என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கோரிக்கை"

    • குழிகளை யானைகள் மண்தள்ளி மூடி கடந்து இரவு நேரங்களில் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
    • ஐந்து கிலோமீட்டருக்கு சோலார் மின் வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி கொல்லப்பட்டி மலை கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பிக்கிலி ஊராட்சி கொல்லப்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயமாக உள்ளது.

    இரவு நேரத்தில் காட்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.மேலும் கிராமத்திற்குள்ளும் யானைகள் புகுவதால் இரவு நேரத்தில் வெளிவர முடியாமல் அச்சத்தில் இருந்து வருகிறோம். உயிர் சேதம் ஏற்படுவதற்குள் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாவடிக்கல் முதல் சக்கிலி நத்தம் வரை 5 கிலோமீட்டருக்கு யானைகள் விளைநிலங்களுக்குள்ளும், கிராமத்திற்குள்ளும் வராமல் இருப்பதற்கு குழி வெட்டப்பட்டது. அந்த குழிகளை யானைகள் மண்தள்ளி மூடி கடந்து இரவு நேரங்களில் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    வனத்துறை கிராம மக்களின் பாதுகாப்பு கருதியும், விவசாய பயிர்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்கும் ஐந்து கிலோமீட்டருக்கு சோலார் மின் வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பாலத்தின் அருகில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் அடியோடு தார் சாலையை பெயர்ந்து தண்ணீரில் கலந்து சென்றுவிட்டது.
    • இதனை சீரமைத்து தர வேண்டும என 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே காணி மேடு கிராமம் மண்டகப்பட்டு கிராமம் இடையே தரைப்பாலம் அமைந்துள்ளது. பாலத்தின் அருகில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் அடியோடு தார் சாலையை பெயர்ந்து தண்ணீரில் கலந்து சென்று விட்டது. இதனால் இரு சக்கர வாகனம் மற்றும் லாரிகள் டிராக்டர்கள் நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கடும் அவதி அடைந்து வருகிறார்கள் எனவே இதனை சீரமைத்து தர வேண்டும என 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அபிராமம் பகுதியில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.
    • இழப்பீடு கேட்டு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பச்சேரி, நீர்தாண்டதானம், அச்சங்குளம், விரதக்குளம், உடையநாதபுரம், போத்தநதி, ஏ.புதூர், புல்லந்தை நந்திசேரி, காடனேரி, நரியன், முத்தாதிபுரம் உள்பட 75-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3,750 ஏக்கரில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்துவருகின்றனர்.

    75 நாட்களுக்கு முன்பு அவ்வப்போது மழை பெய்ததால் நெற்பயிர் ஒரளவு வளர தொடங்கியது. இதனால் விவசாயிகள் கூலி வேலைக்கு ஆட்களை வைத்து களை எடுத்தல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பருவமழை போதிய அளவு பெய்யாததால் கண்மாய் ஊருணிகள் வறண்டு தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது.

    இது குறித்து அபிராமம் பகுதி விவசாயிகள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். அபிராமம் பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிருதுமால் நதி மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாமலும் புதர்மண்டியும் கிடக்கிறது. இதனால் பலமுறை வைகையில் தண்ணீர் வந்தும் அபிராமம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.

    கிருதுமால் நதியை தூர்வார ேகாரியும், அக்கிரமிப்புகளை அகற்ற ேகாரியும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் அபிராமம் பகுதி விவசாயிகள் கருகிய நெற்பயிர்களை மாடுகளுக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது

    இதுகுறித்து நீர் தாண்டதானம் விவசாயி தர்மமுனியாண்டி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இந்த பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிருதுமால் நதி தூர்வாரப்படாமல் கருவேல மரங்களால் புதர்மண்டி கிடக்கிறது.

    அதிகாரிகளின் அலட்சியத்தால் தூர்வாரப்படாததால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. விவசாயம் செய்ய கடன் வாங்கி செலவு செய்தோம். மழை இல்லாததால் மேலும் கடனாளியாகும் நிலை உள்ளது. அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் தலையிட்டு பயிர்கடனை தள்ளுபடி செய்வதுடன் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.26 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

    • தென்னங்கன்றுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • அரசம்பட்டியை மையமாக வைத்து, தென்னை ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, இருமத்தூர், பண்ணந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இங்கு தென்னங்கன்றுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இங்கிருந்து ஒவ்வொரு ஆண்டு கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான தென்னங்கன்றுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஒரு தென்னங்கன்று தரத்தைப் பொறுத்து ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தேங்காய் உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சியடைந்ததால், தென்னங்கன்றுகள் விலையும் சரிந்தது. இதனால் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழையால், மீண்டும் விவசாயிகள் பலர் தென்னங்கன்றுகள் நடவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    இது குறித்து அரசம்பட்டியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கூறியதாவது: -

    அரசம்பட்டி பகுதிகளில் காணப்படும் சிறந்த மண்வளம் காரணமாக தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்களும் சுவை நிறைந்து காணப்படும்.

    இதனால் வெளி மாவட்ட, மாநில விவசாயிகள் பலர் நேரடியாக வந்து கன்றுகளை கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டு தேங்காய் விலை வீழ்ச்சியால், தென்னங்கன்றுகள் விலை சரிந்தது. இருப்பினும் `தேங்காய் பூ' விற்பனையால் இழப்பை சமாளித்தோம். ஆனாலும், போதிய அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை.

    தற்போது பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பியும், மண்ணில் ஈரத்தன்மை குறையாமலும் உள்ளதால் விவசாயிகள் பலர் தென்னங்கன்றுகள் நடவு செய்ய மீண்டும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது உயரம், தரத்தை பொறுத்து ஒரு தென்னங்கன்று ரூ.30 முதல் ரூ.50 வரை விலைபோகிறது. நாள்தோறும் குறைந்தது 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும், தென்னையில் நோய் தாக்குதல் உள்ளிட்டவையால் விவசாயிகள் அடிக்கடி இழப்பினை சந்தித்து வருகின்றனர். எனவே, அரசம்பட்டியை மையமாக வைத்து, தென்னை ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • ஏரி பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் குறித்து வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை.
    • பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தவர்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளதால் தேர்தலை ரத்து செய்து மாற்று தேதியில் நடத்த வேண்டும்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் ஏரி நீரை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யும் பணி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிலையில் வருகிற 19ஆம் தேதி சங்க தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவுரிவாக்கம் கொளத்தூர் - குமரசிரலப்பாக்கம் இரண்டு ஏரிகளில் வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் பட்டியலில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த இருவரின் பெயர்கள் தற்போதும் இடம்பெற்றுள்ளதால் இரண்டு ஏரிகளுக்கும் வருகிற 19 ஆம் தேதி தேர்தலை நடத்தாமல் ரத்து செய்து மாற்றுத் தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் எனவும், வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யக்கூடாது எனவும் கூறி மனு அளித்ததாகவும் அதனை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாகவும் தேர்தல் நடத்துவது குறித்து முறையாக அறிவிப்பை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் வெளியிடவில்லை எனவும் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஏரி முழுவதும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் வலை வீசி மீன் பிடிக்க முடியாது என்பதால், ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
    • ஏரியில் இருந்து 5 அடி வரை தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி பஞ்சாயத்தில், 109 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள படேதலாவ் ஏரிக்கு (பெரிய ஏரி) மார்க்கண்டேயன் நதியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இதன் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், 9 ஊராட்சிகளும், பர்கூர் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளில் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால் மார்க்கண்டேய நதியில் நீர்வரத்து முற்றிலும் நின்றதால் படேதலாவ் ஏரியும் வறண்டது. கடந்த, 2019ல் ஆந்திராவில் பெய்த கன மழையால், மார்க்கண்டேயன் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 12 ஆண்டுகளுக்கு பிறகு படேதலாவ் ஏரி நிரம்பியது.

    பின்னர் மழையின்றி ஏரி வறண்ட நிலையில், கடந்த ஆண்டு மார்க்கண்டேயன் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மீண்டும் அக்டோபரில் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த ஏரி நீரை நம்பி ஏரியின் கீழ் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயத்தை துவங்கினர்.

    தற்போது 100 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் பாதி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்தவர்கள் கடந்த ஒரு வாரமாக ஏரியில் இருந்து தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதாலும், ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததாலும், இந்த நீரை நம்பி விவசாயப் பணியை துவக்கினோம். ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்துள்ளவர்கள், ஏரி முழுவதும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் வலை வீசி மீன் பிடிக்க முடியாது என்பதால், ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

    இந்த தண்ணீர் விவசாய நிலங்கள் வழியாக செல்வதால் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏரியில் இருந்து 5 அடி வரை தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது.

    எப்போதாவதுதான் இந்த ஏரி நிரம்பும் நிலையில், தற்போது நிரம்பியுள்ள தண்ணீரையும் மீன் குத்தகைதாரர்கள் திறந்துவிட்டுள்ளதால் தண்ணீர் வீணாகி வருவதோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஏரியில் இருந்த வெளியேறும் தண்ணீரை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி அழியும் நிலையில் உள்ளது.
    • மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வத்திராயிருப்பு, கான்சாபுரம், மம்சாபுரம், ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், தேவதானம், சேத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    30 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த பகுதியில் ஏராளமானோர் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். வீரிய ரகங்கள் உட்பட பல ரகங்கள் பயிரிடப்பட்டு அதிகமாக விளைச்சல் பெற்று கரும்பாலைக்கு கரும்பை அனுப்பி வைத்தனர்.

    கடைசி 3 வருடங்களுக்கு முன்பு அனுப்பிவைத்த கரும்புக்கு ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு பணம் வராத நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் முறையிட்டும் எந்தவித பயனுமில்லாத நிலையில் பேச்சு வார்த்தை மட்டுமே நீடித்து வருகிறது.

    கரும்பு விவசாயிகளுக்கு பணம் கிடைத்த பாடில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டு கரும்பு பதிவும் நிறுத்தப்பட்டது. இந்த ஆலையை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் சிவகங்கை, ஆண்டிபட்டி உள்பட பல்வேறு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பி வைத்து வருகின்றனர்.

    25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். தற்போது சர்க்கரை ஆலை குளறுபடி மற்றும் பணம் வராத நிலை போன்ற வற்றால் மனம் மாறிய கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிடுவதற்கு பதிலாக நெல், வாழை, தென்னை போன்ற பயிர்களுக்கு மாறிவிட்டனர்.

    தற்போது இந்த பகுதியில் மொத்தத்தில் 5 ஆயிரம் ஏக்கர் கரும்பு மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. அதுவும் பாதிக்கு மேல் சொந்த ஆலை அமைத்து வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இன்னும் சிலர் பக்கத்து கரும்பாலை களுக்கு அனுப்பி வைத்து குறைந்த லாபத்தை ஈட்டி வருகின்றனர்.

    மத்திய-மாநில அரசுகள் உடனடியாக இந்த சர்க்கரை ஆலை விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வு காணப்பட்டால் மட்டுமே கரும்பு விவசாயம் இந்த பகுதியில் நடக்கும். இல்லாவிட்டால் கரும்பு விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    • யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டும் வரை கிராம மக்கள் யாரும் யானைகளின் அருகே செல்ல வேண்டாம்
    • யானை வேறு எங்கும் செல்லாமல் ஓரே இடத்தில் நிற்பதால் அப்பகுதியை சுற்றி உள்ள விவசாய தோட்டங்களில் மின்இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியறேிய 2 காட்டு யானைகள் நேற்று தண்டுகாரன அள்ளி ஏரிக்கு வந்தன. பின்னர் மாலை அந்த யானைகள் ஏரியில் இருந்து சென்று மாதம்பட்டி கிராமத்தில் சுற்றிதிரிந்தது.

    இதனை கண்ட கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு வனத்துறையினர் மாதம்பட்டி கிராமத்துக்கு விரைந்து சென்று யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் யானை வேறு எங்கும் செல்லாமல் ஓரே இடத்தில் நிற்பதால் அப்பகுதியை சுற்றி உள்ள விவசாய தோட்டங்களில் மின்இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.

    மேலும் யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டும் வரை கிராம மக்கள் யாரும் யானைகளின் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் 2 காட்டுயாைனைகளையும் விரட்ட விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • 5,000 வாழை மரங்கள் சேதமானது
    • விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தல்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதிவேகமாக சூறைக்காற்று வீசியதில் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தது நாசமானது.

    இதில் குறிப்பாக வேதாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த கேசவன், சேகர், ராஜேந்திரன் உள்பட 5-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டிருந்த சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் பாதியில் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் நாசமடைந்துள்ளது.

    இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுபடுத்தும் வகையில் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகாரிகள் சென்று மணல் மூட்டைகளை வைத்து தடுக்கப்பட்டது.
    • அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கானலட்டி கிராமத்தில் அன்னையப்பன் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 14 ஏக்கர் நிலப்பரபரப்பில் அமைந்துள்ளது.

    கடந்த ஆட்சியில் தூர்வாருவதாக ஏரியை தேர்வு செய்து பின்பு கைவிடப்பட்டது. கடந்த ஆண்டு பருவ மழையில் ஏரி நிரம்பி தாறுமாறாக உடைப்பு எற்பட்டு விளை நிலங்கள் கோழிப்பண்ணைக்குள் மழை நீர்புகுந்தது.

    பின்பு அதிகாரிகள் சென்று மணல் மூட்டைகளை வைத்து தடுக்கப்பட்டது. தற்போது சில நாட்களாக விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது.

    அதனால் அப்பகுதியில் பல கிராம மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு முக்கிய ஏரியாக விளங்கி வருகிறது. தற்போது தூர் வாராமல் சிதலமடைந்து காணப்பட்டது. இதை சீரமைத்து தூர் வார அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் மனு அளித்து வருகின்றனர்.

    இதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • 100 ஏக்கர் நிலங்களின் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதை அகற்றிட வேண்டும்,
    • 300 மீட்டர் தூரம் மரங்கள் அகற்றப்படாததால் சாலை அமைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தின் போது பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், பாப்பி ரெட்டிப்பட்டி தனியார் தொழிற்சாலையில் ஆற்றில் திருட்டுத்தனமாக நீர் எடுத்தது சம்பந்தமாக மனு கொடுத்தும் , சுமார் 40 கோடி ரூபாய் வரை அரசு இழப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தும் ஆடை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்கள்.

    தொடர்ந்து அப்பகுதியில் 100 ஏக்கர் நிலங்களின் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதை அகற்றிட வேண்டும்,

    வனப்பகுதியை ஒட்டி உள்ள நிலங்களில் காட்டெ ருமை புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

    தொடர்ந்து இவ்வாண்டில் இதுவரை நடந்த விவசாயிகள் கூட்டத்தில் 291 மனுக்கள் விவசாயிகளிடம் இருந்து பெறப்பப்பட்டு அதில் பெரும்பாலானவை அதிகாரிகளின் கவனத்திற்கு அனுப்பப்ப ட்டுள்ளதாகவும், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    வள்ளி மதுரை அணைக்கட்டு கட்ட நிலம் கொடுத்தவர்களின் நிலங்கள் 10 வருடங்களாகியும் சப்-டிவிஷன் செய்து தரப்படாமல் உள்ளதால், அப்பகுதி விவசாயிகளுக்கு அரசு நல திட்டங்களான பிரதமரின் உதவி தொகை மற்றும் மானியங்கள் பெறுவதில் சிரமம் உள்ளதாக விவசாயிகள் கூறியதற்கு கோட்டாட்சியர், உடனடியாக நிலம் கொடுத்தவர்களின் பழைய பைல்களை தேடி எடுத்து அதிகாரிகள் அவர்களுக்கு சப்-டிவிஷன் செய்து தர ஏற்பாடு செய்து அறிவுறு த்தினார்.

    நரிப்பள்ளி பகுதியில் கூட்டுறவு வங்கி மூலமாக ஏற்கனவே டிராக்டர், ரொட்டோவெட்டர், கலப்பைகள் உள்ள நிலையில் அவைகள்பயனற்று சேதமடைந்துள்ளது.

    இந்நிலையில் மேலும் புதியதாக இயந்திரங்கள் வந்துள்ளது என்று மேலும் அங்கு கடன்உள்ளிட்ட விவசாயிகளின் மனுக்கள் 2 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்ப டாமல் உள்ளதாக குற்ற ச்சாட்டினர்.

    அதற்கு கூட்டுறவு அதிகாரிகள் கூகையில், நரிப்பள்ளி கூட்டுறவு வங்கி 9 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகவந்த புகாரின் பேரில் ஊழியர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ள்ளனர்.

    இதனால் ஆட்கள் குறைபாடு ஏற்பட்டு கூட்டுறவு வங்கியில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

    இதற்கு கோட்டாட்சியர் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களிலிருந்து அலுவலர்களை பய ன்படுத்தி விவசாயிகளின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    அரூர்-சித்தேரி சாலையில் சுமார் 300 மீட்டர் தூரம் மரங்கள் அகற்றப்படாததால் சாலை அமைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    அதனை உடனடியாக அகற்ற விவசாயிகள் வலியுறுத்திய போது, அதற்கு வனத்துறை சார்பில் 48 புளிய மரங்கள், 4 புங்கன் மரங்கள் இன்னும் 5 மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    வரட்டாறு, வாணியாறு கால்வாய்களை சீரமைத்திட 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை அனுமதிக்க வேண்டும்.

    அதே போன்று ஏரிகளின் அருகில் உள்ள கரை பகுதிகளை தூய்மை ப்படுத்தும் பணிகளும் இவர்களை பயன்படுத்த அனுமதி வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் வட்டாட்சியர்கள் பெருமாள் (அரூர்), சுப்பிரமணி (பாப்பிரெட்டிப்பட்டி), கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இளஞ்செ ழியன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • ஆத்துமேடு பகுதிக்கு மின் வயர் செல்லும் மின் கம்பம் ஒன்று உடைந்து விழுந்தது.
    • முனீஸ்வரன் கோவில் டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு செல்லும் மின் சப்ளை கடந்த சில நாட்களாக தடைபட்டுள்ளது.

    பெரியபாளையம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இருப்பினும், ஒரு சில இடங்களில் மாலை நேரங்களில் மேகமூட்டம் ஏற்பட்டு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    இதனால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டும் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவற்றையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடைவடிக்கை எடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திருவள்ளூரின் மையப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவிலின் வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. அதனை பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அதே இடத்தில் கிரேன் மூலம் நட்டு வைத்தனர்.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மாளந்தூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு பகுதிக்கு மின் வயர் செல்லும் மின் கம்பம் ஒன்று உடைந்து விழுந்தது. அப்பொழுது மின் தடை ஏற்பட்டது.

    இச்சம்பவத்தில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் ஆத்துமேடு பகுதிக்கு செல்லும் மின் வயர்களை துண்டித்து விட்டு மின்சார சப்ளை செய்து விட்டு சென்றனர்.

    இதனால் முனீஸ்வரன் கோவில் டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு செல்லும் மின் சப்ளை கடந்த சில நாட்களாக தடைபட்டுள்ளது. இதனால் பத்துக்கு மேற்பட்ட விவசாயிகளின் மின் மோட்டார்கள் இயக்க முடியாத அவல நிலை நீடித்து வருகிறது.

    தற்போது குருவை சாகுபடிக்கு நாற்றங்கால் காப்பாற்ற தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு மின் கம்பத்தை மாற்றி மின் சப்ளை செய்ய கிராம மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மின்வாரிய துறையின் வாட்ஸ் அப் எண்ணில் விவசாயிகள் புகார் மனு அனுப்பியும் எந்த பயனும் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    ×