என் மலர்
நீங்கள் தேடியது "NEET Counseling"
- இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெறுகிறது.
- நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
2025 - 26ம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில் இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெறுகிறது.
நாளை சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்) கலந்தாய்வு மாதவரம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாக நடைபெறுகிறது.
நாளை மறுதினம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக மாதவரத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.
- சுமார் 1.18 லட்சம் மருத்துவ இடங்களுக்கு இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
- முதற்கட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இன்று பதிவு செய்யலாம்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இன்று பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 15% அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) மற்றும் மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உள்ள MBBS, BDS மற்றும் BSc நர்சிங் படிப்புகளில் சேருவதற்கு இந்த கவுன்சிலிங் செயல்முறை நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள 780 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 1.18 லட்சம் மருத்துவ இடங்களுக்கு இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது. இதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 12.36 லட்சம் பேர் கலந்துகொள்கின்றனர்.
- நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
- பாஜக தலைவர்களின் கைகளில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக் ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த மாதம் நீட் தேர்வு முடிவு வெளியானது. அப்போது பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தர வேண்டும் எனவும் ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.
சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட NEET UG கலந்தாய்வின் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நீட் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதை விமர்சித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜக தலைவர்களின் கைகளில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.






