், நிலக்கடலை, புளி, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட வேளாண் பொருட்களை உணவு பொருட்களாக மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் உணவுப்பூங்கா அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்க ப்பட்டது. இதற்காக 10 ஏக்கரில் நிலம் கைய கப்படுத்தப்பட்டு குளிர்சா தன கட்டமைப்பு, வணிகம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு ள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சுற்றுவட்டார பகுதிகளில் வெங்காயம், தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டு வருகிறோம். மழை காலங்களில் உற்பத்தி குறைவாக இருக்கும்போது நல்ல விலை கிடைக்கும். ஆனால் சில நேரங்களில் அதிக வரத்து இருந்தால் விலை கிடைக்காமல் உணவுப்பொருட்கள் அழி யும் நிலை ஏற்பட்டு வரு கிறது.

    எனவே குளிர்சாதன கிட்டங்கி அமைத்தால் இப்பகுதி விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். அய்யலூர் பகுதியில் தக்காளி அதிகளவில் பயிரிடப்படுகிறது. விலை வீழ்ச்சி காரணமாக கடந்த சில நாட்களாக சாலை யோரம் தக்காளிகளை கொட்டி செல்லும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. எனவே உணவு பூங்கா விரைந்து செயல்பாட்டிற்கு வந்தால் தக்காளி பதப்படுத்தப்படும்.

    மேலும் ஜூஸ் கம்பெனிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைக்கும். இந்த உணவு பூங்காவை விரைவில் திறக்க வேண்டும். இதன்மூலம் அய்யலூர், எரியோடு, வடமதுரை, குஜிலியம்பாறை, பாளையம் பகுதி விவசாயிகள் வாழ்க்கைத்தரம் உயரும் என்றனர்.

    • ஏரி பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் குறித்து வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை.
    • பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தவர்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளதால் தேர்தலை ரத்து செய்து மாற்று தேதியில் நடத்த வேண்டும்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் ஏரி நீரை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யும் பணி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிலையில் வருகிற 19ஆம் தேதி சங்க தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவுரிவாக்கம் கொளத்தூர் - குமரசிரலப்பாக்கம் இரண்டு ஏரிகளில் வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் பட்டியலில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த இருவரின் பெயர்கள் தற்போதும் இடம்பெற்றுள்ளதால் இரண்டு ஏரிகளுக்கும் வருகிற 19 ஆம் தேதி தேர்தலை நடத்தாமல் ரத்து செய்து மாற்றுத் தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் எனவும், வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யக்கூடாது எனவும் கூறி மனு அளித்ததாகவும் அதனை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாகவும் தேர்தல் நடத்துவது குறித்து முறையாக அறிவிப்பை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் வெளியிடவில்லை எனவும் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அபிராமம் பகுதியில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.
    • இழப்பீடு கேட்டு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பச்சேரி, நீர்தாண்டதானம், அச்சங்குளம், விரதக்குளம், உடையநாதபுரம், போத்தநதி, ஏ.புதூர், புல்லந்தை நந்திசேரி, காடனேரி, நரியன், முத்தாதிபுரம் உள்பட 75-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3,750 ஏக்கரில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்துவருகின்றனர்.

    75 நாட்களுக்கு முன்பு அவ்வப்போது மழை பெய்ததால் நெற்பயிர் ஒரளவு வளர தொடங்கியது. இதனால் விவசாயிகள் கூலி வேலைக்கு ஆட்களை வைத்து களை எடுத்தல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பருவமழை போதிய அளவு பெய்யாததால் கண்மாய் ஊருணிகள் வறண்டு தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது.

    இது குறித்து அபிராமம் பகுதி விவசாயிகள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். அபிராமம் பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிருதுமால் நதி மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாமலும் புதர்மண்டியும் கிடக்கிறது. இதனால் பலமுறை வைகையில் தண்ணீர் வந்தும் அபிராமம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.

    கிருதுமால் நதியை தூர்வார ேகாரியும், அக்கிரமிப்புகளை அகற்ற ேகாரியும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் அபிராமம் பகுதி விவசாயிகள் கருகிய நெற்பயிர்களை மாடுகளுக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது

    இதுகுறித்து நீர் தாண்டதானம் விவசாயி தர்மமுனியாண்டி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இந்த பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிருதுமால் நதி தூர்வாரப்படாமல் கருவேல மரங்களால் புதர்மண்டி கிடக்கிறது.

    அதிகாரிகளின் அலட்சியத்தால் தூர்வாரப்படாததால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. விவசாயம் செய்ய கடன் வாங்கி செலவு செய்தோம். மழை இல்லாததால் மேலும் கடனாளியாகும் நிலை உள்ளது. அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் தலையிட்டு பயிர்கடனை தள்ளுபடி செய்வதுடன் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.26 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

    • பாலத்தின் அருகில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் அடியோடு தார் சாலையை பெயர்ந்து தண்ணீரில் கலந்து சென்றுவிட்டது.
    • இதனை சீரமைத்து தர வேண்டும என 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே காணி மேடு கிராமம் மண்டகப்பட்டு கிராமம் இடையே தரைப்பாலம் அமைந்துள்ளது. பாலத்தின் அருகில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் அடியோடு தார் சாலையை பெயர்ந்து தண்ணீரில் கலந்து சென்று விட்டது. இதனால் இரு சக்கர வாகனம் மற்றும் லாரிகள் டிராக்டர்கள் நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கடும் அவதி அடைந்து வருகிறார்கள் எனவே இதனை சீரமைத்து தர வேண்டும என 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×