என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் 20 இடங்களில் வாகன சோதனை : ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 அபராதம்
- நெல்லை மாநகர பகுதி களில் போக்குவரத்து விதி முறைகளை தீவிரமாக கண்காணிக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
- இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதி களில் விபத்துகளை குறைக்க வும், போக்குவரத்து விதி முறைகளை தீவிரமாகவும் கண்காணிக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
அபராதம்
அதன்பேரில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை கண்காணிக்கும் பொருட்டு மாநகரின் பல்வேறு இடங்களிலும் போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி விதிமு றைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றார். இதனைப்பார்த்த போலீசார் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அந்த வாலிபரை மடக்கி பிடித்து ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
20 இடங்களில் வாகன சோதனை
இந்நிலையில் விடுமுறை நாளான இன்று மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.பழையபேட்டை சோதனை சாவடி, வழுக்கோடை முக்கு, நயினார்குளம் குளக்கரை சாலை, டவுன் ஆர்ச் பகுதி, ஈரடுக்கு மேம்பால கீழ்பகுதி, சந்திப்பு, வண்ணார்பேட்டை, புறவழிச்சாலை, பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தப் பட்டது.
அப்போது ஏராளமான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமலும், காரில் சென்றவர்கள் சீட் பெல்ட் அணியாமலும் சென்றதை போலீசார் பார்த்தனர். உடனே அவர்களை பிடித்து அவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதமாக விதித்தனர்.
வண்ணார்பேட்டையில் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்