என் மலர்
நீங்கள் தேடியது "Pamban new rail bridge"
- பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் இன்று புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார்.
- சிறிது நேரத்திலேயே பழுது ஏற்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சிறிது நேரத்திலேயே பழுதாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் இன்று புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார்.
ஹைட்ராலிக் முறையில் செயல்படும் இந்தப் ரெயில் பாலம், கப்பல் செல்லும்போது செங்குத்தான நிலையில் 24 கயிறுகளைக் கொண்டு தூக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செங்குத்து பாலத்தை இறக்கும்போது பழுது ஏற்பட்டு பாலம் கோணலாக நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்ப கோளாறால் ஒரு பக்கம் ஏற்றமாகவும், மறுபுறம் இறக்கமாகவும் உள்ளதால், பாலத்தை கீழே இறக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. பழுதை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி பாலத்தை திறந்து வைத்த சிறிது நேரத்திலேயே பழுது ஏற்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- ராமேசுவரம்-தாம்பரம் இடையே இயக்கப்படும் 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' புதிய ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மத்திய பா.ஜ.க. அரசின் கனவுத்திட்டமான பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதனைத் தொடர்ந்து ராமேசுவரம்-தாம்பரம் இடையே இயக்கப்படும் 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' புதிய ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செங்குத்து வடிவிலான தூக்கு பாலத்தை ரிமோட் மூலம் திறந்து வைத்த பிரதமர் மோடி, அதன் வழியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் கடந்து சென்றதை பார்வையிட்டார். நாட்டின் தேசியக்கொடி பறக்க அதில் இருந்த கடற்படை வீரர்கள் பிரதமர் மோடியை பார்த்து சல்யூட் அடித்து வீரவணக்கம் செலுத்தினர். பதிலுக்கு பிரதமர் மோடியும் வணக்கம் செலுத்தி கையசைத்தார்.
சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து பிரதமர் மோடி காரில் புறப்பட்டு ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார்.
- பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா ராம நவமி தினமான இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
- இலங்கை அனுராதபுரம் தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி மண்டபம் ஹெலிபேட் தளத்தை வந்தடைந்தார்.
பாம்பன் பாலத்திற்கு அருகிலேயே புதிய ரெயில் பாலம் கட்டும் பணிக்கு 2019 ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 01.03.2019-ல் பிரதமர் மோடி மூலம் அடிக்கல் நாட்டி, ரூ.545 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கின. இருவழிப் பாதை வசதியுடன் கூடிய ரெயில்வே பாலத்தின் வழியாக கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் பாலத்தின் மையப்பகுதியில் செங்குத்து வடிவிலான தூக்கு பாலமும் நிறுவப்பட்டுள்ளது. தெற்காசியாவில் முதல் செங்குத்து தூக்கு பாலம் இது என்பது குறிப்பி டத்தக்கது. பல்வேறு சவால்களை கடந்து இந்த பாலம் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.
மத்திய பா.ஜ.க. அரசின் கனவுத்திட்டமான பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி நேரில் திறந்துவைப்பதே சிறந்தது என்று கூறப்பட்டது. அதன்படி பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா ராம நவமி தினமான இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு வந்தடைந்தார். இலங்கை அனுராதபுரம் தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி மண்டபம் ஹெலிபேட் தளத்தை வந்தடைந்தார்.
பிரதமர் மோடியை அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அங்கிருந்து, காரில் பிரதமர் மோடி புறப்படுகிறார்.
இதையடுத்து பாலத்தின் மையப்பகுதிக்கு வந்து, அங்கு அமைத்துள்ள மேடையில் இருந்தபடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்துவைத்தார். ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.
புதிய தூக்குப்பாலம் திறக்கப்பட்டு இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், பாலத்தை கடப்பதை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
- கச்சத்தீவை மீட்க ஆவண செய்வார்.
- இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைந்திட ஆவணம் செய்வார்
மதுரை:
ராமேசுவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரெயில் பாலம் மற்றும் கப்பல்கள் கடந்து செல்ல செங்குத்தான தூக்கு பாலம் திறப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை ஆதீனம் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரெயில்வே பாலத்திற்கு பிறகு, தற்போது பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ரெயில்வே பாலம் பெருமைக்குரியது. இலங்கை தமிழர்களுக்கு என பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவித்திருந்தேன். அவை அத்தனையையும் நிறை வேற்றி இருக்கிறார்.
குறிப்பாக தமிழக மீனவர்கள் அத்தனை பேரையும் விடுதலை செய்ய வைத்துள்ளார். அவர்களின் படகுகளை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.
தொடர்ந்து இலங்கை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கும், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். அத்தனைக்கும் பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர். கச்சத்தீவு காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தாரை வார்க்கப்பட்டது. அப்போது துணை நின்றவர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை.
ஆனால் இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என பேசி வருகின்றனர். பிரதமர் கச்சத்தீவை மீட்டு தந்து, இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைந்திட ஆவணம் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
- பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் திறந்து வைத்து ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
- எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து இன்று புறப்பட்டு தமிழ்நாடு வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் திறந்து வைத்து ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், முன்னான் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரிய நிலையில் அனுமதி அளிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச உள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரதரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- ராமேசுவரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை மாலை 5.30 மணிக்கு விரைவு ரெயில் புறப்படுகிறது.
- ராமேசுவரத்தில் இருந்து கோவைக்கு வருகிற 9-ந் தேதி இரவு 7.30 மணிக்கு விரைவு ரெயில் புறப்பட்டு செல்கிறது.
ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலம் ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
முன்னதாக, பாலம் கட்டுமான பணி காரணமாக ராமேசுவரம் செல்ல வேண்டிய ரெயில்கள் மண்டபம் வரையில் மட்டுமே இயக்கப்பட்டது.
இந்த நிலையில், ரெயில் பாலம் இன்று திறக்கப்பட உள்ளதால், மீண்டும் ரெயில்கள் ராமேசுவரம் வரையில் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில், ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு நாளை மதியம் 2.50 மணிக்கு விரைவு ரெயில் புறப்படுகிறது. மறுமார்க்கமாக, திருச்சியில் புறப்படும் விரைவு ரெயில் ராமேசுவரத்துக்கு நாளை பகல் 12.25 மணிக்கு வருகிறது.
அதேபோல், ராமேசுவரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை மாலை 5.30 மணிக்கு விரைவு ரெயில் புறப்படுகிறது. மேலும், கோவையில் புறப்படும் ரெயில் வருகிற 8-ந் தேதி காலை 6.15 மணிக்கு ராமேசுவரத்துக்கு வருகிறது.
ராமேசுவரத்தில் இருந்து கோவைக்கு வருகிற 9-ந் தேதி இரவு 7.30 மணிக்கு விரைவு ரெயில் புறப்பட்டு செல்கிறது. ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயில் நாளை ராமேசுவரத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக மதுரை-ராமேசுவரம் ரெயில் காலை 10.45 மணிக்கு ராமேசுவரம் வந்தடைகிறது. பின்னர், காலை 11.40 மணிக்கு மீண்டும் மதுரை புறப்பட்டு செல்கிறது. இவைகள் உள்பட மொத்தம் 28 ரெயில் சேவைகள் புதிய பாம்பன் பாலம் வழியே ராமேசுவரத்துக்கு இயக்கப்பட உள்ளன.
- பிரதமரை அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள்.
- ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 100 ஆண்டுகளை கடந்து சேவையாற்றிய பழைய ரெயில் பாலத்துக்கு அருகிலேயே இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது. பழைய பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய பாலத்தில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.
பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாக வந்து திறந்து வைக்கிறார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அனுராதபுரம் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் இன்று காலை 10.40 மணி அளவில் புறப்படுகிறார். பகல் 11.40 மணி அளவில் அவர் வரும் ஹெலிகாப்டர், மண்டபம் முகாம் தளத்தில் வந்து இறங்குகிறது. பிரதமரை அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள்.
அங்கிருந்து, காரில் பகல் 12 மணி அளவில் பிரதமர் மோடி புறப்படுகிறார். சற்று நேரத்தில் பாம்பன் ரோடு பாலத்தின் மையப்பகுதிக்கு வந்து, அங்கு அமைத்துள்ள மேடையில் இருந்தபடி புதிய ரெயில் பாலத்தை திறந்துவைத்து, ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.
அப்போது புதிய தூக்குப்பாலம் திறக்கப்பட்டு இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், பாலத்தை கடப்பதை பார்வையிடுகிறார்.
இதை தொடர்ந்து பகல் 12.25 மணி அளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு 12.40 மணி அளவில் ராமேசுவரம் கோவிலுக்கு செல்கிறார்.
பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு 1.30 மணி அளவில் வருகிறார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசுகிறார்.
அங்கிருந்தபடி ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்திற்கு மீண்டும் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரைக்கு புறப்படுகிறார்.
மாலை 4 மணி அளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை பொது போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- பிரதமர் மோடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
- இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் மோடி அங்கிருந்து 6-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபத்தில் வந்து இறங்குகிறார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தையும் மண்டபத்தையும் இணைக்கும் வகையில் புதிய ரெயில் மேம்பாலம் ரூ.545 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்று புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
முன்னதாக ஏப்ரல் 4, 5-ந் தேதிகளில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் மோடி அங்கிருந்து 6-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபத்தில் வந்து இறங்குகிறார். அதனை தொடர்ந்து திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை அழைத்து வருவதற்காக கோவை மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் செல்ல உள்ளன. இதற்காக நேற்று உச்சிப்புளிக்கு வந்த 4 எம். ஐ.17 ஹெலிகாப்டர்கள் இங்கிருந்து இலங்கை காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.
திறப்பு விழா நடைபெறும் ஏப்ரல் 6-ந்தேதி அன்று காட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கை அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு செல்லும். அங்கு காலை 10.40 மணிக்கு பிரதமர் மோடியை அழைத்துக் கொண்டு 11.40 மணிக்கு மண்டபம் முகாம் ஹெலிபேடில் வந்து இறங்கும். இவற்றில் மூன்று ஹெலிகாப்டர் மண்டபத்திற்கும், ஒரு ஹெலிகாப்டர் உச்சிப்புளி கடற்படை தளத்திற்கும் இயக்கப்பட உள்ளன. இதன் ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.
- 6-ந்தேதி பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது.
- ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையிலும் கப்பல் மற்றும் ரெயில்கள் வந்து செல்லும் வகையிலும் கடந்த 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 111 ஆண்டுகள் கடந்த நிலையில் பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் ரெயில்களை இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.
பலமிழந்த பழைய பாலத்தின் உறுதித்தன்மையில் ஏற்பட்ட கேள்விக்குறியால் அதன் அருகிலேயே புதிய ரெயில் பாலம் அமைக்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையே பழைய ரெயில்வே பாலம் தனது ரெயில் சேவைகளை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறுத்திக்கொண்டது.
இதையடுத்து ராமேசுவரத்திற்கு ரெயிலில் வரும் பயணிகள் மண்டபம் வரை ரெயிலில் பயணித்து பின்னர் அங்கிருந்து பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் பாம்பன் ரோடு பாலம் வழியாக ராமேசுவரம் சென்று வருகிறார்கள்.
இதற்கிடையே ரூ.550 கோடி மதிப்பிட்டில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்து உள்ளது. மேலும் புதிய பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் சென்று வரும் வகையில், செங்குத்து வடிவிலான தூக்கு பாலமும் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்தின் வழியாக ரெயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான பல்வேறு கட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதன் தொடர்ச்சியாக வருகிற 6-ந்தேதி ராமநவமியன்று பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய ராமேசுவரத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அக்னி தீர்த்தம் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களும் சேகரிக்கப்பட்டு அது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து அவர் கோவிலில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை மன முருகி வேண்டுகிறார். சுமார் 20 நிமிடங்கள் வரை அவர் கோவில் பிரகாரம் உள்ளிட்டவற்றை சுற்றி வருகிறார்.
பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் புதிய பஸ் நிலையம் அருகே சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம் பகுதிக்கு வருகை தருகிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்துகொண்டு ராமேசுவரம்-தாம்பரம் இடையே இயக்கப்படும் பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்து சிறப்பு ரையாற்றுகிறார். இந்த விழாவில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
இதனைத்தொர்ந்து, அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் தீவிர மடைந்துள்ளது. விழா நடை பெறும் ஆலயம் தங்கும் விடுதி வளாகத்தில் 120 மீட்டர் நீளத்தில் வெயிலை தாங்கி நிற்கும் அளவிற்கு 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி மதுரை வரை தனி விமானத்தில் வருகை தந்து அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்படர் மூலம் மண்டபம் கேம்ப் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வருகை தருகிறார்.
இதன் பின்னர் சாலை மார்க்கமாக பாம்பன் ரோடு பாலத்தில் அமைக்கப்படும் தற்காலிக மேடையில் நின்றவாறு பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதுடன், பாலத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து பாலத்தையும் திறக்கிறார். அப்போது அந்த வழியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் கடந்து செல்வதை சுமார் 12 நிமிடங்கள் மேடையில் இருந்தவாறு பார்த்து ரசிக்க உள்ளார்.

பிரதமர் வருகை தரு வதையொட்டி, கோவையில் இருந்து கொண்டு வரப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் மண்டபம் கேம்ப் ஹெலி காப்டர் இறக்கு தளத்தில் நேற்று மாலை இறக்கி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
இதன் பின்னர் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமானப்படை தளத்திற்கு ஹெலிகாப்டர் சென்றது. இதே போன்று தொடர்ந்து சோதனை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் இருந்து பிர தமரின் பாதுகாப்பு அதிகாரிகள் வருகை தந்து ராமேசுவரம், பாம்பன் பாலம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
- புதிய ரெயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர் ஆகும்.
- செங்குத்தான தூக்குப்பாலம் நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
மண்டபம்:
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் நிலப்பரப்பையும், பாம்பன் தீவையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1914-ம் ஆண்டு ரெயில் பாலம் கட்டப்பட்டது.
நூற்றாண்டுகளை கடந்த இந்த ரெயில் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வந்தன. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து அவ்வப்போது தடைபட்டது.
பாம்பன் தீவில் உள்ள ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் சிரமமடைந்தனர்.
இந்தநிலையில் பழைய பாலத்திற்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்ட ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்காக ரூ.550 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட என்ஜினீயர்கள் மேற்பார்வையில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகலாக இப்பணியில் ஈடுபட்டனர். புதிய ரெயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர் ஆகும்.
கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரம் கொண்ட புதிய ரெயில் பாலத்தை 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இணைப்பு கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய ரெயில் பாலத்தின் நடுவே நவீன வசதியுடன் செங்குத்தான தூக்குப்பாலம் நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப் பட்டுள்ளது.
இந்த தூக்கு பாலத்தை மனித உழைப்பின்றி மோட் டார்கள் மூலம் ஹைட்ராலிக் லிப்ட் வசதியுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. தூக்குப் பாலத்தை 3 நிமிடத்தில் திறந்து 2 நிமிடத்தில் மூட லாம்.
இதே போல் தூக்குப்பா லம் அருகிலேயே ஆப்பரேட்டர் அறை, மின்மாற்றி அறை அமைக்கப்பட்டுள்ளன. 4 வருட தீவிர கட்டுமான பணிக்கு பின் தற்போது பால பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
புதிய ரெயில் பாலத்தின் உறுதி தன்மையை சோதனை செய்யும் வகையில் கடந்த மாதம் சோதனை ரெயில் ஓட்டம் மற்றும் தூக்கு ரெயில் பாலம் வெற்றிகரமாக இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
பாம்பன் புதிய ரெயில் பாலம் அக்டோபர் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ற வாறு தற்போது பாலப்பணிகள் முடிவடைந்துள்ளதால் அதற்கான திறப்பு விழா குறித்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தென்னக ரெயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஷ்தவா நேற்று புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், மண்ணின் மைந்தருமான அப்துல்கலாம் பிறந்தநாளான அக்டோபர் 15-ந்தேதி பிரதமர் மோடி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்துவைத்து நாட்டுக்கு அர்பணிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கான விழா பாம்பனில் நடைபெற உள்ளது. மேடை அமைக்கும் இடம், ஹெலிகாப்டர் நிறுத்துவதற்கான ஹெலிபேடு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்னக ரெயில்வே மேலாளர் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் கூறுகையில், வரலாறு சிறப்பு வாய்ந்த புதிய பாம்பன் ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க பாம்பன் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும் பிரதமர் விழாவில் பங்கேற்றால் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த மாதம் இறுதிக்குள் புதிய ரெயில் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.
- தூக்குப்பாலம், ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது.
- பாலத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள், மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் 2 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி பூபதி ராஜூ சீனிவாச சர்மா வந்தார். அவர் டிராலியில் சென்று, பாலத்தை பார்வையிட்டு மையப்பகுதிக்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தை திறந்து மூட கட்டப்பட்டுள்ள ஆபரேட்டர் அறை, அங்குள்ள தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார்.
பின்னர் தூக்குப்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் மூலமாக உயரே சென்று தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதற்காக அமைக்கப்பட்ட சாதனங்களையும் பார்வையிட்டார். அப்போது ஆய்வுக்காக தூக்குப்பாலம், ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலத்தை ஆய்வு செய்தார்.
பாலத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள், மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர். பின்னர் அங்கிருந்து டிராலி மூலம் புறப்பட்டு பாம்பன் வந்தார். தொடர்ந்து ராமேசுவரம் சென்றார். புதிய ரெயில் பாலத்தில் ஒரு சில குளறுபடிகள் உள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கை அளித்திருந்த நிலையில், மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி, ஆய்வு செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
- ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன.
- அடுத்த மாதம் இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. புதிய ரெயில் பால பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்தபோது, சிலவற்றை சரிசெய்ய தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதற்கான பணிகளும் நடைபெற்று முடிவடைந்தன.
இந்தநிலையில், நேற்று மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா, பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார். மண்டபத்தில் இருந்து டிராலி மூலம் வந்த அவர், பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தபடி மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்திற்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள லிப்ட் மூலமாக மேலே சென்று தூக்கு பாலத்தின் தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார். பின்னர் ஆய்வுக்காக தூக்குப்பாலம் ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. மீண்டும் தூக்குப்பாலம் இறக்கப்பட்ட பின்னர் தூக்குப்பாலம் கீழே ஒன்றுசேரும் இடத்தையும் ரெயில்வே கோட்ட மேலாளர் பார்வையிட்டார்.
ஆய்வுக்கு பிறகு கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா கூறியதாவது:-
ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன. தற்போது புதிய ரெயில் பாலம் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், புதிய ரெயில் பாலத்தை விரைவில் ஆய்வு செய்ய உள்ளார். அதன் பிறகு ரெயில் பாலம் திறப்பு விழா தேதி குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த மாதம் இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.






