search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னையப்பன் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
    X

    அன்னையப்பன் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

    • அதிகாரிகள் சென்று மணல் மூட்டைகளை வைத்து தடுக்கப்பட்டது.
    • அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கானலட்டி கிராமத்தில் அன்னையப்பன் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 14 ஏக்கர் நிலப்பரபரப்பில் அமைந்துள்ளது.

    கடந்த ஆட்சியில் தூர்வாருவதாக ஏரியை தேர்வு செய்து பின்பு கைவிடப்பட்டது. கடந்த ஆண்டு பருவ மழையில் ஏரி நிரம்பி தாறுமாறாக உடைப்பு எற்பட்டு விளை நிலங்கள் கோழிப்பண்ணைக்குள் மழை நீர்புகுந்தது.

    பின்பு அதிகாரிகள் சென்று மணல் மூட்டைகளை வைத்து தடுக்கப்பட்டது. தற்போது சில நாட்களாக விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது.

    அதனால் அப்பகுதியில் பல கிராம மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு முக்கிய ஏரியாக விளங்கி வருகிறது. தற்போது தூர் வாராமல் சிதலமடைந்து காணப்பட்டது. இதை சீரமைத்து தூர் வார அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் மனு அளித்து வருகின்றனர்.

    இதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    Next Story
    ×