என் மலர்
நீங்கள் தேடியது "கடல் சீற்றம்"
- 'டிட்வா' புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
- பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.
'டிட்வா' புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
வடக்கு-வடமேற்கில் நகர்ந்து நவம்பர் 30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக ராமேஸ்வரம் நோக்கி வந்த ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, சென்னை, மதுரையில் இருந்து வந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகின் நங்கூரம் அறுந்து சேரன் கோட்டை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது.
பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் படகுகள் சேதம் அடைவதால் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று வரை திருச்செந்தூர் கடல் இயல்பு நிலையை விட சற்று கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது.
- கடும் சீற்றத்துடன் சுமார் 10 அடி தூரம் வெளியே வந்து செல்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு வருவதும் இயல்பாக உள்ளது. இந்த நாட்களில் கடல் சுமார் 50அடியில் இருந்து 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படும் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரியும். ஆனால் கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று வரை திருச்செந்தூர் கடல் இயல்பு நிலையை விட சற்று கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் குறைவான பக்தர்களே புனித நீராடுகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று 4-வது நாளாக சீற்றம் காணப்பட்டது.
கடும் சீற்றத்துடன் சுமார் 10 அடி தூரம் வெளியே வந்து செல்கிறது. இதனால் பக்தர்கள் தயங்கியவாறு புனித நீராடி வருகின்றனர் இதனால் எப்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் நேரத்தில் கடல் அலைகள் சீற்றத்தால் குறைவான பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.
- மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவிப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும் மாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதையடுத்து குமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாக கடற்கரை கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீனவர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்ற தகவல் பங்கு தந்தைகள் மற்றும் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் மூலமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவிப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் நாட்டுப் படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும் மாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று கடல் சீற்றமாகவும் காணப்பட்டது. ராட்சத அலைகள் வேகமாக எழும்பியது. கடற்கரை ஒட்டியுள்ள தடுப்புச் சுவர்கள் மீது வேகமாக மோதி சென்றது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது இதனால் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டிவனம், வானூர், மற்றும் கோட்டக்குப்பம் ஆரோவில்,ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. குறிப்பாக மரக்காணம், கோட்டக்குப்பம், கூனி மேடு, மஞ்சக்குப்பம் பொம்மையார்பாளையம் ஆரோவில், ஆகிய பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் ஆரோவில் கடற்கரைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரையில் குளிக்க காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கடலோர கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
புதுச்சேரி:
வங்கக்கடலில் ஏற்பட்டு ள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருவதால், கடலோர கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடல் 3வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால், காரைக்காலிலி ருந்து மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால், பெரு ம்பாலுமான விசைப்ப டகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக கட்டிவைக்கப்பட்டுள்ளது. பைபர் படகுகள் காரை க்கால் அரசலாற்றின் கரையோ ரமும், மீனவ கிராம ங்களிலும் பாதுக்கா ப்பாக நிறுத்தி வைக்க ப்பட்டு ள்ளது. 3 -வது நாளாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க ப்பட்டுள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விழுப்புரம் மாவட்டம 19 கிராம மீனவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
- அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம்:
மரக்காணம் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்தினால் மணல் திட்டு 5 மீட்டர் கரைந்து சென்றது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளையும் பைபர் படகு போன்றவை கரையில் நிறுத்தி வைக்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அழகன்குப்பம், கைப்பாணிகுப்பம், எக்கியார் குப்பம், அனுமந்தை குப்பம், கூனிமேடு குப்பம், ரங்கநாதபுரம் குப்பம் போன்ற மீனவ கிராமங்களில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது
கடந்த 30 ஆண்டு பிறகு தற்போது கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் அதிகம் உள்ளது. இதனால் கடலோரப் பகுதியில் வசிக்கும் விழுப்புரம் மாவட்டம 19 கிராம மீனவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே துறை சார்ந்த அதிகாரிகள இப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்து அதற்கான உதவிகளை செய்ய அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
- மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர்.
கடலூர்:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் கடலில் பலத்த காற்று மற்றும் சீற்றத்துடன் காணப்படும். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் மீன் வரத்து மிக மிக குறைந்த காரணத்தினால் மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதன் காரணமாக இன்று காலையில் இருந்து மீன்கள் வாங்குவதற்கு பொது மக்கள் இல்லாததால் வெறி ச்சோடி காணப்பட்டது. மேலும் குறைந்த அளவு இருந்த மீன்களும் சரியான முறையில் விற்பனையாகாததால் மீன் வியாபாரிகள் சோக த்துடன் காணப்பட்டனர். மேலும் மீன்வரத்து குறைவானதால் தற்போது இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சென்று தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காண முடிந்தது.
- மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
- திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், துறைமுக பகுதி மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கடலூர், நவ.20-
வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. எனவே கடலில் 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். கடலின் சீற்றம் அதிகம் இருக்கும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை மற்றும் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இன்று காலையிலும் தாழங்குடா, தேவனா ம்பட்டினம் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.
எனவே மீனவர்கள் கடற்கரையில் நிறுத்தியிருந்த படகுகளை டிராக்டர் மூலம் இழுத்து மேடான பகுதிக்கு கொன்டு சென்றனர். தொடர்ந்து கடல் சீற்றம் நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே இருப்பதால் கடலோர கிராம மீனவர்கள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர். தேவனாம்பட்டினம் கடற்கரையில் வழக்கத்தைவிட கடல் சீற்றம் அதிகம் உள்ளது. எனவே போலீசார் அங்கு ரோந்து சென்று கடலில் யாரும் குளிக்கவேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிப்பு விடுத்து வருகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடலூரில் உள்ள திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், துறைமுகபகுதி மீன் மார்க்கெட்டுகள் வெறி ச்சோடி காணப்பட்டது.
- நாட்டுப்படகு மூழ்கியதன் காரணமாக ரங்கநாதன் கடலில் மூழ்கி இறந்தார்.
- மீனவர்கள் மரக்காணம் போலீஸ் நிலையம் மீன்வளத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வசவன் குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50). இவர் இன்று அதிகாலை வழக்கம்போல் தனதுக்கு சொந்தமான நாட்டுப்படையில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவரது நாட்டு படகு கடலில் மூழ்கியது. இதனைப்பார்த்த அருகில் இருந்த சக மீனவர்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அவரது நாட்டுப்படகு மூழ்கியின் காரணமாக ரங்கநாதனும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் உடல் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மரக்காணம் போலீஸ் நிலையம் மீன்வளத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:
வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் முடிவு அடைந்த நிலையில் தமிழ கத்தில் பல்வேறு இடங்க ளில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்நிலை யில் தற்போது வட தமிழக வங்க கடலில் நாளை காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். இந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வங்காள விரிகுடா பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த வங்காள விரிகுடா பகுதியில்19 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விசைப்படகு பைபர் படகு உள்ளிட்ட படகுகளில் இந்த பகுதியில் உள்ள கடலில் மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை உருவாக உள்ள நிலையில் மரக்காணம் பகுதிகளில் காலை முதலே கடல் சீற்றமாக காணப்படுகிறது. மேலும் அதிகாலையிலே வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து விட்டு விட்டு தூரல் மழை பெய்து வருகிறது.
கடல் சீற்றமாக கொந்தளி ப்புடன் காணப்படுவதால் இந்த பகுதியில் உள்ள அனைத்து மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் தங்களது படகுகளை கடற்கரை ஓரம் மேடான பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக சில நாட்களாக கனமழை கொட்டியதால் இந்த பகுதி யில் உள்ள உப்பளத்தில் உப்பு உற்பத்தி நடை பெறாமல் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளது குறிப்பிட த்தக்கதாகும். இந்த மழை யால் மீனவர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர்.
விழுப்புரம்:
மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மணிலா, தர்பூசணி போன்ற விவசாய பயிர்களை நடுவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோல் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத் துறை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மரக்காணம் பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், மீன்பிடி வலைகள் போன்ற மீன்பிடி உபகரணங்களை கடற்கரை ஓரத்தில் இருந்து பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் இன்று முதல் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து குறையும். இதனால் மீன் விலை அதிகரிக்கும் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.
- மாண்டஸ் புயல் காரணமாக எழுந்த பல அடி உயர அலைகள் இன்று காலை இந்த மீனவ கிராமத்திற்குள் புகுந்தது.
- கடல் கொந்தளிப்பால் நாகை மாவட்டம் நாகூர் அருகே மீனவ கிராமமான பட்டினச்சேரியில் கடல் நீர் உள்ளே வந்தது.
தரங்கம்பாடி:
மாண்டஸ் புயலால் தமிழக பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் பல அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் கடலோர வசிக்கும் மீனவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் சந்திரபாடி மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமம் தமிழக எல்லைக்கும், புதுக்சேரி மாநிலம் காரைக்கால் எல்லைக்கும் நடுவே உள்ள பகுதியாகும்.
இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக எழுந்த பல அடி உயர அலைகள் இன்று காலை இந்த மீனவ கிராமத்திற்குள் புகுந்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் தாரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் விரைந்து சென்று அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக வெளியேற்றி வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து உள்ளனர்.
சீர்காழி அடுத்த தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
மழை நீர் வெளியேறாத நிலையில் இன்று காலை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல் நீர் தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் நீர் வெளியேற முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களை மீட்டு பாதுகாப்பாக தொடுவாய் அரசு பள்ளி மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடல் கொந்தளிப்பால் நாகை மாவட்டம் நாகூர் அருகே மீனவ கிராமமான பட்டினச்சேரியில் கடல் நீர் உள்ளே வந்தது.
இதனால் அங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.






