search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UNION ELECTION"

    • ஏரி பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் குறித்து வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் முறையான அறிவிப்பை வெளியிடவில்லை.
    • பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தவர்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளதால் தேர்தலை ரத்து செய்து மாற்று தேதியில் நடத்த வேண்டும்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் ஏரி நீரை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யும் பணி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிலையில் வருகிற 19ஆம் தேதி சங்க தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவுரிவாக்கம் கொளத்தூர் - குமரசிரலப்பாக்கம் இரண்டு ஏரிகளில் வருவாய் மற்றும் பொதுப்பணி துறையினர் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஆட்சி மண்டல தொகுதிகளின் உறுப்பினர் பட்டியலில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த இருவரின் பெயர்கள் தற்போதும் இடம்பெற்றுள்ளதால் இரண்டு ஏரிகளுக்கும் வருகிற 19 ஆம் தேதி தேர்தலை நடத்தாமல் ரத்து செய்து மாற்றுத் தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் எனவும், வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யக்கூடாது எனவும் கூறி மனு அளித்ததாகவும் அதனை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாகவும் தேர்தல் நடத்துவது குறித்து முறையாக அறிவிப்பை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் வெளியிடவில்லை எனவும் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஆலங்குடி பணிமனையில் தி.மு.க. தொழிற் சங்க தேர்தல் நடைபெற்றது
    • நான்கு பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதுக்கோட்டை மண்டலம் ஆ லங்குடி கிளையில் நடைபெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தல் ஆலங்குடி பணிமனை நடைபெற்றது. இதில் பொருளாளர் பதவிக்கு கொத்தமங்கலம் நடத்துனர் சந்திரசேகரன் மற்றும் பாரதி போட்டியிட்டனர். சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் அதிகாரியக சுப்பிரமணியன், சத்தியமூர்த்தி, ஐயப்பன், ஆறுமுகம் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் தேர்தல் வெற்றி பெற்றவர்கள் பணிமனை எதிரில் வெடி வெடித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர். முன்னதாக தலைவராக நடத்துனர் செல்வம், துணைத் தலைவராக ஓட்டுநர் சுந்தர்ராஜன். செயலாளராக ஓட்டுநர் கணேசன், துணைச் செயலாளராக செபஸ்தியார் மொத்தம் நான்கு பதவிகளுக்கு ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.

    ×